Thursday, September 21, 2023

கல்வியில் எதிர்நோக்கியுள்ள புதிய பிரச்சனைகள் : 2015

 

முருகப்பன்
9894207407
31.08.15
 

 

தமிழகத்தை  எதிர்நோக்கியுள்ள புதிய பிரச்சனைகள்

தேர்வில் தேர்ச்சி, சேர்கையில் காலியிடம், கிடைக்காத வேலைககள் அதிகரிக்கும் அபாயங்கள்…

 

ஆணும், பெண்ணும் சேர்ந்து படிப்பதால் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு :

கல்வி நிலையங்களில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து படித்தால் சரியாக படிக்கமாட்டார்கள் என்ற ஒரு காரணத்திலும் ஆண், பெண்ணுக்கு தனித்தனியாக பள்ளி, கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. சமீப இரு ஆண்டுகளாக இருபாலர் படிக்கும் பள்ளிகளை சில தனியார் நிறுவனங்கள் பெண்களுக்கு மட்டுமென மாற்றியும் வந்தனர். விசாரித்தபோது ‘’சில ஆண்டுகளாக பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குள் உருவாகும் காதல், அதனால் எழும் சிக்கல்கள், அது மேலும் பிரச்சனையாகாமல் சமாளிப்பது, பள்ளிக்கான அவப்பெயர் போன்ற காரணங்களால் எதற்கு தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கவேண்டும்’’ என்பதான காரணத்தை அறியமுடிந்தது. இந்நிலையில் அரசு மேற்கொண்ட ஒரு ஆய்வில் ஆணும், பெண்ணும் சேர்ந்து பயில்கின்ற பள்ளிகளில் தேர்ச்சி விகிதங்கள் அதிகமாக உள்ளதாக வெளியிட்டுள்ளது.

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் எண்ணிக்கை 2012 இல் 358, 2013 இல் 453, 2014 இல் 887 ஆக உயர்ந்தபடியுள்ளது. இதேபோன்று +2 தேர்வில் 100% தேர்ச்சி பள்ளிகள் 2013 இல் 42, 2014 இல் 113 பள்ளிகளாக அதிகரித்துள்ளன. இந்நிலையில் மார்ச் 2016 இல் 10-ஆம் வகுப்பு எழுதவுள்ள அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதற்காக 26,530 ஆசிரியர்களுக்கு 6 கோடியே 44 லட்சம் 21 ஆயிரத்து அறுநூறு ரூயாய் செலவழித்து பல்வேறு பய்றிசிகள மேற்கொண்டு வருகின்றது.

 

உயரும் மாணவர் எண்ணிக்கைகள்

 

            2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு பல்வேறு புயல்களை கிளப்பி வருகின்ற நிலையில் மாணவர் எண்ணிக்கையும் அதிவேகமாக அதிகரித்து வருகின்றது. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 22 கோடியே 9 லட்சமாக இருந்த மாணவர்க் எண்ணிக்கை பத்தாண்டுகளில் மிக மிக அதிகாம உயர்ந்து 2011  மக்கள் தொகை கணக்கெடுப்பில் 31 கோடியே 9 லட்சமாக உயர்ந்துள்ளது. இது 38% உயர்ந்துள்ளதைக் காட்டுகின்றது. இப்படி மாணவர் எண்ணிக்கையும், தேர்ச்சி விகிதமும் அதிகரித்துக்கொண்டே போகின்ற நிலையில் உயர்கல்வியில் சேர்க்கையில் காலியிடங்களும் அதிகரித்துக்கொண்டே போகின்றன.

 

மாணவர் சேர்க்கை காலியிடங்கள்

 

பொறியியல் : "தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரிகள் 10, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் 3, சுயநிதி பொறியியல் கல்லூரிகள் 546, அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள் 18 ஆக மொத்தம் 577 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் உள்ள 2,92,042 இடங்களில், 1,67,082 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதுபோக 1,25,160 இடங்கள் காலியாக உள்ளன”’ என்று சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் அறிவித்துள்ளார்.

 

மருத்துவம் : தமிழகத்தில் மாநில ஒதுக்கீட்டின்படி 21 அரசு மருத்துவக்கல்லூரிகளில் 2,237 இடங்களும், தனியர் மருத்துவக்கல்லூரிக்கான 738 இடங்களும் கலந்தாய்வில் நிரப்பட்டுள்து.  அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 383 இடங்களில் 60 இடங்களில் மாணவர்கள் சேர முன்வராமல் காலியாக உள்ளது.

 

சட்டம் : பாடத்திட்டம், படிப்புக் கால ஆண்டு, வயது போன்றவைகள் காரணமாக பல்வேறு குழப்பங்களுடன் தாமதமாக விண்ணப்பங்கள் கொடுத்து, கலந்தாய்விற்கு முன்பு நீதி மன்றத் தலையீட்டு சேர்க்கைகள் நடைபெற்றுள்ளது.

 

பி.எட் : தேசிய ஆசிரியர் கல்வியியல் கல்விக் கவுன்சில் (என்.சி.டி.இ.) வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்படி  இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. தமிழகத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.  இந்நிலையில் தற்போதைய 2015-16  கல்வியாண்டில் படிப்பு ஓராண்டா அல்லது இரண்டு ஆண்டுகளா என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது. அதனால் விண்ணப்பம் அளிக்காமல் தாமதிக்கப்பட்டு வந்த நிலையில் 8 ஆயிரம் விண்ணப்பங்கங்கள் அச்சடிக்கப்படு செப்டம்பர் 3 முதல் 11 வரை விநியோகிக்க உள்ளதாகவும், 4-வது கலந்தாய்வு நடத்துவது என்றும், படிப்பு காலம் ஓராண்டா இரண்டு ஆண்டா என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

 

3 லட்சம் வேலை காலிப் பணியிடன்கள்

 

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் ஊட்டியில் அளித்த பேட்டியொன்றில் தமிழ்நாட்டின் அனைத்து அரசுத் துறைகளிலும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சில துறைகளில் தலித் மற்றும் பழங்குடியினர் பிரிவிற்கான காலியிடங்களை நிரப்பக்கோரிய பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

 

வேலை இல்லாதோர் எண்ணிக்கை :

மிழகம் முழுவதும் சூன் 30 ஆம் தேதி நிலவரப்படி வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்துவிட்டு 40.78 லட்சம் பெண்கள் உட்பட மொத்தம் 82.02 லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பதாக வேலை வாய்ப்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இதில், பிற்படுத்தப்பட்டோர் - 34.40 லட்சம்; மிக பிற்படுத்தப்பட்டோர் - 18.90 லட்சம்; ஆதிதிராவிடர் - 18.32 லட்சம்; பழங்குடியினர் - 34,024 பேர் இடம் பெற்றுள்ளனர். மேலும் சிறப்பு பிரிவின் கீழ், பர்மாவில் இருந்து தாயகம் திரும்பியோர் - 1,089; இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோர் - 2,416; மாற்றுத்திறனாளிகள் - 1,05,770 பேரும் உள்ளனர்.

இப்படி வேலைக்காக காத்திருக்கின்ற 82 லட்சம் பேரில் பட்டதாரிகள் - 14.3 லட்சம்; முதுநிலை பட்டதாரிகள் - 6.09 லட்சம் பேரும், மருத்துவர்கள் 28 ஆயிரம் பேரும், பொறியல் முடித்தவர்கள் 3.17 லட்சம் பேரும் உள்ளனர்.

இந்நிலையில்தான் எந்த கல்வித்தகுதியும் இல்லாதோரும், தங்களுடைய பிறப்புச் சான்று, ரேசன் அட்டை நகல் மூலம் வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்ய முடியும் என்றும் ஆனால் வேலை கிடைக்கும் என உறுதி கூற முடியாது என்றும் வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

            இவ்வாறு கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் பல்வேறு சிக்கல்களையும், குழப்பங்களையும் எதிர்நோக்கியுள்ள தமிழக அரசு இதற்கான எந்தவொரு புதிய திட்டங்களோ அல்லது இதுகுறித்து விவாதிப்பதற்கோ, பேசுவதற்கோ கூட முன்முயற்சி எடுக்குமா எனத் தெரியவில்லை. தமிழக அரசு மட்டுமே தேர்தல் ஜூரம் பிடித்துவிட்ட நிலையில் இனி எந்தவொரு கட்சிகளும் இவைகளை கருத்தில்கொள்ளாது. ஏதேனும் பொது நல அமைப்புகள் பேசி எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தால் சில கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இவை ஒரு கோரிக்கையாக இடம் பெற வாய்ப்புள்ளது.

 

 

 

 

மாநிலக் கல்விக் கொள்கை

பள்ளி உள்ளிட்ட அனைத்துவகை கல்வி நிறுவனங்களிலும் சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் இருக்கக்கூடாது.

·  பள்ளிகளில் வகுப்பறை, மைதானம், கழிவறை போன்றவைகளை தூய்மை செய்யும்  பணிகளில் தலித் குழந்தைகளை  ஈடுபடுத்தக் கூடாது.

2.     அங்கன்வாடி மையங்களில் தலித் குழந்தைகளை தனியாக தூங்க வைப்பது நிறுத்தப்படவேண்டும்.

3.     மேற்கு மண்டலங்களில் குறிப்பாக அருந்ததியர் குடும்பங்களில் நிலவும் வறுமை, அறியாமை போன்ற காரணங்களால் அருந்ததியர் குடும்ப குழந்தைகளில் இடைநிற்றல், குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைத் திருமணங்கள் நிகழ்கின்றன.

·       பாடத்திட்டங்களிலும், பள்ளிகளிலும் இதுதொடர்பான விழிப்புணர்வு கருத்துகளை இருக்கவேண்டும்.

·       இப்பகுதிகளில் இதுகுறித்து பள்ளிகளில் அதிகம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள தனித் திட்டம் வகுக்கப்படவேண்டும்.

4.     ஆதிதிராவிடக் குழந்தைகளுக்கான உதவித் தொகைகள் சரியாக சென்றடைவதில்லை.

5.     ஆதிதிராவிட விடுதிகளில் அடிப்படை வசதிகள், உணவு போன்றவைகளில் 10% கவனம் கூட செலுத்தப்படுவதில்லை.

6.     வறுமை, அறியாமை, ஊட்டச் சத்துக் குறைபாடு காரணமாக விடுதியில் உள்ள தலித் மாணவர்களிடம் கல்வி முன்னேற்றம் நிகழ்வதில்லை.

7.     ஆதிதிராவிட நலப்பள்ளிகளிலும் (வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் உள்ளதால்) கட்டிடம், ஆய்வகம், கழிவறை, தண்ணீர், மின்சாரம் போன்ற வசதிகள் இருப்பதில்லை.

8.     தலித் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு பயிற்சிகள் அளிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும்.

9.     தலித் மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் அடிப்படை வசதி மட்டுமில்லாமல் ஆசிரியர் பற்றாக்குறையும் கவனிக்கப்படாமல் உள்ளது. இதனை சரி செய்யவேண்டும்.

10.  கல்வி கற்பிக்கும் தற்போதையில் கரும்பலகைத் திட்டத்திற்கு மாற்று கண்டுபிடிக்கவேண்டும். குறிப்பாக எளிதில் புரியும் வகையில், சிந்தனையை வளர்க்கும் வகையில் பல்வேறு வகையிலான கலைவடிவங்களில் கற்பித்தல் பணி நடைபெற வேண்டும்.

11.  ஆசிரியர்களின் துன்புறுத்தல் கூடாது.

12.  வீட்டுப்பாடங்கள் குறைக்கப்படவேண்டும்.

13.  போதிய பேருந்து வசதிகள் இல்லாமலும் நிறைய தலித் மாணவர்கள் கல்வி இடைநிற்றல் நிகழ்கிறது. பேருந்து வசதிகள் உருவாக்கப்படவேண்டும்.

14.  பள்ளிகளில் விளையாட்டுப் பொருட்களும் இல்லை. பாடவேளையும் இல்லை. பல பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்களும் இல்லை.

15.  இருக்கும் விளையாட்டு ஆசிரியர்களும் போதிய அனுபவம் இன்றி அறிவியல் போன்ற பாடங்களை எடுப்பது தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

16.  விளையாட்டுப் பொருகள், விளையாட்டு ஆசிரியர்களுடன் விளையாட்டுப் பாடவேளைகள் கட்டாயம் அமைக்கப்படவேண்டும்.

17.  ஆசிரியர்களுக்கான வேலைகளை (பேக் தூக்குவது, சாப்பாடு எடுத்து வருவது, தட்டு மற்றும் உணவு பாத்திரங்களை கழுவுவது போன்றவைகள்)  தலித் குழந்தைகள் மீது திணிக்கப்படுவது தடுக்கப்படவேண்டும்.

18.  பல்வேறு கிராமப்புற பள்ளிகளில் சுற்றுச் சுவர் கிடையாது. இதனால் பல்வேறு சிக்கல்கள், இன்னல்கள், இடையூறுகள், ஆபத்துகள் நிகழ்கின்றது. எனவே அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றுச் சுவர் கட்டாயம் அமைக்கப்படவேண்டும்.

19.  உதவித் தொகை பெறும் தலித் குழந்தைகள் பிற குழந்தைகளுக்கு முன்னாள் அவமானம் / இழிவு படுத்தப்பபடுவது தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

20.  சிறுவயதில் புரிதலின்றி பாலியல் சிக்கல்களில் மாட்டிக்கொள்வதை தடுத்து நிறுத்த, புரிதல்கள் ஏற்பட பாலியல் கல்வி அளிக்கப்படவேண்டும்.

21.  சிறுவயதில் நிகழ்வும் குழந்தைத் திருமணங்களால் நிகழ்வு ஆபத்துகள் குறித்து விரிவாக குழந்தைகள் புரிந்துகொள்ள வளரிளம் பருவத்தில் உரிய பயிற்சிகள் அளிக்கவேண்டும்.

22.  இன்னும் கூட அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பெயரில் பல்வேறு வகையிலான பெயரில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

23.  பள்ளி கல்லூரிகளில் தலித் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கப்படவேண்டும்.

24.  கல்லூரி உள்ளிட்ட பட்டப் படிப்புகள் முடித்தபிறகு, தலித் இளைஞர்களுக்கு பெரும்பாலும் வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை. பள்ளி, கல்லூரிகள் நிகழும் சாதிய பாகுபாடுகள் காரணமாக திறன்கள் அறிவது / வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. இதனால், படிக்கும் காலத்திலேயே தலித் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புத் திறன்கள் அளிக்கப்படவேண்டும், வேலைவாய்ப்புகள் குறித்து தகவல்களை அளிக்க்கவேண்டும்.

25.  தலித் மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்களில் நிகழும் சாதியப் பாகுபாடு மற்றும் வன்கொடுமைகளில் இருந்து போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படவேண்டும்.

26.  பள்ளி, கல்லூரி செல்லும் தலித் மாணவர்களுக்கு வழியில் உள்ள பிற ஊர்களிலிருந்து நிகழும் ஆபத்துகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

27.  உயர்கல்வி பயில செல்லும் மாணவர்களுக்கு, உயர் கல்வியில் எடுக்கும் பாடம் மற்றும் அதற்கான வேலை வாய்ப்புகள் குறித்து அறிமுகம் வேண்டும்.

28.  திறன் வகுப்புகள் (Smart Class) அனைத்துக் கிராமங்களிலும் வேண்டும்.

29.  மாணவர்களின் கற்றல் திறனை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிந்துகொள்ளவேண்டும். இதற்காக அதிகாரிகள் காலமுறை இடைவெளியில் (Periodical Visit) ஆய்வு செய்யவேண்டும்.

30.  கற்றல் திறனை உருவாக்காத ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை, குறைந்தபட்சம் விசாரணையாவது மேற்கொள்ளவேண்டும்.

31.  பல்வேறு தடைகளை மீறி கல்வி பயிலும் தலித் பெண் குழந்தைகளுக்கு கூடுதலாக நலத்திட்ட உதவிகள் உருவாக்கபடவேண்டும்.

32.  மேற்கு மண்டலத்தில் அருந்ததியர்கள் அதிகமாக உள்ளதால், கல்வி நிறுவனங்களின்  மாணவர் சேர்க்கையின்போது, அருந்ததியர் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும்.

33.  மேல்நிலைக் கல்வியில் குறிப்பாக 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையின்போது தலித் மாணவர்களுக்கு அறிவியல், கணிதம் உள்ளிட்ட முதன்மையான பாடப்பிரிவுகள் கொடுக்கப்படுவதில்லை. “உங்களுக்கு அறிவியல், கணிதம் வராது” எனக்கூறி ஆசிரியர்கள், பிற தொழில்கல்வி பிரிவுகளில் சேர்த்துவிடுகின்றனர். ஆசிரியர்கள் இந்தப் பார்வை / மனநிலையை மாற்றவேண்டும். மாணவர்கள் சேர்க்கயில் உரிய பிரிவுகள் வழங்கப்படவேண்டும்.

34.  +1 மாணவர் சேர்க்கையின்போது ஒவ்வொரு பாடப் பிரிவிற்கும் தமிழகத்திலுள்ள 69% இடஒதுக்கீடு நடைமுறைபடுத்தப்படவேண்டும். குறிப்பாக தலித் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் பாடப் பிரிவுகள் வழங்கப்படவேண்டும்.

35.  கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு இருக்கும் சாதிய பாகுபாடுகள் நடைமுறைபடுத்தும் நிலை மாற்றப்படவேண்டும்.

36.  அரசு அளிக்கும் கல்வி உதவிப் பொருட்கள், சீருடை, செருப்பு, மிதிவண்டி போன்றவை தரமானதாக இருப்பதில்லை. குறிப்பாக சீருடை, செருப்புகள் கொஞ்சம் மாணவர்களுக்கான அளவில் இருப்பதில்லை. கோடிக்கணக்கில் செல்வு செய்து அவை மாணவர்கள் பயன்படுத்த முடியாத  நிலை தவிர்க்கப்படவேண்டும்.

37.  பாடத்தினை உரிய காலத்தில் முடிக்கவேண்டும் என்ற நெருக்கடி இல்லாமல், புரியும் வகையில் நடத்துவதற்கான வாய்ப்புகள்/நேரம் வழங்கப்படவேண்டும்.

38.  Single Parent குழந்தைகளின் கல்வி நலனில் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும். இதுபோன்ற குழந்தைகள்தான் சமூகத்தை மீறீய குழந்தைகளாக மாறுவதற்கான சிக்கல்களில் போய் மாட்டிக்கொள்கின்றனர்.

39.  ஆசிரியர்கள் சாதி பாகுபாடு காட்டுவது ஒழிக்கப்படவேண்டும்.

40.  மாணவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு தற்காப்புக் கலைகள் கற்றுக்கொடுக்கப்படவேண்டும்.

41.  மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் அளிப்பது நிறுத்தப்படவேண்டும். அதனை பள்ளிகளிலேயே செய்வதற்கேற்ப பாடவேளைகள் மாற்றி அமைக்கப்படவேண்டும்.

42.  மாணவர்களின் வீட்டுச் சூழல், வறுமை உள்ளிட்ட காரணங்களை ஆய்வு செய்து தேவைபடும் குழந்தைகளுக்கு மூன்று வேளை உணவும் வழங்கப்படவேண்டும்.

43.  நவீன தொழில் நுட்பங்களுக்கு ஏற்ப ஆசிரியர்களும் தங்களை அறிவு, திறன், கற்பித்தலில் மேம்படுத்திக்கொள்ளவேண்டும்.

44.  கொரொனா காலத்தில் தொடங்கிய இணைய வழி வகுப்புகளின் காரணமாக மாணவர்களிடம் செல்போன் பழக்கம் அதிகரித்துள்ளது. இது பல்வேறு வகையிலான குற்றம், வரம்பு மீறுதல் மற்றும் சிக்கல்களுக்கும் ஆளாக்கியுள்ளதுடன், விளையாட்டு போன்றவைகளுக்கு அடிமையாகியுள்ளது. செல்போன் என்பது நவீன காலத்தில் தவிர்க்கமுடியாது என்றாலும் கூட பயன்படுத்துவது மற்றும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். கவுன்சிலிங் வசதிகள் செய்யப்படவேண்டும்.

45.  மனித கழிவு அகற்றுதல், பாதாளச் சாக்கடை தூய்மை செய்தல் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் பெருமளவில், பெற்றோர்களைத் தொடர்ந்து அதே பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனை அரசு முற்றிலும் கண்காணித்து, குலத்தொழில் போன்று நிகழ்வும் இதுபோன்றவைகளை தடுத்து நிறுத்தவேண்டும்.

 


பேராசிரியர் பிரபா கல்விமணி 
இரா.முருகப்பன், 
திண்டிவனம். 


மாநில கல்விக் கொள்கை -  பரிந்துரைகள்


1.ஆரம்பக் கல்வி முதல் ஆராய்சிக் கல்வி வரை அனைத்தும் தமிழில் வழங்கப்படவேண்டும். 

2.10 மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி சோதனை முயற்சியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு  தொடங்கப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி மட்டுமே உள்ளது. இது அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனை பெரிதும் பாதிக்கின்றது. 

எனவே, தொடக்கக் கல்வியில் தமிழ் வழியில் கல்வி கற்பிக்கப்படவேண்டும். தமிழ்வழிக் கல்வி இல்லாத அரசுப் பள்ளிகள் தமிழகத்தில் இருக்கக்கூடாது. 

3.தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் தமிழ்வழியில் ஒரு வகுப்பேனும் தொடங்கப்படவேண்டும். (பொறியியல் கல்லூரிகளில் சிவில் பிரிவில் தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளது போன்று) குறைந்தபட்சம் செவிலியர் போன்ற மருத்துவம் சார்ந்த இதர படிப்புகளை அந்தந்த மருத்துவக் கல்லூரிகளில் ஒருபிரிவு தமிழில் தொடங்கப்படவேண்டும். 

4.1 முதல் 8 – ஆம் வகுப்பு வரை தற்போது முப்பருவக் கல்வி முறை நடைமுறையில் உள்ளது. 9 ஆம் வகுப்பு முதல் முழு ஆண்டுத் தேர்வு முறை என்பது மாணவர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. எனவே, 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு இரு பருவத் தேர்வு (செமஸ்டர்) முறையினை நடைமுறை படுத்த வேண்டும்.  

5. உயர்கல்வி சேர்க்கைக்கு மேல்நிலை கல்வியில் +1 மற்றும் +2 ஆகிய இரண்டு தேர்வின் மதிப்பெண்களையும் எடுத்துக்கொள்வது மட்டுமே சரியான தீர்வாக இருக்கும். இதுதான் உயர்கல்விக்கு தேவையான நல்ல அடித்தளத்தை அமைத்துக்கொடுக்கும். 

6.மேலும், உயர்கல்வி சேர்க்கையின்போது +1, +2 வில் பெற்ற மொத்த மதிப்பெண்களுடன், உயர்கல்வியின் பிரிவுக்கேற்ற குறிப்பிட்ட பாடங்களின் மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். 

7.மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வியிலும், கிராமப்புற மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும். 

8.தமிழகத்தில் 1978 ஆம் ஆண்டு மேல்நிலைக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதே, மேல்நிலைக் கல்வி முதலாம் ஆண்டு சேர்க்கையில் (+1) இட ஒதுக்கீடு பின்பற்றப்படவேண்டும்” என அரசு ஆணை வெளியிடப்பட்டது. (அரசு ஆணை எண் 587, நாள் 27.03.1975, அரசு ஆணை எண் 42, நாள் 12.01.1994,  கல்வித் துறை) இதனடிப்படையில் 11-வது மாணவர் சேர்க்கையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும், எஸ்.சி 18%, எஸ்.டி 1%, மி.பி.வ 20%, பி.வ 30% என மொத்தம் 69%. இதனை அனைத்துவகை மேல்நிலைப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். 

9.உயர்கல்வியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விகித்தாசர ஒதுக்கீடு வழங்கவேண்டும். 

நீதிபதி கலையரசன் குழு பரிந்துரை என்பது 10% விழுக்காட்டிற்கும் குறையாமல் ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதுதான், அதாவது 10% மேல் 20%, 30% என்று கூட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கலாம். ஆனால், கடந்த ஆட்சியில் வழங்கியது 7.5% மட்டுமே ஆகும். இப்போதைய ஆட்சியும் 7.5% ஐ அதிகரிக்கவில்லை. 

ஆனால் அதை பிற தொழில் கல்விக்கும் விரிவு படுத்தியுள்ளது. இதனை வரவேற்கும் அதே சமயத்தில் 40% ஆக உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% தான்  என்பது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். எனவே, விகிதாசார பகிர்வு முறையை கணக்கில் கொண்டு, அதாவது +2 பொதுத்தேர்வில் பள்ளிகள் அடிப்படையில் விகிதாச்சார பகிர்வு அளிக்கலாம். 

தன்படி
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு - 40 %
அ.உ பெறும் பள்ளி மாணவர்கள் - 24.15 %
பதின்மப் பள்ளி மாணவர்களுக்கு - 30.66 %
ஆங்கிலோ இந்தியன் மற்றும் 
ஓரியண்டல் பள்ளி மாணவர்களுக்கு - 0.52 %
சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களுக்கு - 4.67 %
மொத்தம்     - 100 %


இதில் ஒவ்வொரு பிரிவிலும் தமிழக அரசின் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றவேண்டும். மேலும் உயர்கல்வி சேர்க்கைக்கு 11-வது மதிப்பெண்களின் மொத்தத்தையும் கணக்கில் எடுத்துக்க்கொள்வதோடு சம்பந்தப்பட்ட இரண்டு பொதுத்தேர்வுகளிலும் பள்ளிகளில் பயின்று தேர்வு எழுதும் முதல் முயற்சியை (First Attempt) மட்டுமே அனுமதிக்க வேண்டும். 


10.அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்கல்வி நிறுவனங்களில் பழங்குடியினருக்கென்று 1% வழங்கப்படுகின்றது. ஆனால், நடைமுறையில் 20, 40 மாணவர்கள் உள்ள வகுப்புகளுக்கு 1% என்பது 0.2 மற்றும் 0.4 என்று வருவதால் அவ்வகுப்புகளில் பழங்குடியினருக்கு இடம் வழங்கப்படுவதில்லை. பழங்குடியினருக்கு முன்னுரிமை அளித்து பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பிற்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் ஒரு இடம் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். மேலும் பழங்குடியினர் கல்வி நலனுக்கு தனி இயக்குநரகம் ஏற்படுத்தவேண்டும். 

11.வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தற்போதுள்ள 20% இட ஒதுக்கீட்டினை  50% ஆக அதிகரிக்க வேண்டும்.


12.அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு உயர் கல்வியில் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ₹.1000/- அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

இவண், 
பேராசிரியர் பிரபா கல்விமணி 
இரா.முருகப்பன், 
கல்வியாளர்கள், 
திண்டிவனம். 
தொடர்புக்கு – 9442622970 / 9894207407



மாநில கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகள் - SASY

 

03.11.2022

இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் 

மாநில கல்விக் கொள்கைக்கான  

பரிந்துரைகள்

 

மாநில அரசுக்கென தனி கல்விக் கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டுமென்ற தமிழக அரசின் முடிவையும், முயற்சியையும் வரவேற்று, பாராட்டும் மகிழ்ச்சியும் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த மாநிலக் கல்விக் கொள்கை அனைத்துக் குழந்தைகளின் ஆளுமை, தன்னாளுமை மற்றும் பல்வேறு திறன்மளை வலுப்படுத்த பேருதவியாக அமையவேண்டும். இக்கொள்கையினால் மாணவர்கள் இடை நிற்றல் முற்றிலும் ஒழியவேண்டும். தமிழகம் 100 % கல்வி பெற்ற மாநிலமாக உயரவேண்டும்.  ஒடுக்கப்பட்ட குழந்தைகளின் கல்வியினை மறுக்கின்ற தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, எங்களுடைய அமைப்பின் சார்பாக கீழ்கண்ட கருத்துகளை முன் வைக்கின்றோம். 

1. குழந்தைகள் கல்வி கற்றல் தடையின்றி நிகழ் அவரவர் தாய்மொழி வழியில் அமையவேண்டும். இதனைக் இக்கல்வி கொள்கை உறுதி செய்திடவேண்டும்.

 2. ஐ.நா-வின் உடன்படிக்கைகள் 18-வயது வரை குழந்தை என்று வரையறை செய்துள்ளது. எனவே, அனைவருக்கும் இலவய கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 18 வயது வரையுள்ள அனைவருக்கும் இலவசக் கல்வி கிடைக்கும் வகையில், மாநில அரசு தனிச் சட்டம் இயற்றி, அனைவருக்கும் இலவச கல்வி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்.

 3. தொடக்கக் கல்வி, கல்லூரிக் கல்வி மற்றும் ஆராய்சிக் கல்வி வரையிலான அனைத்து வகையிலான கல்வியும் அடிப்படை உரிமையாகவும், அரசின் கடமையாகவும் உறுதிபடுத்திட வேண்டும்.

 4.      உயர்கல்வி, ஆய்வு மற்றும் ஆராய்சிக் கல்விக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்படவேண்டும்.

5. தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களிடையே தீண்டாமை மற்றும் பாகுபாடுகள் நிலவுவதை தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன. நிறம், பிறப்பு, பாலினம், குடியிருப்பு, பொருளாராதாரம் உள்ளிட்ட எந்தவொரு காரணத்தினாலும் எவரிடமும் பாகுபாடுகள் காட்டக்கூடாது என பல்வேறு சட்டங்கள் உள்ளது. குறிப்பாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவுகள் 15, 15(4), 21, 21(A), 39(F), 46 மற்றும் ஐ.நாவின் குழந்தை உரிமைகளுக்கான உடன்படிக்கை போன்றவையாகும்.

எனவே சாதி, மதம், பாலின பாகுபாடுகள் இல்லாத கல்வி நிலையங்கள் உருவாக்கப்படவேண்டும். இதுபோன்றவொரு சமத்துவக் கல்வியை கற்பித்திடும் வகையில் ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். அதற்குரிய வகையில் பாடத்திட்டங்கள் அமைந்திட வேண்டும்.

6.      உருவாக்கப்படும் மாநிலக் கல்விக் கொள்கை வெறும் கொள்கையாக மட்டுமில்லாமல், சட்ட வடிவமாகவும் மாற்றப்படவேண்டும்.

7.      தமிழகத்தில் 1978 ஆம் ஆண்டு மேல்நிலைக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட போது, முதல் ஆண்டு சேர்க்கையில் (+1) இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என அரசு ஆணை வெளியிடப்பட்டது. (அரசு ஆணை எண் 587, நாள் 27.03.1975, அரசு ஆணை எண் 42, நாள் 12.01.1994,  கல்வித் துறை) இதனடிப்படையில் 11-வது மாணவர் சேர்க்கையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும், அரசின் 69%. இட ஒதுக்கீடு முறை அனைத்துவகை மேல்நிலைப் பள்ளிகளிலும் நடைமுறைப் படுத்தப்படவேண்டும்.

8.      +1 மற்றும் +2 ஆகிய இருவகுப்புகளையும் ஜூனிய கல்லூரி என்று வகைப்பாடு செய்து, இரு பருவத் தேர்வு (Semester) முறை நடைமுறைப் படுத்தவேண்டும்.  

9.      தமிழகத்திலுள்ள அனைத்துவகை கல்வி நிலையங்களுக்கும், (தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் அனைத்து வகை கல்லூரிகள்) உரிய அடிப்படை வசதிகள் அமைத்துக்கொடுக்கப்படவேண்டும். கட்டடங்களாக வகுப்பறைகள் மட்டுமே உள்ளது. ஆனால் அவை காலமுறையில் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. குறிப்பாக மாணவர்கள் அமர எழுத மேசைகள், தண்ணீர் வசதி, விளக்கு, மின்விசிறி, கழிவறை, நூலகம், படிப்பறை, ஆடிட்டோரியம் மற்றும் திறன் வகைப்பறைகள் (டிஜிட்டல்) உள்ளிட்ட அனைத்தும் தரநிலையில் சிறந்ததாக அமைக்கப்படவேண்டும்.

 10.   பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள், குறிப்பாக தலித், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களின் விடுதிகளுக்கும் முழுமையாக கட்டடம், அனைத்து வகையிலான அடிப்படை வசதிகள் கொண்ட முழு கட்டமைப்புடன் அமைக்கப்படவேண்டும். தரமான உணவு வழங்கப்படவேண்டும். தற்போதைய பொருளாதார நிலையினைக் கருத்தில்கொண்டு உணவு மற்றும் மாணவர்களுக்கான உதவித் தொகையினை உயர்த்தி வழங்கிடவேண்டும். குறிப்பாக மாணவிகள் விடுதிக்கு பாதுகாப்பினை உறுதி செய்திடவேண்டும்.

 11.   பாடத்திட்டம் தாய்மொழி வழியில் இருபதுடன், அரசின் இருமொழிக் கொள்கை தொடரவேண்டும். மேலும் 8-ஆம் வகுப்பு வரையிலான அனைவரும் தேர்ச்சி என்ற நடைமுறை தொடரவேண்டும்.

 12.   பாடத்திட்டங்களில் புராண, இதிகாசங்கள் மற்றும் தற்போதைய சூழலில் நடைமுறையில் இல்லாத பழங்கால செய்யுட் பகுதிகள் தவிர்க்கப்படவேண்டும். சமகால வரலாறுகளும், தலைவர்கள் பற்றிய குறிப்புகளும் இடம்பெற வேண்டும். குறிப்பாக திராவிட, அம்பேத்கர் இயக்கத் தலைவர்களின் வரலாறுகள் பாடப்புத்தகங்களில் இடம்பெறவேண்டும். அம்பேத்கர், பெரியார், அயோத்திதாசர், இரட்டைமலை சீனுவாசன், அண்ணா, கலைஞர் ஆகியோரின் பாடங்கள் இணைக்கப்படவேண்டும்.

13. பள்ளிகளில் விளையாட்டிற்கு கூடுதல் கவனமும், முக்கியத்துவமும் அளிக்கப்படவேண்டும். மாணவர்களின் விளையாட்டுத் திறன் மேம்பட அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டுத் திடல் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்படவேண்டும். ஆர்வமுள்ள மாணவர்களின் திறன்களை கண்டறிந்து அவர்களுக்கு கூடுதல் பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். குறிப்பாக அனைத்துவகையான உள்ள கட்டமைப்பு வசதிகளுடன் வட்டத் தலைநகரங்களின் விளையாட்டுத் திடல் மற்றும் உள்ளரங்கு விளையாட்டு மைதானம் அமைக்கப்படவேண்டும். வட்டந்தோறும் பயிற்சியாளர்கள் நியமிக்கப்படவேண்டும்.

14.   அரசுப் பள்ளிகளுக்கான திட்டங்கள் அனைத்தும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் வழங்கப்படவேண்டும். குறிப்பாக உயர்கல்வி சேர்க்கை, மாணவிகளுக்கான உதவித் தொகை, தமிழ் வழியில் படித்தோருக்கான வேலை வாய்ப்பு போன்ற அனைத்திலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுவது போன்று, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படவேண்டும். 

15.   தமிழகத்தில் அரசின் நிதியுதவின்றி சுமார் 20 தாய்த்தமிழ்ப் பள்ளிகள் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன. இப்பள்ளிகளுக்கான ஏற்பிசைவினை அரசு எளிமைப்படுத்தவேண்டும். மேலும், பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சுமார் 22 வகையான கல்வி உதவிகளும் வழங்கப்படவேண்டும். மதிய உணவும் வழங்கிடவேண்டும். வாடகை கட்டங்களில் இயங்கி இப்பள்ளிகளுக்கு சொந்த இடம் மற்றும் கட்டங்களை அரசு முன்வந்து செய்திடவேண்டும். மேலும், இப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் வழங்கப்படவேண்டும். இந்தத் தாய்த்தமிழ்ப் பள்ளிகளை சிறப்பு நிலையாகக் கருதி அரசு இப்பள்ளிகளுக்கான உதவிகளை செய்திடவேண்டும்.

இவண்,

வே.அ.இரமேஷ்நாதன்,

           இயக்குநர்,

இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் – SASY.

   பேச : 9560028068

மலக்குழி மரணங்கள் தடுத்து நிறுத்தப்படவேண்டும்

 07.01.2023

 

·       மலக்குழி மரணங்கள் தடுத்து நிறுத்தப்படவேண்டும் – கழிவகற்றும் பணி முற்றிலும் இயந்திரமயமாக்கப்படவேண்டும்.

·       மனித கழிவுகளை அகற்ற பணியமர்த்தல் தடை, மறுவாழ்விற்கான சட்டம் மற்றும் விதிகள் 2013 சரியாக அமுல்படுத்தப்படவேண்டும்.

 பத்திரிகைச் செய்தி

 அண்மையில் தமிழக முதல்வர் அவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இந்த நிலையில், நாடு முழுவதும் தூய்மைப் பணி என்ற பெயரில் குப்பைகள் அள்ளுவது; மலம் அள்ளுவது; சாக்கடை அள்ளுவது; கழிவு நீர் கால்வாயில் அடைப்பு நீக்குவது, கழிவு நீர் தொட்டி கழிவு அகற்றுவது; உள்ளே இறங்கி கழிவுகளை அள்ளுவது; அடைப்புகளை நீக்குவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படும் பலர் மரணமடைவது அதிகரித்து வருகின்றது.

இப்பணிகளில் பெரும்பாலும் தலித் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதிலும் 95% தலித் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் 2016–2020 ஆண்டில் கழிவு நீர் / மலக்கழிவு அகற்றும் பணிகளில் ஈடுபட்ட 55 பேர் இறந்துள்ளனர். அதிலும் கடந்த 2022 ஆம் ஆண்டில் 8 மாதத்தில் 15-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

இதுபோன்ற மரணங்களைத் தடுக்கவும், நாகரீக சமூகத்தில் மனித மலத்தை மனிதர்கள் கையால் அள்ளுவதை தடைசெய்யதும் “மனிதக் கழிவுகளை அகற்ற பணியமர்த்தல் தடை மற்றும் மறுவாழ்விற்கான சட்டம் 2013” கொண்டுவரப்பட்டது.

இச்சட்டத்தை நடைமுறைபடுத்தவேண்டிய ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநாகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்களும், பொறுப்புடைய காவல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் இச்சட்டத்தினை நடைமுறைபடுத்தாமல் அலட்சியப்படுத்தி, புறக்கணிப்பதின் காரணமாக மலக்குழு மரணங்கள் தொடர்கின்றன.

இந்நிலையில்தான், இச்சட்டம் தமிழகத்தில் எந்த அளவிற்கு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது என்பது குறித்த ஆய்வினை மேற்கொண்டோம். இந்த ஆய்வு அறிக்கையினையும், இச்சட்டக் கையேட்டினையும் 07-01-2023 இன்று வெளியிட்டோம்.  

இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையத்தின் இயக்குநர் டாக்டர் வே.அ.இரமேஷ்நாதன் அவர்கள் இந்த ஆய்வின் நோக்கம் மற்றும் அறிக்கையின் விவரம் குறித்து உரையாற்றினார். சஃபாய்கரம்சோரி அந்தோலன் அமைப்பின் தேசிய இணை அமைப்பாளர் தீப்தி சுகுமார் தலைமையில் நடைபெற்றது. ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் இரா.அதியமான், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவர் திரு புனிதபாண்டியன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் திரு எஸ்.எஸ்.பாலாஜி, விட்னஸ் திரைப்பட இயக்குநர் திரு தீபக், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் சாமுவேல்ராஜ் ஆகியோர் ஆய்வு அறிக்கையினை வெளியிட்டு கருத்துரையாற்றினார்கள். இந்த ஆய்வினை மேற்கொண்ட பேராசிரியர் எஸ்.கல்யாணி அவர்கள், ஆய்வு குறித்து விளக்கமளித்தார். இரா.முருகப்பன் வரவேற்புரையாற்றினார்.

பிற்பகலில் இந்த ஆய்வு அறிக்கையின் முடிவுகளையும், இச்சட்டத்தையும் முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல் கருத்தரங்கம் நிகழ்வும் நடைபெற்றது.

இந்நிகழ்வினை இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் எனும் மனித உரிமை அமைப்பின் ஒருங்கிணைப்பில், சஃபாய் கரம்சாரி அந்தோலன் – புதுடெல்லி, ஆரோக்கியகம்-ஆண்டிபட்டி, அருந்ததியர் சமூக நீதி கூட்டமைப்பு-தமிழ்நாடு, சி.சி.ஆர்.டி சென்னை, ஹோப் புதுச்சேரி, மனித வள மேம்பாட்டு மையம்-செங்கல்பட்டு, லா டிரஸ்ட்-நாகைப்பட்டிணம், மக்கள் கண்காணிப்பகம்-மதுரை, சமூக சமத்துவ மையம்-புதுச்சேரி, ரீடு-சத்தியமங்கலம்,  சமூக கண்காணிப்பகம்-சென்னை, தமிழ்நாடு ஆதிஅருந்தியர் மகா சபை-சென்னை, தோழமை-சென்னை, விழுதுகள்-அவிநாசி, சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம் விசிக-சென்னை ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தின.

கடந்த ஓராண்டில் (ஆகஸ்ட் 2021 முதல் நவம்பர் 2022 வரை) தமிழகத்தில் கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கி இறந்த நிகழ்வுகள், பள்ளிகளில் அருந்ததியர் குழந்தைகளை கழிவறை தூய்மைப் பணியில் ஈடுபடுத்தியது மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மீதான வன்கொடுமைகள் உள்ளிட்ட 21 சம்பவங்களை நேரடியாக கள ஆய்வு செய்த எமது இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம், இச்சம்பவங்களில் இச்சட்டம் எந்த அளவிற்கு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது என்பதையும் ஆய்வு செய்தது.

 சாதிய அடிப்படையில், குலத்தொழில் போன்று தலித் மக்கள் ஈடுபடுத்தப்படும் இத்தொழிலை ஒழித்து, முற்றிலும் இயந்திரமயமாக்கவேண்டும், காலங்காலமாக இதில் ஈடுபடுத்தப்பட்ட வரும் அருந்தியர் சமூக மக்களை இதிலிருந்து முற்றிலும் விடுவிக்கவேண்டும் என்பதும் ஆய்வின் பரிந்துரையாக வெளிப்பட்டது.

      இந்நிகழ்வில் வெளியான கருத்துகளின் அடிப்படையில் கீழ்கண்ட தீர்மானங்களும் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டது.

 

ஆய்வின் முடிவுகள்.

·       இந்த நவீன உலகில், இந்தியா போன்ற வளரும் நாடுகளில், சமூக அமைப்பில்  சாதி ஆழமாக வேரூன்றியிருப்பதால், தூய்மை மற்றும் கழிவுகள் அகற்றுதல் போன்றவைகள் தலித் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.

·       இச்சட்டத்தை நடைமுறைபடுத்தும் பொறுப்பாளிகான உள்ளாட்சி அரசுகள், காவல் மற்றும் வருவாய்த்துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அனைவரும் இச்சட்டத்தை நடைமுறைபடுத்தாமல் மிகவும்  அலட்சியப்படுத்தி, புறக்கணித்துள்ளனர் என்பதை ஆய்வில் கண்டறியமுடிந்தது

·       தூய்மைப் பணிகளில்  95% பேர் “தலித்துகள்”, அவர்களில் 99% பேர் தலித் பெண்கள். அவர்களில் பெரும்பாலோனர் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஊழியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பணி நிரந்தரம், பணிப்பாதுகாப்பு, நல உதவிகள் போன்ற எதுவுமின்றி, எந்த நேரத்திலும்  வேலை பறிக்கப்படும் என்ற அச்சுறுத்தலுடன் தினசரி ஊதியம் மற்றும் ஒப்பந்த முறைகளின் கீழ் சுரண்டப்படுகின்றனர்.

·       அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், மாநாடு மற்றும் சந்தை, திருவிழா, பொது நிகழ்ச்சிகள், கூட்டங்கள், கண்காட்சிகள், பெரும்பாலான பேருந்து நிலையங்கள் போன்ற பொதுமக்கள் கூடுமிடங்களில் திறந்த வெளியில் மலம் கழித்தல் மட்டுமே நடக்கிறது, இதுபோன்ற திறந்த வெளி கழிப்பிடங்களில் உள்ள மனிதக் கழிவுகளை, தூய்மைப் பணியாளர்கள் வெறுங்கைகளால் அகற்றுகின்றார்கள்.

·       கழிவுநீர் தொட்டி மரணங்கள் சமீப நாட்களில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பெருமளவில் நிகழ்ந்துள்ளன. சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி 58 வகையான பாதுகாப்பு கருவி மற்றும் உபகரணங்கள் எதுவும் இங்கு பின்பற்றப்படவில்லை. எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

·       Safai Karamchari Andolan எனும் தேசிய அமைப்பு செய்த ஆய்வு அறிக்கையின்படி, 2016 முதல் 2020 வரை தமிழ்நாட்டில் 55 பேர் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது இறந்துள்ளனர் மற்றும் குறிப்பாக சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இறப்பு விகிதம் அதிகம்.

·       காவல்துறை அதிகாரிகளின் அலட்சியம்: முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் தாமதம், செய்யாமல் தவிர்ப்பது, உரிய பிரிவுகள் சேர்க்கப்படாதது,  முறையான விசாரணை நடத்தாமலிருப்பது, கைது செய்வதிலும் தாமதம் அல்லது தவிர்ப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை முறையாகச் செய்வதிலும் காவல்துறையின் அலட்சியம் காரணமாக இச்சட்டம் அமுல்படுத்தப்படாமல் தேங்கி நிற்கின்றது.

·       குறிப்பாக எமது இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் நேரடியாக கள ஆய்வு செய்த 21 சம்பவங்களில் 6 சம்பவங்களில் மட்டுமே இச்சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 8 வழக்குகளில் வன்கொடுமை தடுப்புச் சட்டமும், ஒரு வழக்கில் ஜே.ஜே.சட்டமும் பதிவு செய்யப்பட்டுள்ளஹ்டு. 9 வழக்கில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 9 வழக்குகளில் மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேற்படி 21 சம்பவங்களில் 4 சம்பவங்கள் அரசுப் பள்ளிகளில் அருந்ததியர் மாணவர்களை கழிவறை உள்ளிட்டவைகளை தூய்மை செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது தொடர்பானவையாகும்.

·       இதுவரை ஒரு வழக்கில் கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில் 21 இல் 7 வழக்குகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் சமாதானம் ஆகியுள்ளது.

 

பரிந்துரைகள்.

1.    மனித மலத்தை மனிதர் அள்ளுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டத்தை முழுமையாக நடமுறைபடுத்தி, இத்தொழிலை முற்றிலும் ஒழிக்கவேண்டும். முற்றிலும் இயந்திரமயமாக்கி தலித் அருந்ததியர் குடும்பங்கள் இத்தொழில் முறையிலிருந்து விடுவிக்கப்படவேண்டும்.

2.   மனித கழிவுகளை அகற்ற பணியமர்த்தல் தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013 மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் 2016 ஆகிய இரண்டும் சரியாக அமுல்படுத்தப்படவேண்டும். 2013 ஆம் ஆண்டு இச்சட்டம் நடைமுறைக்கு வந்த 9 மாதங்களில் அதாவது 06.09.2014 க்குள் இத்தொழில் முற்றிலும் தடைசெய்து ஒழிப்பது அதிகாரிகள் பொறுப்பு என பிரிவு 17 இல் கூறப்பட்டுள்ளது.

3.   கழிவு அகற்றும் பணியில் ஈடுபடும்போது மொத்தம் 58 வகையான பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்படவேண்டும் என்றும், இதனை உள்ளாட்சி அல்லது முகவர் செய்துகொடுக்கவேண்டும் என்றும் இச்சட்டத்தின் விதி 4 மற்றும் 5 இல் கூறப்பட்டுள்ளது. மேலும் விதி 6 மற்றும் 7 இல் பாதுகாப்பு விதிகள் கூறப்பட்டுள்ளன. இவை எங்குமே பின்பற்றப்படுவதில்லை. இனியேனும் அரசு முழுமையாக இதில் கவனம் செலுத்தவேண்டும். 

4.   தமிழ்நாட்டில் தூய்மைப் பணி புரிவோரின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கென, 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரியம் உருவாக்கப்பட்டது.  உருவாக்கப்பட்ட நோக்கத்திற்கு ஏற்றாற்போல் இந்நலவரியம் செயல்பாடுகள் அமையவில்லை. எனவே, நலவாரியம் முழு வேகத்துடன் செயல்படுவதற்கேற்ற வகையில் திருத்தியமைக்கப்படவேண்டும். காலமுறை உருவாக்கி, தூய்மைப் பணியாளர்களின் நலனில் அக்கறை செய்லுத்தி, மேம்பாட்டினை உருவாக்கவேண்டும். மேலும், இதன் நலன் திட்டம் உள்ளிட்ட செயலாக்கத்தினை தாட்கோ எனும் துறையிடமிருந்து பிரித்து, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையிடம் ஒப்படைக்கவேண்டும்.

5.   தமிழ்நாடு முழுவதும் அனைத்து வகையிலான தூய்மை மற்றும் கழிவுகள் அகற்றும் பணிகளை முற்றிலும் இயந்திரமயமாக்கி மனித மாண்பு காக்கப்படவேண்டும்.  

6.   ஒப்பந்த முறையில் பணி நியமனம் செய்யப்படுவது முற்றிலும் நிறுத்தப்படவேண்டும். தற்போது ஒப்பந்த மற்றும் தற்காலிக ஊழியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படவேண்டும்.  

7.   மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் தற்போதைய காலத்திற்கேற்று வடிவமைக்கபடவேண்டும், அதற்கேற்ற வகையில் நிதி ஒதுக்கீடு தற்போதைய காலச் சூழலுக்கு ஏற்ற வகையில் அதிகரிக்கவேண்டும்.  

8.   தொடர்ந்து பாதுகாப்பற்ற முறையில் தூய்மைப் பணியில் ஈடுபடுவதன் காரணமாக பல்வேறு வகையிலான ஒவ்வாமைக்கு ஆளாகி, சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு வகையிலான உடல் நலக் பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். முறையான பாதுகாப்பு, மருத்துவ வசதி, மருத்து சோதனை, மருத்துவ வசதி, மருத்துவக் காப்பீடு, நோய் தடுப்பு சிகிச்சை, ஊசி போன்றவைகளை அரசு சிறப்புத் திட்டங்கள் மூலம் செயல்படுத்திட வேண்டும்.  

9.   பிற சமூகத்திறகு இணையாக/சமமாக தலித் பழங்குடியின மக்கள் வளரவேண்டும் என்பதற்காவும், அதற்கான சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்காகவும் சிறப்பு உட்கூறு திட்டம் உருவாக்கப்பட்டு, அதற்காக நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், அந்த நிதி தலித் பழங்குடியினருக்கு சென்றடைவதில்லை என பல்வேறு கருத்துகள் வெளிப்படுத்துகின்றன. எனவே, SCP/TSP திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். நிதி முழுவமையாக அவர்களின் நலனுக்கு வழங்கப்படவேண்டும்.

10.  சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தாத பொறுப்பதிகாரிகள் மீது, அரசு தீவிர நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

       .

தொடர்புக்கு :

9894207407, முருகப்பன், ஒருங்கிணைப்பாளர்.

x