Monday, December 28, 2020

தென்னிந்தியர்களிடம் பேசும்போது

 ///// தென்னிந்தியர்களிடம் பேசும்போது ஒரே ஒரு தமிழ்/கன்னட/தெலுங்கு/மலையாளச் சொல்லைக்கூடக் கேட்டதில்லை, முழுக் கவனத்துடன் ஆங்கிலத்தில்மட்டும்தான் பேசுவார்கள்////

என்னுடைய வேலையின் ஒரு பகுதியாக, மாதந்தோறும் பலரை நேர்காணல் (Interview) செய்கிறேன். அதில் கவனித்த ஒரு விநோதமான புள்ளிவிவரம்: ஒரு மணி நேர இன்டர்வ்யூவில் ஒரே ஒருமுறையேனும் 'டீக் ஹைன்?' (சரிதானே?) அல்லது 'அச்சா!' (நல்லது) அல்லது 'மத்லப்' (அதாவது) என்ற சொற்களைப் பயன்படுத்தாத ஒரு வட இந்தியரைக்கூட நான் பார்த்ததில்லை. பிரமாதமாக ஆங்கிலம் பேசுகிறவர்களிடம்கூடத் தங்களையும் அறியாமல் இந்தச் சொற்கள் ஒரு கணத்தில் வந்து விழுந்தே தீரும் என்பது என்னுடைய தனிப்பட்ட அனுபவம்.
மாறாக, தென்னிந்தியர்களிடம் பேசும்போது ஒரே ஒரு தமிழ்/கன்னட/தெலுங்கு/மலையாளச் சொல்லைக்கூடக் கேட்டதில்லை, முழுக் கவனத்துடன் ஆங்கிலத்தில்மட்டும்தான் பேசுவார்கள்.
பின்குறிப்பு: இதைக் குறை/நிறையாகச் சொல்லவில்லை; தாய்மொழியில் மனம் ஊன்றுதல் நல்ல விஷயம்தான்; ஒரு கவனிப்பாகமட்டுமே இதைப் பதிவு செய்கிறேன்.

18.12.2020 முகநூல் பதிவு

No comments: