Saturday, December 26, 2020

உயிரிழப்புகள் குறித்து உண்மையறிய மக்களுக்கு உரிமை உள்ளது..

 

மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார்
உயிரிழப்புகள் குறித்து உண்மையறிய மக்களுக்கு உரிமை உள்ளது..
----------------------------------------------------------------------------------------
அமெரிக்காவே திணறி திக்குமுக்காடுகிறது என்று கடந்த 5 மாதங்களாக கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். பெருந்தொற்று என்ற சொல்லாடலெல்லாம் சரிதான். ஆனால் நாடு முழுக்க மக்கள் மருததுவமனையில் இறந்துபோகிறார்கள். பலர் தங்கள் நெருங்கிய உறவை இழந்து தவித்துவருகிறார்கள்.
இந்நிலையில் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் உயிரிழந்த மக்களுக்கு சிகிச்சை அளித்த விவரங்களையும் சிகிச்சை முறையையும் தணிக்கை செய்ய (audit ) ஒரு தனிக்குழு அமைக்கப்பட வேண்டும்.
அந்தக் குழுவில் உயிரிழந்தவரின் உறவினர், சமூக ஆர்வலர்களாய் இருக்கும் மருத்துவர் பொது மக்களின் பிரதிநிதிகளில் ஒருவர் நிச்சயம் இடம் பெறவேண்டும். இறப்புகள் எதனால் நடக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளும் உரிமையும் அதிகாரமும் மக்களுக்கு நிச்சயம் உண்டு

No comments: