Saturday, December 26, 2020

மூன்று பேரும்..

மூன்று பேரும்

ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டதைச் சேர்ந்தவர்கள்.

அதைவிட அதிக ஒற்றுமை

மூன்று பேருமே

எங்களின் அனைத்துப் பணிகளுக்கும் 

ஆதரவாகவும், உதவியாகவும் உள்ளவர்கள்.

இவர்களெல்லாம் இருக்கின்ற நம்பிக்கையில்தான்

தொடர்ந்து செயல்பட முடிகின்றது.

மூன்று பேருமே

தமிழின் மீது தீராத பற்றுகொண்டவர்கள்.

மூன்று பேருமே

பல்வேறு இழப்புகளுக்கிடையே

சோர்வில்லாமல்

சமூகத்திற்கு பங்காற்றி வருபவர்கள்.

மூன்று பேருமே

தாய்த் தமிழ் பள்ளி திண்டிவனம்

பள்ளி வளர்ச்சியில் பெரிதும் அக்கறை கொண்டவர்கள்.

தோழர் சி.துரைக்கண்ணு  Duraikannu Chinnaian

அண்ணன் அறிவுமதி

நண்பர் ஜோதி Jothi Narasimman

மூவருக்கும் இன்று பிறந்த நாள்.

இந்த இனிய நாளில்

மூன்று பேருக்கும்

நெஞ்சம் நிறைந்த

நல்வாழ்த்துகளைத்

தெரிவித்துக்கொள்கிறோம்..

வாழ்க வளமுடன்.. நலமுடன்..

(17.11.2020 முகநூல் பதிவு)

 




 

No comments: