Saturday, May 9, 2020

கொரோனா என்ற பெயரில் போலீசார் செய்த கொலை : பழங்குடி இருளர் மரணம்


கொரோனா என்ற பெயரில் போலீசார் செய்த கொலை :
பழங்குடி இருளர் மரணம் - இறந்த உடலுடன் 10 வயது மகன் பரிதவிப்பு -
அதிகாரிகள் அலட்சியம்.
-------------------------------------------------------------------------------------------------------
விக்கிரவாண்டி வட்டம், கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நல்லாபாளையம் கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பில் அய்யனார் (35) த/பெ மாயாண்டி விபத்தில் அடிபட்டு, தலையில் பலத்த காயத்துடன் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சென்னை அரசு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நேற்று (07.05.20) மாலை நல்லாபாளையம் கிராமத்திற்கு மருத்துவர்களால் அனுப்பி வைக்கப்பட்டார்.

வீட்டில் எழுந்திருக்க முடியாமல், வாயில் பால் ஊற்றப்பட்ட நிலையில் படுக்கையிலேயே இருந்தார். இவரின் மனைவி தனம் மற்றும் தாய் முனியம்மாள் இருவரும் மாற்றி கவனித்துவந்துள்ளனர்

அய்யனாரின் தாய் மற்றும் மனைவி இருவரையும், கொரோனா தொற்று இருப்பதாக கூறி இன்று (08.05.20) மாலை கண்டாச்சிபுரம் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்குச் அழைத்து சென்றுள்ளனர்.

தாய் மற்றும் மனைவி அழைத்துச் செல்லப்பட்ட சிறிது நேரத்தில், உதவி செய்ய யாரும் இல்லாத நிலையில் அய்யனார் இறந்துவிட்டார்.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஜீவா (வயது 11) மட்டும், இறந்துபோன தந்தையின் உடலுடன் தனியாக இருக்கின்றான்.

தூங்கும்போது இரயிலேற்றி 14 பேரை கொலை செய்த இந்திய தேசத்தின் தமிழகம், பழங்குடி இருளரை உயிரோடு கொலை செய்துள்ளது..

இருளர் சமூகத்தைச் சேர்ந்த அய்யனாரின் மரணத்திற்கு காரணமான கண்டாச்சிபுரம் போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
08.05.2020

No comments: