Wednesday, October 20, 2010

ஜாதியை கடந்தவர்கள்




அடுத்த வேளை உணவுக்கு வழி தெரியாமல், பசியில் அழும் குழந்தைக்கு பால் வாங்க வழியில்லாமல், உடுத்தியிருந்த உடைகளுடன் வெளியேறினார்கள் - 2008 இல். இப்போது, இரண்டு பிரியாணி கடைகள்; 10 லட்சம் மதிப்பில் சொந்த மாடி வீடு; ஒரு டி.வி.எஸ். வண்டி; நான்கு பேருக்கு வேலை; இவர்கள் வழிகாட்டுதலில் சென்னையில் ஒரு பிரியாணி கடை. இவையெல்லாம் இந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்தவை. செய்து காட்டியவர்கள் அஞ்சுகம் - கணேசன் தம்பதியினர். இந்த வளர்ச்சிக்காக இவர்கள் இழந்தது ஜாதி அடையாளத்தை. ஆம், இவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். உழைப்பின் தொடக்கத்தில் சில ஆண்டுகள் தொப்பி வைத்துக் கொண்டு முஸ்லிமாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டõர் கணேசன். இந்த வெற்றியும், முன்னேற்றமும் இவர்களுக்கு சாதனையாகத் தெரியவில்லை! பிரச்சனையில்லாமல் நன்றாக வாழ்கிறோம் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.




அஞ்சுகம்

சரியாக 10 வருடத்திற்கு முன்பு விவரம் தெரியாத 3 குழந்தைகளுடன் அடுத்த வேளை சாப்பாட்டிற்கு வழியின்றி, புகுந்த வீட்டை விட்டு வெளியேறினேன். இன்று தினமும் 300 பேருக்கு சாப்பாடு போடும் நிலைக்கு உயர்ந்திருக்கிறோம். 1976 இல் பிறந்த எனக்கு 19 வயதில் திருமணம் நடந்தது. எழுதப்படிக்கத் தெரியாது. சென்னை - ஆவடி, பட்டாபிராமபுரத்தில் கணவர் வீட்டில் கூட்டுக் குடும்பத்தில் இருந்தேன். கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் எல்லா பிரச்சனைகளை நானும் அனுபவித்தேன். கணவரும் வருமானமின்றி வீட்டில் இருந்ததால், அவர்களை நம்பி வாழ வேண்டிய நிலை. ஒரு அளவிற்கு மேல் தாங்க முடியாத நிலையில், திருமணமாகி வாழ்க்கையின் எந்தப் படிநிலையும் புரிந்திராத 6ஆவது வருடம், சரியாக நடக்கத் தெரியாத இரண்டு குழந்தைகளை இழுத்துக் கொண்டும், இடுப்பில் ஒன்றை தூக்கிக் கொண்டும் 3 குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறி, திண்டிவனத்திற்குப் போனேன்.
மிகுந்த சங்கடத்துடன் என்னையும், எனது குழந்தைகளையும் தாங்கிக் கொண்டார் எனது தாயார். உறவினர்களும், உடன் பிறந்தவர்களும் - "அடித்தாலும், உதைத்தாலும் கட்டினவன் வீட்டிலேயே கிடக்க வேண்டியதுதானே' என்றார்கள். கொஞ்சமும் எதிர்பாராமல் அடுத்தநாள் எனது கணவரும் இங்கு வந்து விட்டார். நான் குழந்தையாக இருக்கும்போதே, எனது அப்பா இறந்துவிட்டார். சோறு சமைத்து, கொழம்பு வைத்து, கூடையில் சுமந்து, பஸ் ஸ்டாண்டில் பிடித்து வைத்திருந்த ஒரு இடத்தில் வைத்து விற்பனை செய்து, என்னையும் எனது அண்ணன்கள் இருவரையும் காப்பாற்றினார் எனது தாயார். திண்டிவனத்தில் கிடங்கல் என்கிற பெரிய காலனியில் நாங்கள் வாழ்ந்தோம். கூலிவேலைக்கு செல்லும் எங்கள் காலனியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே எனது தாயாரிடம் சாப்பாடு சாப்பிட்டனர்.
இந்த நிலையில்தான் நாங்கள் திண்டிவனம் வந்தோம். கூடையில் சோறு விற்று எங்களுக்கு சாப்பாடு போட்டார் எனது அம்மா. 2000 வருசத்தில், சென்னையில் இருந்து வந்த மூன்றாவது மாதத்தில், ஏதாவது செய்யணும், இப்படியே இருக்கக்கூடாது என யோசித்தோம். நான் வந்த மறுநாள் இங்கு வந்த என் கணவர், அவரது வீட்டிற்குச் செல்லாமல் எங்களுடனேயே இருந்தார். சைக்கிளில் தெருத்தெருவாக மீன் விற்றுப் பார்த்தார். சரிவரவில்லை. கொத்தனார் வேலைக்கும் சென்று பார்த்தார், கொஞ்ச நாளில் முடியாமல் போனது.
எனது தாயார் கூடையில் வைத்து சாப்பாடு விற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு அருகில், இரண்டு முஸ்லிம்கள் கொட்டகை போட்டு பிரியாணி விற்றுக் கொண்டிருந்தார்கள். இப்போதுள்ளதுபோல் அப்போது பிரியாணி "பேமஸ்' ஆகவில்லை. எனது அம்மாவிடம் பேசினோம். சந்தோஷத்துடன் இடத்தை விட்டுக் கொடுத்தார்கள். ஆயிரம் ரூபாய்க்கு நகையை அடகு வைத்தோம். 2000 ரூபாய் தண்டல் வாங்கினோம். கொட்டகை போட்டோம், பாத்திரங்கள் வாங்கினோம். கறி, அரிசி, காய்கள் வாங்கினோம். மசாலா பொருட்கள் வாங்கிய பின்புதான், எப்படி பிரியாணி செய்வது எனத் தெரியாமல் முழித்தோம். ஒரு பாய் அண்ணனிடம் உதவி கேட்டோம். எங்கள் நிலை அறிந்து, ஒருநாள் உடனிருந்து செய்தபடியே சொல்லிக் கொடுத்தார்கள். கற்றுக் கொண்டோம். கடையில் கொண்டு போய் வைத்தால் எங்கள் காலனி ஜனங்கள் மட்டுமே வந்து சாப்பிட்டார்கள்.
எல்லோரும் வந்து சாப்பிட என்ன செய்வது எனத் தெரியாமல் கொஞ்ச நாட்கள் ஓட்டினோம். ஒரு நாள் வெளியூரில் இருந்து வந்த ஒருவர், "பாய் கடையா?' என்றார். இல்லை என்றதும் போய்விட்டார். எங்களுக்குப் புரிந்தது. மறுநாளே எனது கணவர் இசுலாமியர் போன்று தலையில் வெள்ளை குல்லா அணிந்தார். அதன் பிறகு, வெளியூர் சனங்களும் ஒவ்வொருவராக சாப்பிட வந்தனர். ஒரு நாளைக்கு 10 கிலோ அரிசி போட்ட நாங்கள், சில மாதங்களில் 25 கிலோ அரிசி போட்டோம். நாங்கள் கிடங்கல் என்பதை மறைக்கத் தொடங்கினோம். அருகில் கடை வைத்திருந்த இரண்டு இசுலாமியர்களும், நாங்கள் வாழ வந்திருக்கிறோம் என்பதை அறிந்திருந்ததால், எங்களுக்கு ஆதரவாக இருந்தனர். எனது கணவர் இசுலாமியர் போன்று குல்லா போட்டதை ஏற்றுக் கொண்டனர். நான் கடையில் இருந்தால் நாங்கள் கணவன் - மனைவியாகவே காட்டிக் கொள்ளமாட்டோம். என் கணவர் இசுலாமியர்கள் போடும் குல்லா போட்டிருப்பார். நான் நன்றாக மஞ்சள் தடவி, குங்குமம் வைத்திருப்பேன். அதனால் யாரென்று காட்டிக் கொள்ளாமல் இருந்து விடுவோம்.
வியாபாரம் பெருகியது. குழந்தைகள் நல்ல சாப்பாடு சாப்பிட்டனர். பீஸ்கட்டி பள்ளியில் சேர்த்தோம். எனது தாயாரை வீட்டில் வைத்து கவனித்துக் கொண்டோம். இப்படியே மூன்று ஆண்டுகள் போனது. 2003 ஆம் ஆண்டு கிடங்கலை விட்டு வெளியில் குடியேறலாம் என நினைத்தோம். எல்லா சாதியினரும் வசிக்கின்ற நல்லியக்கோடன் நகர் என்ற பகுதியில் வாடகை வீடு பிடித்தோம். நாங்கள் கிடங்கல் காலனியைச் சேர்ந்தவர்கள் என்பதைச் சொல்லாமல், எனது கணவரைக் காட்டி, சென்னை நாயுடு சாதி என்று கூறினோம். 600 ரூபாய் வாடகையில் வீடு எடுத்து தங்கினோம். அங்கேயே சமைத்து கடைக்கு சாப்பாடு கொடுத்தனுப்பினேன். இதற்கிடையில் வெளியூரைச் சேர்ந்த 15 வயது முஸ்லிம் பையன் வேலைக்கு வந்தான். அவனை முழுமையாக கடையில் நிற்க வைத்தோம். என் கணவரும், நானும் கடைக்குப் போவதை குறைத்தோம். நான் சுத்தமாக நிறுத்தினேன்.
இந்நிலையில் நாங்கள் வாடகைக்கு குடியிருந்த தெருவில் காலியிடம் ஒன்று விற்பது அறிந்து, 55 ஆயிரம் ரூபாயில் வாங்கினோம். அதன்பிறகுதான் நாங்கள் ஆதிதிராவிடர்கள் என்பது, அங்குள்ளவர்களுக்கு தெரிய ஆரம்பித்தது. உடனே தெருவில் உள்ள அனைவரும் பேசுவதை நிறுத்தினர். பார்வையிலேயே எங்களை ஒதுக்கினார்கள். வந்ததிலிருந்து நாங்கள் பழகிய விதத்தையும், உழைத்து சம்பாதித்து இடம் வாங்கியிருப்பதையும், வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களைப் பட்டு வந்துள்ளோம் என்பதையும் திரும்பத் திரும்பச் சொன்னோம். கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலை திரும்பியது. வெளிப்படைக்கு நன்றாகப் பேசினாலும், உள்ளுக்குள் அவர்கள் சாதி பார்ப்பதை எங்களால் உணர முடிந்தது.
உடனடியாக கடன் வாங்கி, சுமார் 3 லட்சம் மதிப்பில் நல்ல மாடி வீடு கட்டினோம். இது நடந்து 6 ஆண்டுகள் ஆகின்றது. தொடர்ந்து ஓய்வில்லாமல், சுவை மாறாமல் சமைத்தபடி இருந்தோம். அரிசிக்கு தகுந்த தண்ணியும், எண்ணெயும் போடும் பக்குவம் தெரிந்தால் பிரியாணி செய்வது ஒன்றுமில்லை. வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர். வீட்டுக் கடனை அடைத்தோம். இப்போது இந்த வீடு சுமார் 10 லட்சத்திற்கு மேல் போகும்.
ஒரு வருடத்திற்கு முன்பு, இந்தியன் பேங்க் அருகில் வாடகை கடை எடுத்தோம். ஒரு லட்சம் அட்வான்ஸ், மாசம் இரண்டாயிரம் வாடகை, ஒரு வருடத்திற்கும் மேலாக இந்தக் கடையும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு கடைக்கு இரண்டு பேர் என இப்போது நாலு பேர் வேலை செய்கிறார்கள். வீட்டில் நானும், எனது அண்ணன் மகளும் பிரியாணி செய்து விடுவோம். பசங்க கடைக்கு எடுத்துக்கிட்டுப் போயிடுவாங்க. எனது கணவர் வெளி வேலைகளுக்குச் சென்று வருகிறார். திருமணமாகிச் சென்றதும் என்னை வேண்டா வெறுப்பாக நடத்திய எனது மாமியார், நாத்தனார் எல்லாம் இப்போது உணர்ந்து, எங்களுடன் நல்ல உறவு வைத்துள்ளார்கள். நாங்கள் கத்துக் கொடுத்து, எனது நாத்தனார் சென்னை ஆவடியில் பிரியாணி கடை வைத்துள்ளார். அவர்களும் இப்போது நல்ல வசதியாக வாழ்கிறார்கள்.



இருபத்தியோராம் நூற்றாண்டு செல்பேசி இல்லை. இரண்டு சக்கர வாகனம் இல்லை. உதவிக்குப் பொருட்களை எடுத்துக் கொடுக்க, வாங்கி வர என ஒருவரும் இல்லை. இப்படி எத்தனையோ "இல்லைகள்'. ஆனால், தளராத நம்பிக்கை; ஓய்வறியா உழைப்பு; விடா முயற்சி இவை மட்டுமே உண்டு. சுமாராக ஒரு நாளைக்கு 200 ரூபாய்க்கு குறையாமல், மாதம் 5 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார் - 44 வயதான, கணவனை இழந்த தலித் பெண் வீரம்மாள், திண்டிவனத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வீடூர் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்.



வீரம்மாள்

கத்துக் கிட்டாதான் வளரமுடியும்கிறத தெரிஞ்சிகிட்டு, வியாபாரத்தின் ஒவ்வொரு படியையும் அனுபவத்தின் வாயிலாகவே கத்துக்கிட்டேன். தினம் தினம் புதிதாக தெரிந்து கொண்டேன். சொல்லிக் கொடுப்பதற்கு யாருமில்லை. எங்கள் ஊரிலேயே தான் என்னை திருமணம் செய்து வைத்தார்கள். அப்போது எனக்கு வயது 15 இருக்கும். குடிபுகுந்த வீட்டில் மாமியார் மட்டும்தான் இருந்தார். எனது கணவனுடன் பிறந்தவர்கள் யாருமில்லை. அவருக்கு கிராம உதவியாளர் வேலை. அவருக்கு தெரிஞ்சது, செஞ்சது எல்லாம் முழு நேரமும் குடிதான். குடி போதை கொஞ்சம் குறைஞ்சா, சூதாட்டத்துக்குப் போயிடுவார். இதற்கு நடுவுல எங்களுக்கு பெண் குழந்தைகள் பொறந்திச்சி. எனது கணவர் ஒருநாள் குடிபோதையிலேயே இறந்துட்டாரு.
என்ன செய்றதுன்ற குழப்பத்தையெல்லாம் தாண்டி, ஏதாவது செய்யணும்கிற உறுதியை ஏற்படுத்தியது. அப்போது எனது மாமியார் ஒரு சில சின்னச் சின்ன பொருட்களை வைத்துக் கொண்டு சிறு கடைபோல ஒன்று வைத்திருந்தார். அவர் இல்லாதப்ப அந்த கடையில இருந்தேன். கொஞ்சமா பொருள் வச்சிருந்தா கொஞ்சம் பேர்கள் வாங்கினாங்க. நிறைய பேர் கடைக்கு வரணும்னா, நிறைய பொருள் வைக்கணும்கிறத கொஞ்ச நாளிலேயே தெரிஞ்சிகிட்டேன். உடனே கடையை பெரிசாக்கினேன். நிறையப் பொருட்களை வாங்கி வச்சேன்.
தனியொரு பொம்பளயா நின்னு, இரு பெண் குழந்தைகளையும் 10 ஆம் வகுப்பு வரை படிக்க வைச்சேன். அதற்குமேல் படிக்கவைச்சா, அதிகம் படிச்ச மாப்பிள்ளை பார்க்க வேண்டுமென நினைச்சேன். இருந்தாலும், எந்த குறையும் இல்லாமல் பெரிய பெண்ணின் திருமணத்தை, இந்த சிறுகடை வருமானத்தை மட்டுமே வச்சி சிறப்பா நல்ல நடத்தினேன். இரண்டாவது பெண்ணுக்கு உள்ளூர் மாப்பிள்ளையை திருமணம் செஞ்சி வச்சேன். இது எல்லாத்துக்கும் கடை வியாபாரம்தான் கை கொடுத்தது. இரண்டு பொம்பள பசங்க, வயசான மாமியார். இவங்களைக் காப்பாற்ற, எனக்கிருந்த தைரியத்துக்கு, திறமைக்கு இந்தக் கடைய நடத்துறதுதான் சரின்னு செய்யத் தொடங்கினேன்.
ஒரு தடவ மாமியார் கூட, டவுன் பஸ்சில் 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள விழுப்புரத்துக்குப் போனேன். அங்கிருந்த ஒரு கடையில் பொருட்கள் வாங்கி வந்தோம். அடுத்த முறையில் இருந்து நானே போவேன். கத்துக் கிட்டாதான் வளரமுடியும்கிறத தெரிஞ்சிக்கிட்டு, வியாபாரத்தின் ஒவ்வொரு படியையும் அனுபவத்தின் வாயிலாகவே கத்துக்கிட்டேன். தினம் தினம் புதிதாக தெரிந்து கொண்டேன்.
என்னோட வீட்டுக்காரர் செத்து, திசைபுரியாம நின்னு, என்னோட பொண்ணுங்கள நினைச்சு நம்ம வாழ்க்கை நம்ம கையிலதான்கிறத புரிஞ்சி, உணர்ந்து ஓட ஆரம்பிச்ச வாழ்க்கை ஓடிக்கிட்டே இருக்கு. நடுவுல வர்ற தடைகள நான் பெரிசா நினைச்சது இல்ல. அதனாலதான் நான் இன்னைக்கு எங்க ஊர்ல மட்டுமில்ல, என்னைத் தெரிஞ்ச சமூகத்தாலயும் மதிக்கப்படற பொம்பளயா வாழ்ந்துட்டு இருக்கேன். பொம்பள குடும்பத்த காப்பாத்த வக்கில்லாம வீணாக்கிட்டான்னு ஆயிடக்கூடாதுன்னு, சீசன் நாட்களில் எந்த பழங்களை எல்லாம் வாங்கிட்டு வந்து விக்க முடியுமோ, அந்தப் பழங்களை எல்லாம் எங்க ஊரிலேயே விப்பேன்.
இதையெல்லாம் என்னோட கடையில வச்சி, எங்க காலனியில விக்க முடியாது. யாரும் வாங்கவும் மாட்டாங்க. அதனால் ஊருக்குள் இருக்கிற பேருந்து நிறுத்தத்தில் போய்த்தான் விற்க வேண்டும். இட்லி கடை முடிந்ததும் சீசன் நேரத்தில் ஊர்த்தெருவில் உள்ள பஸ்ஸ்டாண்டிற்கு கிளம்பிடுவேன். இந்த நிலையில்தான் என்னோட இரண்டாவது பொண்ணுக்கும் திருமணம் ஆச்சி. அதுக் கப்புறம் என்னோட அம்மாவ துணைக்கு கூட அழைச்சிக்கிட்டு வந்து வச்சிக்கிட்டேன். வாழ்க்கையை அதுபோக்குல நான் விடல, என்னோட போக்குக்கு நான் இழுத்துக்கிட்டு வந்திருக்கேன்.
இப்போது நான் ஒவ்வொரு முறையும் 4000 ரூபாயிலிருந்து 5000 ரூபாய் வரை பொருட்கள் வாங்கி வருகிறேன். இப்ப போட்டி வேற வந்துடுச்சி. மாமியார் காலத்தில் வெறும் 2 கடைகள்தான். ஆனால் இப்போது 7 கடைகள். இது எங்கள் காலனியில் மட்டும். ஊருக்குள் 10 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதையெல்லாம் மீறித்தான் வியாபாரம் செய்கிறேன். இட்லி கடையில் 150 லிருந்து 200 ரூபாய் வரும். கடையில் 800லிருந்து 1000 வரை வியாபாரம் ஆகும். எல்லாத்திற்குமான செலவெல்லாம் போக தினமும் 100 ரூபாயிலிருந்து 200 ரூபாய்க்குள் கையில் நிற்கும். இதுதான் எனது சம்பாத்தியம். கடைசி வரைக்கும் இப்படியே இருக்க முடியாது. அப்படி இருக்கணும்னு எனக்கு விருப்பமும் இல்ல. ஊருக்குள்ள இடம் கிடைச்சா, டவுனில் இருக்கிற மாதிரி கண்ணாடி கதவு எல்லாம் வச்சி, லைட்டெல்லாம் போட்டு, 5 ஆள் வைச்சி ஒரு கடை வைக்கணும்.
இன்னக்கி இருக்கிற சுய உதவிக் குழுக்கள்ங்கிற சிந்தனையே இல்லாத 1993 ஆம் ஆண்டிலேயே, மகளிர் மன்றம் மூலம் செயல்பட்டுள்ளேன். அதுக்கப்புறம் "பவ்டா' வந்தாங்க அவங்க மூலமாக நிறைய குழு ஆரம்பிச்சேன். தொடர்ந்து ஊக்குநராக இருக்கேன். விடுமுறைக் கல்விங்கற பயிற்சி முகாமினை மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் எங்க ஊரில் நடத்தியிருக்கேன். இதுமட்டுமில்லாம எங்க காலனியில பெண்களுக்கு கிடைக்க வேண்டிய திருமண உதவித் தொகை, கர்ப்பிணிப் பெண்களுக்கான தொகை, விதவைகளுக்கான நிவாரணத் தொகை, ஆதரவற்றோர்களுக்கான ஓய்வூதியம் போன்ற இதெல்லாம் கூட, என்னால முடிஞ்ச வரைக்கும் அரசு அலுவலகங்களுக்கு அழைத்துச் சென்று வாங்கித் தருகிறேன்.
என்னோட வீட்டுக்காரர் குடிக்கவும், சூதாடவும் சொந்தமாக இருந்த 5 வீட்டையும் விற்றார். ஆதரவு எதுவுமின்றி கடை வியாபாரத்தைத் தொடங்கினேன். அதிகாலை 4.30 மணிக்கு எழுந்தால், இரவு 8.30 மணி வரை உழைச்சேன். 25 ஆயிரம் ரூபாய்க்கு சொந்தமாக ஒரு வீடு வாங்கியிருக்கேன். ஒவ்வொரு பெண்ணிற்கும் 5 பவுன் நகை, வண்டிக்கு 20 ஆயிரம், கல்யாண சீர் வரிசை 1,25,000 ரூபாய் செலவு செஞ்சேன். இன்னைக்கு வரைக்கும் குழந்தை பிறப்பு, காதுகுத்துன்னு என இரண்டு பெண்ணுங்களோட குழந்தைகளுக்கும் செலவு செஞ்சிட்டு இருக்கேன். இரண்டாவது பெண்ணோட கல்யாணத்துக்கு நாலரை சவரன் நகையும் 60 ஆயிரம் பணமும் மொய்யாக வந்தது. இதில் 20 ஆயிரம் நான் ஏற்கனவே செஞ்சது. இப்பொழுது என்னால் தைரியமாக பிரச்சனைகளை எதிர்கொள்ள முடிகிறது. துணிச்சலாக முடிவெடுக்க முடிகிறது. எந்த இடத்திற்கும் தனியாக சென்று வர முடிகிறது.



ஒரு பெண் சமூகத்தில் தனித்து வாழலாம். ஆனால் தனித்து நின்று சாதிப்பது என்பது சாதாரணம் அல்ல. நிறைய தடைகளை கடந்தாக வேண்டும். பலபேரின் சதிகளையெல்லாம் எதிர்கொள்ளவேண்டும், முறியடிக்க வேண்டும். குடும்ப உறுப்பினர், நெருங்கிய உறவினர்கள் கூட ஆதரவு அளிக்க மறுப்பதுடன், எதிர்க்கவும் செய்வார்கள். ஒடுக்கப்பட்ட தலித் பெண் என்பதால், சாதி ஆதிக்கத்தின் அனைத்து விதமான அதிகார ஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஏறக்குறைய வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் ஒரு போராட்டமாகவே நடத்த வேண்டியிருக்கும். அப்படி வாழ்ந்து, சாதித்து வளர்ந்த மெய்யாள் என்பவரின் போராட்ட வாழ்க்கைதான் இது.




மெய்யாள்




மானாமதுரை அருகில் உள்ள சன்னதிபுதுக்குளம் என்ற ஊரில் பிறந்தேன். எனது பெற்றோர்களுக்கு மொத்தம் 4 ஆண்கள் 3 பெண் குழந்தைகள். நான் 3ஆவது பெண் குழந்தை. 5 ஆம் வகுப்பு வரை தான் படிக்க முடிந்தது. அதன்பிறகு எனக்கு 18 வயதாகும்போது, கே. ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி என்பவருக்கு என்னை திருமணம் செய்து கொடுத்தார்கள். எனது கணவர் செங்கல் சூளை நடத்தி வந்தார். பல நேரங்களில் நானும் எனது கணவருடன் செங்கல் சூளை தொழிலுக்கு உதவியாக இருப்பேன். எங்களுக்கு 2 ஆண், ஒரு பெண் குழந்தை பிறந்தது. சில வருடங்களில் எனது கணவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என புரியாமல் திகைத்துவிட்டேன். ஆனாலும், கணவருடன் சில நேரங்களில் இருந்து கற்றுக்கொண்ட இந்த செங்கல் சூளை தொழிலை வைத்து, நாம் நிச்சயம் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை வந்தது.
துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் எல்லாம் எதுவும் சொல்லாமல் சென்றார்கள். எல்லாரையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அதனாலலேயே, எனக்கோ, எனது குழந்தைகளுக்கோ, ஏதாவது செய்யுங்கள் என யாரிடமும் போய் எதுவும் கேட்கக்கூடாது என முடிவெடுத்தேன். நமக்குத் தெரிந்த, அறிமுகமான இதே தொழிலையே செய்யலாம் என திட்டமிட்டேன். எங்கள் ஊரில் உள்ள வளையர் சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் கடன் வாங்கி, மண் அடிப்பதற்காக 4 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் வாங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக செங்கல் சூளை தொழிலை விரிவுபடுத்தினேன். இப்போது 50 பேர் என்னிடம் இத்தொழிலில் வேலை செய்கிறார்கள். ஒரு வருடத்தில் 10 மாதம் அனைவருக்கும் வேலை கொடுக்கிறேன். ஆண்களுக்கு 250 ரூபாயும், பெண்களுக்கு 150 ரூபாயும் கூலியாக தருகிறேன்.
தொழிலைத் தொடங்கிய புதுசில் பலர் ஏமாற்றிவிட்டார்கள். கல் வாங்கிக்கொண்டு பணம் தராமல் ஏமாற்றினார்கள். சிவகங்கையிலுள்ள முன்னாள் அமைச்சர் கண்ணப்பனின் உறவினர் ஒருவரும் 10 ஆயிரம் ரூபாய் ஏமாற்றினார். இது பெரிய தொகை. ஆனால் 2 ஆயிரம், 5 ஆயிரம் என நிறைய பேர் நிறைய ஏமாற்றியுள்ளார்கள். அதனால் நான் இப்போது யாருக்கும் கடன் தருவது கிடையாது.
நிறைய ஏஜென்ட்டுகளும், கொத்தனார், மேஸ்திரிகளும், கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிகளும் என்னிடம் செங்கல் வாங்கும் போது, யாரும் என்னிடம் கமிஷன் வாங்கமாட்டார்கள். கொத்தனார்கள் மட்டும் 100 அல்லது 200 ரூபாய் போக்குவரத்து செலவுக்கு கேட்பார்கள். இப்போது சூளைக்கு மண் விலை கொடுத்து வாங்குகிறேன். ஒரு லாரி லோடுக்கு 1000 ரூபாய், டிராக்டர் லோடுக்கு 600 ரூபாய் ஆகிறது. 80 ஆயிரம் கல் தயாரித்து வேக வைத்து எடுப்பதற்கு ஒரு மாதம் ஆகும். ஒரு மாதத்தில் 2 சூளை போடுகிறேன்.
மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டேன். மூத்த மகனுக்கு 21 வயதாகிறது. பாலிடெக்னிக் படித்துவிட்டு, இப்போது எனக்கு உதவியாக சூளைத் தொழிலில் இருந்து வருகிறான். சின்ன மகன் பி.எஸ்.சி. படித்து வந்தான். கல்லூரிக்குச் செல்லும்போது ஆக்சிடென்ட் ஆகி கால் அடிபட்டுவிட்டது. அதன்பிறகு அவன் கல்லூரிக்குப் போகாமல் நின்றுவிட்டான். இப்போது எனக்கு உதவியாக இருந்து வருகிறான். வங்கியில் 40 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினேன். இதில் 12 ஆயிரம் ரூபாய் மானியமாகும். தொடர்ந்து கடனை அடைத்துவருகிறேன். இன்னும் 5 ஆயிரம்தான் பாக்கி உள்ளது. இந்த செங்கல் சூளை தொழிலில் முழுநேரமும் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால், சுயஉதவிக்கு எதிலும் நான் சேரவில்லை.
இந்த செங்கல் சூளை தொழில் மூலம் சம்பாதித்ததில் நான் 2 ஏக்கர் நிலம் கிரையம் வாங்கியுள்ளேன். மேலும், சூளையில் வேலை செய்பவர்கள் தங்குவதற்காக ஒரு கட்டடம் கட்டத் தொடங்கினேன். தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், இது தன்னுடைய இடம் என்று என்னிடம் வந்து சண்டையிட்டு, கட்டடம் கட்டுவதை தடுத்தார். அதிகாரிகளிடம் பணம் கொடுத்து எனக்கெதிராக செயல்பட வைத்தார்.
இதுமட்டுமில்லாமல், நான் விதவை என்பதால் பொது நிகழ்ச்சிகள், விசேசங்கள் எதிலும் நான் பங்கேற்றால் எனது உறவினர்களே என்னை எதிராகப் பார்க்கிறார்கள். என்னுடன் பிறந்த எனது அக்காள் மகன் திருமணத்திற்கு சென்றபோதுகூட, எனது அக்காவே என்னை, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிடாமல் தடுத்து அனுப்பினார். அதன்பிறகு நான் விசேசத்திற்கும் போவதில்லை. இந்தத் தொழிலிலேயே முழுகவனம் செலுத்துகிறேன்.
இதுமட்டுமில்லாமல், மரம், விறகு, வியாபாரமும் செய்கிறேன். மேலும், கரிமூட்டம் போடும் வேலையும் செய்கிறேன். இதெல்லாம் இந்த செங்கல் சூளை தொழிலுடன் இணைந்த வேலையாகும். ஒரு பெரிய தென்னந்தோப்பு வைக்கணும், வேலை செய்கின்ற ஆட்கள் தங்குவதற்கு வசதியாக வீடு கட்டவேண்டும். இடையில் படிப்பை நிறுத்திய இரண்டாவது மகனின் படிப்பை மீண்டும் படிக்க வைக்கணும். இதுதான் என்னுடைய அடுத்தக் கட்ட திட்டங்கள்.

Friday, October 8, 2010

அயோத்தியும், அயோக்கியர்களும் - சில உண்மைகள்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்னும் வழக்கில், அலஹாபாத் நீதிமன்றம் கடந்த 30ம் தேதி புராணக் கதைகளை அடிப்படையாக வைத்து ஒரு தீர்ப்பினை வழங்கியுள்ளது. அதுமுதல், பார்ப்பன வெறியர்கள் பல்வேறு பொய்களை அள்ளி இறைத்து வரலாற்றைத் திரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தோழர்கள் மணி மற்றும் ஏழர ஆகியோர், அயோத்தி நிலம், ராமர், பாபர் மற்றும் பாபர் மசூதி தொடர்பான பல தகவல்களையும் தொகுத்துள்ளனர். இந்த உண்மைகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதாலும், வரலாற்றைத் திரிக்கும் முயற்சிகளை அம்பலப்படுத்தவேண்டும் என்பதாலும், உண்மையான நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காகவும் அவற்றை இங்கே பதிவிடுகின்றோம்.
(மொத்தத் தகவல்களின் நீளம் கருதி, மிக முக்கியமானவை bold செய்யப்பட்டுள்ளன)
#சுயசரிதை எழுதுவோரின் இளவரசன் என்பதுதான் ஜஹருத்தீன் ஷா பாபருக்கு வழங்கிய பட்டப்பெயர்.

#உலக தன்வரலாற்று ஆவணத்தின் உண்மைத்தன்மையில் இலக்கிய தரத்தில் ரூசோவுக்கும் செய்ண்ட அகஸ்டசுக்கும் அடுத்த இடம் பாபருக்குதான்

#த‌னது பலவீனத்தை தோலவியை தடுமாற்றத்தை வேறு எந்த அரசனும் பதிவு செய்யவில்லை பாபர் நமா வைப் போல

#டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் இன்றும் தனது மகனுக்கு அவர் எழுதிய உயில் காட்சிக்கு உள்ளது



#இந்துக்களின் மனம் புண்படாமல் இருக்க பசு மாமிசம் சாப்பிடுவதை தன் மகனை கைவிடச் சொல்கிறார் பாபர்

#மாற்று மத வழிபாட்டுத் தலங்களை அவமதித்து விடாதே என்றும் ஹிமாயூனுக்கு எழுதிய உயில்ல் பாபர் கூறுகிறார்



#திரேதா யுகம் முடிவுக்கு வந்த்து கிமு 3102 இல். திரேதா யுகத்தில் பிறந்தவன் ராமன் என்கிறது இந்து மதம்#ஆனால் கிமு 700 க்கு முன் அயோத்தியில் மனிதர்கள் வாழ்ந்த்த‍ற்கான சான்றே இல்லை என்கிறது அகழ்வாராய்ச்சி#

#பௌத்த இலக்கியமான தசரத ஜாதக கதையில் இருந்து இரவல் பெற்றுதான் கிமு 500 இல் வால்மீகி ராமாயணம் எழுதினான்

#ஒரு மனைவியை திருப்திபடுத்த மற்ற மனைவியின் மூத்த மகனான ராமனை காட்டுக்கு அனுப்புவான் தசரதன்

#அவனை அவனது சகோதர சகோதரிகளான் லட்சுமணனும் சீதையும் பின்தொடர்வர் என்கிறது அந்த சாதக கதை

#தந்தை இறந்த பிறகு வாரணாசிக்கே மீண்டும் வந்து சகோதரி சீதையை மணந்து ஆள்வான் ராமன். சமநிலை பிறழாதவன் என்பதுதான் அவனது சிறப்பு

#வால்மீகி இந்த கதையை சுட்டு இமயமலையை விந்தியமலையாக்கினான். ஆனால் விஷ்ணு அவதாரம் என மறந்தும் அவன் சொல்லவில்லை

#சீதை கடத்தப்பட்ட கதை இலியட் ம் ஓடிசியும் வாய்மொழியாக வணிகத்துடன் இந்தியா வந்த்து
#வால்மீகி இறந்து 700 ஆண்டுகளுக்கு பிறகுதான் ராமாயணத்தில் ராமன் விஷ்ணு அவதாரம் என சேர்க்கப்படுகிறது#நாகார்ஜூனா

# கோசல நாட்டின் முக்கிய நகரங்களாக சரஸவதியும் சாகித்தாவும் திகழ்ந்த்து. அன்றையஅயோத்தி கங்கைகரையில் இருந்த்து என்கிறது பௌத்த சமண இலக்கியங்கள்

# தற்போதைய அயோத்தி மேற்கிலிருந்து கிழக்காக பாயும் சரயூ ந்திக்கரையில் உள்ளது. வால்மீகி அந்த ஆறு கிழக்கிலிருந்து மேற்காக பாயும் என்கிறான்

# அப்படி ஒரு ஆறு இன்றும் நேபாளத்தில் உள்ளது
# மக்கள் நடமாட்டம் கிமு 700 ல் ஆரம்பிப்பதற்கு முன் ஆண்டுக்கு 50-60 அங்குல மழை பொழியும் பிரதேசம் அயோத்தி

#அந்தகாடுகளை திருத்தி நகரம்அமைக்க இரும்பு பயன்பட்டிருக்க வேண்டும். ஆனால் கிமு 700க்கு முந்திய ஒரு இரும்புதுண்டு கூட அயோத்தியில்சிக்கவில்லை

#இதனை ஆர்க்யாலஜிகல் சர்வே ஆப் இந்தியா வெளியிட்ட 1976-77 ரெவியூவில் பக்கம் 52, 53 இல் அறிவியல் சொல்லி உள்ளது #Indian Archeology - Areview 1979-80 page 76, 77 - cofirms the research-done by BB Lal, KN Thetchikth

#சரி ராமர் கோவில யார் கட்டுனா என்றால் விகரமாதித்தர் என்கிறார்கள். 1975 இந்திய தொல்பொருள் துறை இயக்குநர் பிபி லால் ஆயவு வேறு முடிவை தந்த்து

#விக்ரமாதித்தர் எனப்படும் இரண்டாம் சந்திரகுப்தன் காலம் கிபி 379-413. இன்னோரு விக்ராமாதித்த ஸ்கந்த குப்தன் காலம் கிபி 455-467.

#ஆனால் ஆய்வில் அயோத்தியில் குப்தர்கள் ஆண்டதற்கு ஆதாரமே கிடைக்கவில்லை. காரணம், கிபி 300-1100 ல் மனிதர்களே அயோத்தியில் வாழவில்லை

#12 ஆம் நூற்றாண்டுக்கு முன் அயோத்தியில் இன்று உள்ளது போல 18 என்ன ஒரு கோயில் கூட ராமனுக்கு இல்லை#ஏனெனில் ராமன் அன்று இந்துக் கடவுளாக கூட அங்கீகரிக்கப்படவில்லை.

#கிபி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த அமரசிம்ஹா எழுதிய அமர‌கோசா என்ற சமஸ்கிருத சொல்லகராதியில் கடவுளர்களின் பெயரில் தப்பித்தவறி கூட ராமன் இல்லை
#இந்துக்களின் புனித தலங்களை தனது தீராத் விவேகானி கலாப் இல் பட்டியலிட்ட 11 ஆம் நூற்றாண்டின் லட்சுமிதார் அதில் அயோத்தியை குறிப்பிடவில்லை
#எஸ்எஸ் ஐயர் என்ற ஹிந்து அறிஞர் எழிதிய ஆய்வுக்குறிப்போட்டு புத்தகத்தில் விக்ரமாதித்தன் எழுப்பிய திக்கவா எர்நாக் சான்சி பாம்ரா நாச்னா போன்ற‌

#இடங்களை பட்டியலிட்டார். ஏழு அடுக்கும் 84 கருப்பு கசவடி தூணையும் கொண்ட ராமர் கோவிலை அயோத்தியில் விட்டு விட்டார் இல்லையா

#பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை ராமனை யாரும் வணங்கவில்லை. பாபரின் சமகாலத்தில் வாழ்ந்த துளசிதாசரின் இந்தி ராமாயணத்திற்கு பிறகுதான்#அதுவும் மக்களது கதையாடல்களும் இணைக்கப்பட்டதால்தான் எந்திரன் ரஜினி போல ஜாக்கி வைத்து ராமன் தூக்கப்பட்டார்

#ராமர் கோவில் இடிக்தாக சொல்லப்படும் 1528ல் துளசிதாசருக்கு 30 வயது. சிரிராமசரித் மானஸ் என்றஅவரது காவியத்தில் இதுபற்றி ஏன் அவர்எழுதவில்லை
#இதனை சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் மகன் வரலாற்றாசிரிய்ர் கோபால் கேட்கிறார்

#பாபரின் வடிவில் மரண தேவனை அனுப்பியிருப்பதாகதனது கிரந்த சாகிபில் வெளிப்படையாக எழுதியவர் சீக்கிய மதத்தை நிறுவிய பாபரின் சமகாலத்தைய குருநானக்

#அவரும் அயோத்திக்கு வந்து பாபர் மஸ்ஜ௺த்தை பார்க்கிறார். ஆனால் எங்குமே பாபர் ராமர் கோவிலை இடித்த்தாக சொல்லவில்லை#பயந்திருப்பார் என்று கூட சொல்ல்லாம். ஆனால் பாபர் இறந்து 9 ஆண்டு கழித்துதான் இறந்தார் குருநானக். அப்போது ஹிமாயூன் ஒரு அகதியாக திரிந்தான்

#18 ஆம் நூற்றாண்டின் சிப்பாய் கலகம் துவங்கும் வரை அங்கு சைவ மத பைசாகி பிரிவுதான் செல்வாக்கில் இருந்த்து#இந்து அறிஞரான ஆர்எஸ் சுக்லா தனது சச்தித்தரர் பரமாணிக் இதிகாஸ் என்ற நூலில் 16 ஆம் பக்கத்தில் பாபர் 500 பிகாசு நிலத்தை அயோத்தி

#தாண்டதவான் குண்ட கோவிலுக்கு வழங்கியதை குறிப்பிடுகிறார். அதற்கான ஆவணம் அக்கோவிலில் இன்றும் உள்ளது#குவாலியரி கோவில் சிற்பங்களை ரசித்த்தை தனது சுயசரிதையான பாபர் நமாவில் குறிப்பிட்ட பாபர்

#ராமர் கோவில் இடிக்கப்பட்டதாக கருதப்படும் மார்ச் 1528 இல் அயோத்திக்கே வரவில்லை என்கிறார் அலகாபாத் பல்கலை வரலாற்றாசிரியர் சுசில் சிறீவத்சவா

#அப்போது ஆப்கானிய பட்டாணியர்களுடன் போரிட்டு கொண்டிருந்தார ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ஆக்ராவில் தங்கி கார்டனிங் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.
அயோத்தியின் ஹனுமன் கோவில் மகாந்த் ரகுபர்தாஸ் என்பவர்தான் இன்றுள்ள கட்டுக்கதைக்கு மூலப்புள்ளி

#வ‌ரலாற்றை முழக்க வரவில்லை. துரோகத்தை சுட்டிக் காட்டப் போகிறேன்#பிஎன் பாண்டே வழிகாட்டலில் செர்சிங் என்பவரது அகழவாய்வில் மசூதி குறித்த தகராறு 1855க்கு முன் இருந்தாக எந்த ஆவணமோ கல்வெட்டோ நூலோ இல்லை

#1845ல் இங்கு வந்த ஆங்கில அதிகாரி சர் ஹென்ரி லாரன்சு இதுபோன்ற தகராறுகளை அவுத் குறித்த புத்தகத்தில் சொல்லவில்லை #மன்னிக்கவும் பைராகி என்ற சைவ வழிபாடு என்பது தவறாக முன்னர் குறிப்பிட்டு விட்டேன். சைவ மரபு என்று மட்டும் புரிந்து கொள்ளவும்

#1856 ஜ‌னவரியில் பைரகி என்ற வைணவ பிரிவினரால் முசுலீம்களின் அடக்கதலம் அனுமான் குன்றில் அழிக்கப்பட்டது

#இந்த தகராறு மதவழிபாட்டுதலம் மீதான தாக்குதலுக்கு முசுலீம்கள் வருவதாக தவறாக கணிக்கப்பட்டு ஆங்கிலேய ஜெனரல் அவ்ட்ராம் ஆல் தாக்கப்பட்டனர் #மௌலவி அமீர் அலி இத்தாக்குதலில் கொல்லப்பட்டார். பிறகுதான் பிரித்தாளும் சூழ்ச்சியை பிரிட்டிசார் புரிந்தனர்

#வாரிசிலா கொள்கையை அன்று இந்தியா முழுதும் அமல் ஆகி கொண்டிருந்த்து டல்ஹ௴சியால். அயோத்தியின் அவுத் மீதும் ஆங்கிலேயருக்கு ஒரு கண் இருந்த்து #பிப்ரவரியில் அவுத் கிழக்கிந்திய கம்பெனிக்கு வாரிசு இல்லாத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டது. மன்ன்ன் வாஜித் அலி ஷா கைது செய்யப்பட்டான்

#அவ‌னது நான்கு மனைவிகளில் மூவர் சரண்டைய நான்காவது ராணி மட்டும் ஆங்கிலேயரை எதிர்க்க துணிந்தாள்

#பீகாரின் எளிய தாழ்த்தப்பட்டகுடும்பத்தில் அழகாகபிறந்த ஒரே குற்றத்துக்காககட்டாத வரிக்கு பதிலாகபெண்ணையே மனைவியாக்கிகொண்டிருந்தான் அந்தமன்னன்

#அவளுடைய இழிபிறப்பு காரணமாக அவத் அவளை ராணிகளில் ஒருத்தியாக கூட ஏற்கவில்லை#ஆனால் அவத் இன் மானத்தை காப்பாற்றிய அவள்தான் ஹஸ்ரத் பேகம்

#ஜான்சியின் லட்சுமி பாயும் அவத் இன் ஹஸ்ரத் பேகமும் சிப்பாய் கலகத்தின் கதாநாயகிகள்#ஹஸ்ரத் தன் 10 வயது பாலகனோடு போர்க்களத்தில் நின்ற போது அவுத் இன் நிலபிரபுக்கள் நடுநிலை காத்தார்கள்

#அனுமன் கிரியின் பூசாரி ரகுபர் தாஸ் பிரிட்டிசாருக்கு சமையல் செய்ய ஆள் அனுப்பியும் உணவு அனுப்பியும் தைரியமூட்டியும் ஆதரவு அளித்தான்#அப்போது ஆற்காட்டில் இருந்து ஆங்கிலம் தெரிந்த ஒரு 70 வயது மௌலவி ஒருவர் அயோத்தி அமைந்திருக்கும் பைசாபாத் க்கு வந்தார்

#பாளையக்கார்ர்களின் கலகத்திற்கு ஒரு விருப்பாட்சி கோபால் நாயக்கர் என்றால் சிப்பாய் கலகத்திற்கு பைசாபாத் மௌலவி அகமது ஷா

#ஜிகாத் என்ற மதப்போர்வையில் பிரிட்டிசாருக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார். கைதாகி சிறையிலிடப்படுகிறார்.

#ஆயுதங்கள் பறிக்கப்படுகிறது. ஆனால் சிறையில் இருந்து மக்கள் ஆதரவுடன் உடைக்கப்ட்டு விடுவிக்கப்படுகிறார் மௌலவி#சிறையையும் தனது பிரச்சார மேடையாக மாற்றிய மௌலவி தனது உதவியாளருடன் கடைசியாக பிடிபட்டு தூக்கிலிடப்பட்டார். அப்போது வயது 71

#அக‌மது ஷாவும் ஹஸ்ரத் மஹலும் உள்ள அவுத் இன் சிப்பாய் கலகம் பற்றி மட்டுமே ஜி.ஹட்சின்சன் ஒரு தனி புத்தகமே எழுதி உள்ளார்

#அப்புத்தகத்தில் கேப்டன் ரீத் என்பவர் ஹனுமன் கிரி பூசாரிகளின் உதவிக்கு நன்றி பாராட்டுகிறார்#மெக்கால்டு இன்சும் அவுத் லக்னோ கலகம் பற்றிய குறிப்புகளில் இதனை குறிப்பிடுகிறார்‌

#ஹனுமன் கிரி பூசாரி மாத்திரம் உணவு தராமல் இருந்தால் தாங்கள் செத்திருப்போம் என்கிறார் வில்சன்தாமஸ் பொர்னஸ்Defence of Lucknow (1858 edition) #இந்த துரோகத்திற்கு எதாவது பரிசளிக்க விரும்பினார்கள் ஆங்கிலேயர்கள் ஹனுமன் கிரி பூசாரி ரகுபர் தாசுக்கு

#பாபர் மஸதிக்கு முன் உள்ள பொதுமனை அவர்களுக்கு வழங்கப்பட்டது. 1865ல் அங்கு ராம் சபூட்ரா என்ற ராமர் பிறந்த இடம் தோன்றியது

#முன்னர் கல்லறை வழிபாட்டு தகராறுக்கு நியாயம் கேட்க வந்த முசுலீம்களை பழிவாங்கும் நோக்கம் இருந்த்தை பூசாரியின் நடைமுறைகள் காட்டுகின்றன‌

#கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த தொண்டைமானுக்கு ஒரு வாளும் பட்டாடையும், சிப்பாய கலகத்தை காட்டிக் கொடுத்த ஹனுமன் கிரி பூசாரிக்கு ராமஜென்ம பூமி


#த‌னது செல்வாக்கை பயன்படுத்தி ஆங்கிலேயர் பி.கார்னேஜி என்பவர்1870 இல் எழுதிய Historical sketch of Fyzabad புத்தகத்தில் #முதன்முதலாக பாபர்மசூதி கட்ட ப‌யன்படுத்திய தூண்கள் ஜனமஸதான் கோவிலில்இருந்து எடுக்கப்பட்டதாக திரித்தனர
#இன்றுமட்டுமாவரலாற்றைதிரிக்கிறார்கள்

#ராம் சாபூட்ரா திண்ணைக்கும் மசூதிக்கும் இடையில் வேலியும் போட்டு வடக்கு வாசல் வழியாக மட்டுமே முசுலீம்கள் வரலாம் என நிபந்தனை விதித்தார்கள்

#1859 இலிருந்து இது நடைமுறைக்கு வந்த்து#ஆம் சுதந்திர போராட்டத்தை காட்டிக் கொடுத்த துரோகிகளுக்கு கிடைத்த இடம்தான் ராமஜன்ம பூமி#பிரிட்டிசாரின் தயவில் பிறந்த அவதார புருசன்

#1885ல் ரகுபர்தாஸ் இந்த திண்ணையில் கோவில்கட்ட அனுமதிக்குமாறு பண்டிட் ஹரிகிருஷ்ணசாஸ்திரியின் சிவில்கோர்ட்டில் வ.எண் 61/280 பதிவு செய்கிறார் #படுகொலைக்கு வழிவகுக்கும் என அந்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து ஆனால் இடத்தை ஊர்ஜிதம் செய்தார்

#அவுத்மாகாண நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடும் யங் என்பவரால் நவ 1 1886ல் தள்ளுபடி செய்யப்பட்டது. but பாபர்தான் இடித்தார் என ஏற்றுக்கொண்டது
#இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிதுறையின் இயக்குநர் ஏ.பூரேர் 1889 ல் நடத்திய ஆய்வில் மசூதியின் பாரசீக கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்படுகிறது
#ஹிஜ்ரி 930ல் அதாவது கிபி 1524ல் அதாவது இப்ராகிம் லோடியால் இப்பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது#கல்வெட்டில் உள்ள செய்தி

#ஏப் 25 1526 இல் முதல் பானிபட் போரில் இப்ராகிம் லோடி பாபரால் கொல்லப்படுகிறார். பாபர் இந்த பள்ளிவாசல் கட்டப்படுவதை தொடர்ந்தார்

#இந்த கல்வெட்டை கவனிக்காமல் திருட்டை உருப்படியாக செய்ய முடியாமல்மாட்டிக் கொள்ளவே கல்வெட்டுக்குகன்னம் வைக்க கலவரத்திற்கு தேதி குறித்தார்கள்

#1934 கலவரத்தில் வெற்றி பெற்றதாக ராக்த் ரஞ்சித் இதிகாஸ் நூலில் ராம ராக்ச திரிபாதி (பக்.60)குறிப்பிடுகிறார்

#அந்த கலவரத்தில் கல்வெட்டை மட்டும் அழித்தால் மாட்டி விடுவோம் என பயந்து வெளிச்சுவர் தூபி என பலவற்றை இடித்தனர் இந்துமத வெறியர்கள்

#க‌லவரத்தில் சேதமடைந்த பகுதிகளை அரசு செப்பனிட காண்டிராக்டு விட்டதற்கு ஃஆதாரம் உள்ளது

#1949 டிச22 இரவில்தான் பூமியை பிளந்துகொண்டு ராமரும் லட்சுமண சீதா பிராட்டியும் அயோத்தியில் முளைத்தனர்

#இதற்கு காரணமான கேகே ந்ய்யர் கூட இந்த அற்புத்த்தை ஏற்றுக்கொள்ளவில்லை.இந்த உதவிக்காக ஜனசங்கம் பின்னர் அவரை எம்பி ஆக்கியது

#மறுநாளே சிலைகளை அப்புறபடுத்த வாய்ப்பிருந்தும் அப்படி செய்தால் அப்பாவிகள் மடிவார்கள் என நய்யர் அகற்ற மறுத்துவிட்டார்

#அகற்ற வாய்பு இருந்த்தை அன்றைய காங்கிரசு மா செயலர் அக்சாய் பிரம்மச்சாரி சுட்டிக்காட்டுகிறார்

#சாஸ்திரிக்கு 1950ல் கடிதமும் எழுதி மசூதியை முசுலீம்களிடம் ஒப்படைக் கோரி உண்ணாவிரதமும் இருந்தார் அவர். ஏற்கெனவே 1949டிச23 மசூடிக்கு பூட்டு

#உண்ணாவிரதமிருந்த காந்தியவாதிகளை தாக்கி வீடுகளை சூறையாடினார்கள் இந்துமதவெறியர்கள். டிச291949ல் பைசாபாத்-அயோத்தி கூடுதல் முதல் மாஜிஸ்டிரேட் #சொத்தின் ரிசீவராக நகராட்சி தலைவர் பிரியாதர்ராமை நியமித்த்து. அவர் இந்துக்களுக்கு மாத்திரம் விகரக தரிசனத்திற்கு அனுமதித்தார்

#இந்திய கிரிமினல் சட்டம் 145 ன் கீழ் இந்நியமனம் நடந்த்து. இதன்படி சொத்தை பறிகொடுத்தவன் நீதிமன்ற இறுதிதீர்ப்பு வரை சொத்தை அனுபவிக்கலாம்
#ஆனால் முசுலீம்களை மசூதிக்கு அருகில் கூட அனுமதிக்கவில்லை

#ஜன61950ல் சூட் நம்ர் 2ல் கோபல்சிங் விசாரத் ஒரு வழக்கை சிவில்நீதிமன்றம் பைசாபாத் தாக்கல் செய்தார் தடையின்றி இந்துக்கள்வழிபாடு செய்வதற்ku

#அரசு முசுலீம் என 8பேர் பிரதிவாதிகள்.உபி அரசுசாப்பில் ஆசரான பைசாபாத் துணை ஆணையர் உக்ரா கள்ளத்தனமாக சிலை வைக்கப்பட்டதையும் #மசூதியின் நீண்ட கால அனுபவ பாத்யதையையும் ராமர் கோவிலின் ஆதாரமின்மையையும் அறிக்கையாக தந்தும் நீதிபதி என்என் சத்தர்

#சிலைகளை அகற்ற இடைக்கால தடை விதிக்கிறார். மார்ச் 51ல் ஒருமுறை தடை நீட்டிக்கப்பட்டது.பின் 1961அலகாபாத் உயர்நீதிமன்ற பெஞ்ச வ.எ.12கீழ் வந்தது

#ராமஜனம்பூமி மீட்பு ரதயாத்திரயை சீதை பிறந்தாக சொல்லப்படும் நேபாளின் ஜனக்பூரிலிருந்து 1984 செப் 25ல் விசுவிந்து பரிசத் துவங்கி

#அக்7,1984இல் அயோத்தி வ்ந்த்துமசூதி பூட்டை உடைத்து ராமர் கோவிலாக மாற்ற உறுதிமொழி எடுத்தனர்.தாலா கோலே(பூட்ட உடை)முழக்கம்ஆனது

#அக் 31 இந்திரா செத்ததால் கலவரத்தை ஓராண்டு தள்ளி போட்டார்கள். மார்ச்9,1986க்குள் கதவு தங்களுக்கு திறக்காவிடில் பூட்டுஉடைபடும் என்றனர்விஇப‌

#டிச18,1985ல் விஇபல் உள்ள முன்னாள நீதிபதிகள் கத்திவு அகர்வால் முன்னாள் போலிசு ஐஜி தீட்சித் ஆகியோர்

#பைசாபாத் மாவட்ட மாஜிஸ்டிரேட் இந்துகுமார் பாண்டே ஐ சந்தித்து கோவிலை பூட்டிவைப்பது சட்டவிரோதம் திறந்துவிட வேண்டும் என்றனர்

#உமேஷ் சந்தர் பாண்டே என்ற 28 வயது (உயர்நீதிமன்றத்திற்கு வழக்கு வந்தபோது 2 வயது)ஒருவர் முன்சீப் நீதிமன்றத்தில் பூஜிக்கதடையை நீக்ககோருகிறார்

#முன்சீப் ஹரிசங்கர் துபே ஜன28,1986ல் இம்மனுவை உயர்நீதிமன்ற வழக்கு நிலுவை காரனமாக நிராகரிக்கிறார். இம்மனு மேல்முறையீட்டுக்காக #மாவட்ட நீதிபதி கேஎம் பாண்டே முன் பிப் 1,1986 அன்று விசாரணைக்கு வருகிறது. அன்று மாலையே பூட்டை திறந்துவிடும்படி உத்தரவிட்டார்

#உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருக்கையில் மாவட்ட நீதிமன்றம் அவ்வழக்கிற்கு தீர்ப்பு அளித்த்து நீதித்துறை வரலாற்றில் விசித்திரம்தான்

#தீர்ப்பில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவோ விக்ரகத்தை பாதுகாக்கவோ பூட்டு தேவையில்லை35ஆண்டுகளாக இந்துக்களை கைதிகள் போல இருந்துள்ளனர் endrum

#பூட்டை திறப்பதால் வானம் இடிந்து விழாது. முசுலீம்கள் ஏற்கெனவே வருவது இல்லை. பூட்டை திறந்தால் மாத்திரம் எப்படி பிரச்சினை வரும் என்றும்

#தீர்ப்பளித்த பாண்டே பிரதிவாதியாக சேர்க்க கோரிய முகமது காசிம் என்பவரது மனுவை தள்ளுபடி செய்து பிப் 1,1986,4.40க்கு உத்தரவிட5.20க்கு அமல்னது

#பூட்டை திறந்தால் முசுலீமுக்கு பாதிப்பு என்பது கற்பனைக்கு கூட தகாது என பகடி செய்தார். சட்டம ஒழுங்கு பாதிக்கபடாது என்றார் அல்லவா #க‌லவரம் வட இந்தியா முழுவதும் பற்றிப் படர்ந்த்து

#1985 ஏப்ரல ஷாபானு வழக்கில் முசுலீம்களை திருப்தி செய்ய முசுலீம் பெண்களின் வாழ்க்கையை பறித்தெடுத்த நேருவின் குலக்கொழுந்து #1986சிவராத்ரி மார்ச்8க்குள் பூட்டை உடைக்க அனுமதி தருவதாக விஇப இடம் அனுமதி கொடுத்தார்.அருண்நேரு போன்ற கூட்டாளிகளிட்ம்

#முசுலீம் தனிநபர் சட்டத்திற்கான பழிக்குப்பழிதான் இது என சொன்னது அக்பரே நவ் இன் பேட்டி ஒன்றில் அருண்நேருவே ஒத்துக்கொண்டது #நவ9,1989இல் 25கோடியில் கோவில் கட்ட அலகாபாத் விராத் சாந்த சம்மேளன கூட்டத்தில் ஜனவரியில் 4 க்ட்ட‍ நடவடிக்கைக்கு திட்டமிடப்பட்டது

#எம்கே நாராயணன், பூட்டாசிங், தவாண் போன்றோர் விஇப உடன் இது சம்பந்தாக பேசி உள்ளனர். செங்கற்களுக்கு வரும்வழியில் பாதுகாப்பு வழங்க,

#அடிக்கல் நாட்டுக்கு பாதுகாப்பு வழங்க அரசு சம்மதித்த்து. ஆக 14 89ல் அலகாபாத் உயர்நீதிமற்ற ல்க்னோ பெஞ்ச் ஸ்டேட்டஸ் கோ வை உத்தரவிட்டது

#ஆனால் நீதிமன்ற தீர்ப்பை மீறி ஊர்வலம் நடந்த்து. பகல்பூரின் கார்லிபிளவர் செடிகளுக்கு உரமான முசுலீம் பிணங்களை பார்த்த பிறகும் ராஜிவ்

#அக் 26 1989ல் ராம்லீலா ஊர்வலங்களை தடைசெய்ய முடியாது என்றார் பாட்னா விமான நிலையத்தில் #தானே அடிக்கல் நாட்ட வரப்போவதாகவும் பூட்டாசிங் மூலம் தூது அனுப்பி சொன்னார் ராஜீவ். நவ 3 முதல் பிளாட் 586ல்

#முசுலீம்களின்அடக்கதலத்தின்மீது காவிகொடி பறக்கவிட்டு இடத்தை தேர்வு செய்தார்கள். அன்றுதான் ராஜீவ பைசாபாத்ல் தேர்தல்பிரச்சாரத்தை துவக்கினார்

#ராமராஜ்யம் அமைக்கபோவதாகவும் கூறினார். ஜிகாத் என்ற பெயரில் மக்களை திரட்டிய மௌலவிக்கும் இந்த பொறுக்கிக்கும்தான் எத்தனை வேறுபாடு #முசுலீம் ஓட்டுக்களை இழக்க விரும்பாமல் உபி அரசு மூலம் தடையும் கோரினார் ராஜிவ்.

----
மானஸாரா என்ற இந்துகட்ட்ட‍ கலை குறித்த சிற்ப சாஸ்திர நூலின் 3 வது அத்தியாயத்தில் மனித மண்டை ஓடுகள்-எலும்புக்ள-..பிணங்கள் நிறைந்து காணப்படும் இடத்தை கோவில் கட்ட தேர்வு செய்ய கூடாது என உள்ளது. ஆனால் தற்போது அடிக்கல் நாட்டிய இடம் முசுலீம்களின் கல்லறைதான். இது 2010 தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு தெரியாதா.

மினரா இல்லாமல் பள்ளிவாசல் இருக்க முடியாது என்பதும் ஒரு வாதம். செருசலத்தில் உள்ள பைத்துல் முகத்துஸஃ பள்ளிவாசல், மெக்காவின் க்பா, இந்தியாவின் முதல் பள்ளிவாசலான கேரளத்தின் கொடுங்களூர் பள்ளிவசலிலும் மினரா கிடையாது. எனவே அயோத்தியில் இல்லாத்து பிரச்சினை இல்லை.

அக்பர் தான் எழுதிய திவான் இ அக்பர் என்ற நூலில்
ததானே திண்ணை அமைத்து ராமர்கோவில் கட்ட உதவியதாகவும் விஇப தனது அதீத் கி அஹூத்யான் வர்த்தமன் கி சங்கல்ப் என்ற நூலில் சொல்கிறது.அபூல் பசல் தனது அய்னி அக்பரியின் ஜலாலுதீன் அக்பருக்கு எழுத படிக்க தெரியாத்தை பதிவு செய்கிறார்.
மற்றபடி அவர்கள் சொல்லும் நூற்கள் 18 ஆம் நூற்றாண்டின் சூபி மரபின் இலக்கிய பதிவுகளாக இரு புத்தகங்கள் உள்ளன சில வார்த்தை வித்தியாசங்களுடன்

பாப்ர் மசூதி கட்டப்பட்ட போது அதை எதிர்த்து 1,72,000 இந்துக்கள் போராடி மடிந்தனராம்.
அதாவது 1528ல். ஆஃனால் 1881 இல் அயோத்தியின் மக்கட்தொகை 11,643.

ராமர் கோவிலின் கருப்பு கசவ்டி தூண்களைத்தான் மஸதிற்கும் பயன்படுத்தினார் பாபர் என்கிறார்கள்.கார்பன் 14 பரிசோதனை மூலம் இந்த தூணின் வயதை கண்டறிந்த போது அது எதுவும் 450 (1989ல்) ஆண்டுகளை தாண்டவில்லை.(Radiance Views Weekly, 24-30 April 1988, 25 June-1 July 1989, 17-23 Dec 1989)

பாபர் நாமாவில் டிச 24,1528 ல் 26 தூண்களை வடிவமைத்த்தை பாபர் குறிப்பிடுகிறார் (பக்கம் 362)

பாபர்நாமா ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 1528ல் எழுதப்படவில்லை. இந்த கட்டத்தில்தான் பாபர் அயோத்தி வந்து இடித்தார் என்கிறார்கள். இக்குறிப்பிட்ட காலத்திற்கான குறிப்புகள் பலத்த சூறாவளி காற்றில் காணாமல் போனது பற்றி பாபர் நாமா பதிவு செய்துதான் உள்ளது. ஆனால் பாபரின் மகள் குல்பதன் எழுதிய ஹூமாயூன் நாமா வின் பக். 100-103ல் இதற்கு விளக்கம் உள்ளது1528 ஏப்ரல் 5-8ல் ஆக்ரா வருகிறார். ஜூலைக்கு பிறகு பதேபூஃர சிக்கரிக்கு செல்கின்றனர். அங்குள்ள பூந்தோட்டத்தில் பாபர் நாமா எழுத ஒரு இடம் பூங்காவில் அமைக்கப்பட்டதை பதிவு செய்கிறார்• ஃஆப்கானியர் மீதான வெற்றி மழையால் தள்ளிப் போனதை பற்றுயிம் குறிப்பு உள்ளது.
-----
பதிவர் செங்கொடியும் இந்தத் தகவல்களை பதிவாக இட்டுள்ளார். உண்மையான வரலாறு அனைவருக்கும் தெரிய வேண்டும் என விரும்பும் பதிவர்கள், தோழர்கள் திரட்டிய தகவல்களை தங்களது தளங்களிலும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.