Thursday, September 21, 2023

கல்வியில் எதிர்நோக்கியுள்ள புதிய பிரச்சனைகள் : 2015

 

முருகப்பன்
9894207407
31.08.15
 

 

தமிழகத்தை  எதிர்நோக்கியுள்ள புதிய பிரச்சனைகள்

தேர்வில் தேர்ச்சி, சேர்கையில் காலியிடம், கிடைக்காத வேலைககள் அதிகரிக்கும் அபாயங்கள்…

 

ஆணும், பெண்ணும் சேர்ந்து படிப்பதால் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு :

கல்வி நிலையங்களில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து படித்தால் சரியாக படிக்கமாட்டார்கள் என்ற ஒரு காரணத்திலும் ஆண், பெண்ணுக்கு தனித்தனியாக பள்ளி, கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. சமீப இரு ஆண்டுகளாக இருபாலர் படிக்கும் பள்ளிகளை சில தனியார் நிறுவனங்கள் பெண்களுக்கு மட்டுமென மாற்றியும் வந்தனர். விசாரித்தபோது ‘’சில ஆண்டுகளாக பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குள் உருவாகும் காதல், அதனால் எழும் சிக்கல்கள், அது மேலும் பிரச்சனையாகாமல் சமாளிப்பது, பள்ளிக்கான அவப்பெயர் போன்ற காரணங்களால் எதற்கு தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கவேண்டும்’’ என்பதான காரணத்தை அறியமுடிந்தது. இந்நிலையில் அரசு மேற்கொண்ட ஒரு ஆய்வில் ஆணும், பெண்ணும் சேர்ந்து பயில்கின்ற பள்ளிகளில் தேர்ச்சி விகிதங்கள் அதிகமாக உள்ளதாக வெளியிட்டுள்ளது.

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் எண்ணிக்கை 2012 இல் 358, 2013 இல் 453, 2014 இல் 887 ஆக உயர்ந்தபடியுள்ளது. இதேபோன்று +2 தேர்வில் 100% தேர்ச்சி பள்ளிகள் 2013 இல் 42, 2014 இல் 113 பள்ளிகளாக அதிகரித்துள்ளன. இந்நிலையில் மார்ச் 2016 இல் 10-ஆம் வகுப்பு எழுதவுள்ள அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதற்காக 26,530 ஆசிரியர்களுக்கு 6 கோடியே 44 லட்சம் 21 ஆயிரத்து அறுநூறு ரூயாய் செலவழித்து பல்வேறு பய்றிசிகள மேற்கொண்டு வருகின்றது.

 

உயரும் மாணவர் எண்ணிக்கைகள்

 

            2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு பல்வேறு புயல்களை கிளப்பி வருகின்ற நிலையில் மாணவர் எண்ணிக்கையும் அதிவேகமாக அதிகரித்து வருகின்றது. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 22 கோடியே 9 லட்சமாக இருந்த மாணவர்க் எண்ணிக்கை பத்தாண்டுகளில் மிக மிக அதிகாம உயர்ந்து 2011  மக்கள் தொகை கணக்கெடுப்பில் 31 கோடியே 9 லட்சமாக உயர்ந்துள்ளது. இது 38% உயர்ந்துள்ளதைக் காட்டுகின்றது. இப்படி மாணவர் எண்ணிக்கையும், தேர்ச்சி விகிதமும் அதிகரித்துக்கொண்டே போகின்ற நிலையில் உயர்கல்வியில் சேர்க்கையில் காலியிடங்களும் அதிகரித்துக்கொண்டே போகின்றன.

 

மாணவர் சேர்க்கை காலியிடங்கள்

 

பொறியியல் : "தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரிகள் 10, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் 3, சுயநிதி பொறியியல் கல்லூரிகள் 546, அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள் 18 ஆக மொத்தம் 577 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் உள்ள 2,92,042 இடங்களில், 1,67,082 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதுபோக 1,25,160 இடங்கள் காலியாக உள்ளன”’ என்று சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் அறிவித்துள்ளார்.

 

மருத்துவம் : தமிழகத்தில் மாநில ஒதுக்கீட்டின்படி 21 அரசு மருத்துவக்கல்லூரிகளில் 2,237 இடங்களும், தனியர் மருத்துவக்கல்லூரிக்கான 738 இடங்களும் கலந்தாய்வில் நிரப்பட்டுள்து.  அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 383 இடங்களில் 60 இடங்களில் மாணவர்கள் சேர முன்வராமல் காலியாக உள்ளது.

 

சட்டம் : பாடத்திட்டம், படிப்புக் கால ஆண்டு, வயது போன்றவைகள் காரணமாக பல்வேறு குழப்பங்களுடன் தாமதமாக விண்ணப்பங்கள் கொடுத்து, கலந்தாய்விற்கு முன்பு நீதி மன்றத் தலையீட்டு சேர்க்கைகள் நடைபெற்றுள்ளது.

 

பி.எட் : தேசிய ஆசிரியர் கல்வியியல் கல்விக் கவுன்சில் (என்.சி.டி.இ.) வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்படி  இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. தமிழகத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.  இந்நிலையில் தற்போதைய 2015-16  கல்வியாண்டில் படிப்பு ஓராண்டா அல்லது இரண்டு ஆண்டுகளா என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது. அதனால் விண்ணப்பம் அளிக்காமல் தாமதிக்கப்பட்டு வந்த நிலையில் 8 ஆயிரம் விண்ணப்பங்கங்கள் அச்சடிக்கப்படு செப்டம்பர் 3 முதல் 11 வரை விநியோகிக்க உள்ளதாகவும், 4-வது கலந்தாய்வு நடத்துவது என்றும், படிப்பு காலம் ஓராண்டா இரண்டு ஆண்டா என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

 

3 லட்சம் வேலை காலிப் பணியிடன்கள்

 

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் ஊட்டியில் அளித்த பேட்டியொன்றில் தமிழ்நாட்டின் அனைத்து அரசுத் துறைகளிலும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சில துறைகளில் தலித் மற்றும் பழங்குடியினர் பிரிவிற்கான காலியிடங்களை நிரப்பக்கோரிய பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

 

வேலை இல்லாதோர் எண்ணிக்கை :

மிழகம் முழுவதும் சூன் 30 ஆம் தேதி நிலவரப்படி வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்துவிட்டு 40.78 லட்சம் பெண்கள் உட்பட மொத்தம் 82.02 லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பதாக வேலை வாய்ப்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இதில், பிற்படுத்தப்பட்டோர் - 34.40 லட்சம்; மிக பிற்படுத்தப்பட்டோர் - 18.90 லட்சம்; ஆதிதிராவிடர் - 18.32 லட்சம்; பழங்குடியினர் - 34,024 பேர் இடம் பெற்றுள்ளனர். மேலும் சிறப்பு பிரிவின் கீழ், பர்மாவில் இருந்து தாயகம் திரும்பியோர் - 1,089; இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோர் - 2,416; மாற்றுத்திறனாளிகள் - 1,05,770 பேரும் உள்ளனர்.

இப்படி வேலைக்காக காத்திருக்கின்ற 82 லட்சம் பேரில் பட்டதாரிகள் - 14.3 லட்சம்; முதுநிலை பட்டதாரிகள் - 6.09 லட்சம் பேரும், மருத்துவர்கள் 28 ஆயிரம் பேரும், பொறியல் முடித்தவர்கள் 3.17 லட்சம் பேரும் உள்ளனர்.

இந்நிலையில்தான் எந்த கல்வித்தகுதியும் இல்லாதோரும், தங்களுடைய பிறப்புச் சான்று, ரேசன் அட்டை நகல் மூலம் வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்ய முடியும் என்றும் ஆனால் வேலை கிடைக்கும் என உறுதி கூற முடியாது என்றும் வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

            இவ்வாறு கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் பல்வேறு சிக்கல்களையும், குழப்பங்களையும் எதிர்நோக்கியுள்ள தமிழக அரசு இதற்கான எந்தவொரு புதிய திட்டங்களோ அல்லது இதுகுறித்து விவாதிப்பதற்கோ, பேசுவதற்கோ கூட முன்முயற்சி எடுக்குமா எனத் தெரியவில்லை. தமிழக அரசு மட்டுமே தேர்தல் ஜூரம் பிடித்துவிட்ட நிலையில் இனி எந்தவொரு கட்சிகளும் இவைகளை கருத்தில்கொள்ளாது. ஏதேனும் பொது நல அமைப்புகள் பேசி எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தால் சில கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இவை ஒரு கோரிக்கையாக இடம் பெற வாய்ப்புள்ளது.

 

 

 

 

மாநிலக் கல்விக் கொள்கை

பள்ளி உள்ளிட்ட அனைத்துவகை கல்வி நிறுவனங்களிலும் சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் இருக்கக்கூடாது.

·  பள்ளிகளில் வகுப்பறை, மைதானம், கழிவறை போன்றவைகளை தூய்மை செய்யும்  பணிகளில் தலித் குழந்தைகளை  ஈடுபடுத்தக் கூடாது.

2.     அங்கன்வாடி மையங்களில் தலித் குழந்தைகளை தனியாக தூங்க வைப்பது நிறுத்தப்படவேண்டும்.

3.     மேற்கு மண்டலங்களில் குறிப்பாக அருந்ததியர் குடும்பங்களில் நிலவும் வறுமை, அறியாமை போன்ற காரணங்களால் அருந்ததியர் குடும்ப குழந்தைகளில் இடைநிற்றல், குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைத் திருமணங்கள் நிகழ்கின்றன.

·       பாடத்திட்டங்களிலும், பள்ளிகளிலும் இதுதொடர்பான விழிப்புணர்வு கருத்துகளை இருக்கவேண்டும்.

·       இப்பகுதிகளில் இதுகுறித்து பள்ளிகளில் அதிகம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள தனித் திட்டம் வகுக்கப்படவேண்டும்.

4.     ஆதிதிராவிடக் குழந்தைகளுக்கான உதவித் தொகைகள் சரியாக சென்றடைவதில்லை.

5.     ஆதிதிராவிட விடுதிகளில் அடிப்படை வசதிகள், உணவு போன்றவைகளில் 10% கவனம் கூட செலுத்தப்படுவதில்லை.

6.     வறுமை, அறியாமை, ஊட்டச் சத்துக் குறைபாடு காரணமாக விடுதியில் உள்ள தலித் மாணவர்களிடம் கல்வி முன்னேற்றம் நிகழ்வதில்லை.

7.     ஆதிதிராவிட நலப்பள்ளிகளிலும் (வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் உள்ளதால்) கட்டிடம், ஆய்வகம், கழிவறை, தண்ணீர், மின்சாரம் போன்ற வசதிகள் இருப்பதில்லை.

8.     தலித் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு பயிற்சிகள் அளிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும்.

9.     தலித் மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் அடிப்படை வசதி மட்டுமில்லாமல் ஆசிரியர் பற்றாக்குறையும் கவனிக்கப்படாமல் உள்ளது. இதனை சரி செய்யவேண்டும்.

10.  கல்வி கற்பிக்கும் தற்போதையில் கரும்பலகைத் திட்டத்திற்கு மாற்று கண்டுபிடிக்கவேண்டும். குறிப்பாக எளிதில் புரியும் வகையில், சிந்தனையை வளர்க்கும் வகையில் பல்வேறு வகையிலான கலைவடிவங்களில் கற்பித்தல் பணி நடைபெற வேண்டும்.

11.  ஆசிரியர்களின் துன்புறுத்தல் கூடாது.

12.  வீட்டுப்பாடங்கள் குறைக்கப்படவேண்டும்.

13.  போதிய பேருந்து வசதிகள் இல்லாமலும் நிறைய தலித் மாணவர்கள் கல்வி இடைநிற்றல் நிகழ்கிறது. பேருந்து வசதிகள் உருவாக்கப்படவேண்டும்.

14.  பள்ளிகளில் விளையாட்டுப் பொருட்களும் இல்லை. பாடவேளையும் இல்லை. பல பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்களும் இல்லை.

15.  இருக்கும் விளையாட்டு ஆசிரியர்களும் போதிய அனுபவம் இன்றி அறிவியல் போன்ற பாடங்களை எடுப்பது தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

16.  விளையாட்டுப் பொருகள், விளையாட்டு ஆசிரியர்களுடன் விளையாட்டுப் பாடவேளைகள் கட்டாயம் அமைக்கப்படவேண்டும்.

17.  ஆசிரியர்களுக்கான வேலைகளை (பேக் தூக்குவது, சாப்பாடு எடுத்து வருவது, தட்டு மற்றும் உணவு பாத்திரங்களை கழுவுவது போன்றவைகள்)  தலித் குழந்தைகள் மீது திணிக்கப்படுவது தடுக்கப்படவேண்டும்.

18.  பல்வேறு கிராமப்புற பள்ளிகளில் சுற்றுச் சுவர் கிடையாது. இதனால் பல்வேறு சிக்கல்கள், இன்னல்கள், இடையூறுகள், ஆபத்துகள் நிகழ்கின்றது. எனவே அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றுச் சுவர் கட்டாயம் அமைக்கப்படவேண்டும்.

19.  உதவித் தொகை பெறும் தலித் குழந்தைகள் பிற குழந்தைகளுக்கு முன்னாள் அவமானம் / இழிவு படுத்தப்பபடுவது தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

20.  சிறுவயதில் புரிதலின்றி பாலியல் சிக்கல்களில் மாட்டிக்கொள்வதை தடுத்து நிறுத்த, புரிதல்கள் ஏற்பட பாலியல் கல்வி அளிக்கப்படவேண்டும்.

21.  சிறுவயதில் நிகழ்வும் குழந்தைத் திருமணங்களால் நிகழ்வு ஆபத்துகள் குறித்து விரிவாக குழந்தைகள் புரிந்துகொள்ள வளரிளம் பருவத்தில் உரிய பயிற்சிகள் அளிக்கவேண்டும்.

22.  இன்னும் கூட அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பெயரில் பல்வேறு வகையிலான பெயரில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

23.  பள்ளி கல்லூரிகளில் தலித் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கப்படவேண்டும்.

24.  கல்லூரி உள்ளிட்ட பட்டப் படிப்புகள் முடித்தபிறகு, தலித் இளைஞர்களுக்கு பெரும்பாலும் வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை. பள்ளி, கல்லூரிகள் நிகழும் சாதிய பாகுபாடுகள் காரணமாக திறன்கள் அறிவது / வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. இதனால், படிக்கும் காலத்திலேயே தலித் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புத் திறன்கள் அளிக்கப்படவேண்டும், வேலைவாய்ப்புகள் குறித்து தகவல்களை அளிக்க்கவேண்டும்.

25.  தலித் மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்களில் நிகழும் சாதியப் பாகுபாடு மற்றும் வன்கொடுமைகளில் இருந்து போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படவேண்டும்.

26.  பள்ளி, கல்லூரி செல்லும் தலித் மாணவர்களுக்கு வழியில் உள்ள பிற ஊர்களிலிருந்து நிகழும் ஆபத்துகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

27.  உயர்கல்வி பயில செல்லும் மாணவர்களுக்கு, உயர் கல்வியில் எடுக்கும் பாடம் மற்றும் அதற்கான வேலை வாய்ப்புகள் குறித்து அறிமுகம் வேண்டும்.

28.  திறன் வகுப்புகள் (Smart Class) அனைத்துக் கிராமங்களிலும் வேண்டும்.

29.  மாணவர்களின் கற்றல் திறனை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிந்துகொள்ளவேண்டும். இதற்காக அதிகாரிகள் காலமுறை இடைவெளியில் (Periodical Visit) ஆய்வு செய்யவேண்டும்.

30.  கற்றல் திறனை உருவாக்காத ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை, குறைந்தபட்சம் விசாரணையாவது மேற்கொள்ளவேண்டும்.

31.  பல்வேறு தடைகளை மீறி கல்வி பயிலும் தலித் பெண் குழந்தைகளுக்கு கூடுதலாக நலத்திட்ட உதவிகள் உருவாக்கபடவேண்டும்.

32.  மேற்கு மண்டலத்தில் அருந்ததியர்கள் அதிகமாக உள்ளதால், கல்வி நிறுவனங்களின்  மாணவர் சேர்க்கையின்போது, அருந்ததியர் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும்.

33.  மேல்நிலைக் கல்வியில் குறிப்பாக 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையின்போது தலித் மாணவர்களுக்கு அறிவியல், கணிதம் உள்ளிட்ட முதன்மையான பாடப்பிரிவுகள் கொடுக்கப்படுவதில்லை. “உங்களுக்கு அறிவியல், கணிதம் வராது” எனக்கூறி ஆசிரியர்கள், பிற தொழில்கல்வி பிரிவுகளில் சேர்த்துவிடுகின்றனர். ஆசிரியர்கள் இந்தப் பார்வை / மனநிலையை மாற்றவேண்டும். மாணவர்கள் சேர்க்கயில் உரிய பிரிவுகள் வழங்கப்படவேண்டும்.

34.  +1 மாணவர் சேர்க்கையின்போது ஒவ்வொரு பாடப் பிரிவிற்கும் தமிழகத்திலுள்ள 69% இடஒதுக்கீடு நடைமுறைபடுத்தப்படவேண்டும். குறிப்பாக தலித் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் பாடப் பிரிவுகள் வழங்கப்படவேண்டும்.

35.  கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு இருக்கும் சாதிய பாகுபாடுகள் நடைமுறைபடுத்தும் நிலை மாற்றப்படவேண்டும்.

36.  அரசு அளிக்கும் கல்வி உதவிப் பொருட்கள், சீருடை, செருப்பு, மிதிவண்டி போன்றவை தரமானதாக இருப்பதில்லை. குறிப்பாக சீருடை, செருப்புகள் கொஞ்சம் மாணவர்களுக்கான அளவில் இருப்பதில்லை. கோடிக்கணக்கில் செல்வு செய்து அவை மாணவர்கள் பயன்படுத்த முடியாத  நிலை தவிர்க்கப்படவேண்டும்.

37.  பாடத்தினை உரிய காலத்தில் முடிக்கவேண்டும் என்ற நெருக்கடி இல்லாமல், புரியும் வகையில் நடத்துவதற்கான வாய்ப்புகள்/நேரம் வழங்கப்படவேண்டும்.

38.  Single Parent குழந்தைகளின் கல்வி நலனில் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும். இதுபோன்ற குழந்தைகள்தான் சமூகத்தை மீறீய குழந்தைகளாக மாறுவதற்கான சிக்கல்களில் போய் மாட்டிக்கொள்கின்றனர்.

39.  ஆசிரியர்கள் சாதி பாகுபாடு காட்டுவது ஒழிக்கப்படவேண்டும்.

40.  மாணவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு தற்காப்புக் கலைகள் கற்றுக்கொடுக்கப்படவேண்டும்.

41.  மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் அளிப்பது நிறுத்தப்படவேண்டும். அதனை பள்ளிகளிலேயே செய்வதற்கேற்ப பாடவேளைகள் மாற்றி அமைக்கப்படவேண்டும்.

42.  மாணவர்களின் வீட்டுச் சூழல், வறுமை உள்ளிட்ட காரணங்களை ஆய்வு செய்து தேவைபடும் குழந்தைகளுக்கு மூன்று வேளை உணவும் வழங்கப்படவேண்டும்.

43.  நவீன தொழில் நுட்பங்களுக்கு ஏற்ப ஆசிரியர்களும் தங்களை அறிவு, திறன், கற்பித்தலில் மேம்படுத்திக்கொள்ளவேண்டும்.

44.  கொரொனா காலத்தில் தொடங்கிய இணைய வழி வகுப்புகளின் காரணமாக மாணவர்களிடம் செல்போன் பழக்கம் அதிகரித்துள்ளது. இது பல்வேறு வகையிலான குற்றம், வரம்பு மீறுதல் மற்றும் சிக்கல்களுக்கும் ஆளாக்கியுள்ளதுடன், விளையாட்டு போன்றவைகளுக்கு அடிமையாகியுள்ளது. செல்போன் என்பது நவீன காலத்தில் தவிர்க்கமுடியாது என்றாலும் கூட பயன்படுத்துவது மற்றும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். கவுன்சிலிங் வசதிகள் செய்யப்படவேண்டும்.

45.  மனித கழிவு அகற்றுதல், பாதாளச் சாக்கடை தூய்மை செய்தல் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் பெருமளவில், பெற்றோர்களைத் தொடர்ந்து அதே பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனை அரசு முற்றிலும் கண்காணித்து, குலத்தொழில் போன்று நிகழ்வும் இதுபோன்றவைகளை தடுத்து நிறுத்தவேண்டும்.