Monday, December 28, 2020

கஞ்சா, லாட்டரி, கள்ளசாராயம் உள்ளிட்ட அனைத்து சட்டவிரோதச் செயல்களும் காவல் துறையின் அனுமதியுடந்தான் நடைபெறுகிறது என்பது அனைவரும் அறிந்தது.

லாட்டரி விற்பவர்களிடம் லஞ்சம் வாங்குவதில், இரு நாட்களுக்கு முன்பு விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளரும், காவலர் பாலாவும் காவல் நிலையத்திலேயே சண்டையிட்டுக்கொண்டுள்ளனர்.
ஆனால், இந்த லாட்டரி விற்பனை வழக்கில் இவர்கள் இருவரையும் இணைத்தே விசாரிக்க வேண்டும்.
நாடுமுழுவதும் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி உள்ளிட்ட அனைத்து வழக்கிலும் விற்பனையாளரை மட்டும் கைது செய்யாமல், தொடர்புடைய காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர்கள் உள்ளிட்ட அனைவரையும் குற்றவாளிகளாக சேர்த்து விசாரிக்கப்படவேண்டும்.

25.12.2020 முகநூல் பதிவு


No comments: