Saturday, October 12, 2024

பவழ விழா பிறந்த நாள் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களுக்கு பிறந்த நாள்





பிறந்த நாளின் பவழ விழா காணும்
அ.மார்க்ஸ் சார் அவர்களுக்கு

இனிய வாழ்த்துகள்..

பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள் சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகள் குறித்து எழுதி வருகின்றார். அவரது எழுத்துக்கள் அனைத்தும் அதிகாரத்திற்கு எதிராகவும், பாதிக்கப்படும் மக்களின் குரலாகவும் ஒலிப்பதை அனைவரும் அறிவோம். ஜனநாயகத்திற்கு எதிரான அதிகாரத்தின் குரலை நாம் எப்படி புரிந்துகொள்வது என்பதையும், அதற்கெதிராக நாம் எப்படி செயல்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தி, செயல்பட்டு வருபவர்.
பொது வாழ்க்கையில் ஈடுபடுகின்ற பலரும் பலநேரங்களில் அவர்களுடைய பொதுச் செயல்பாடுகளுக்கு மாறான செயல்களில் ஈடுபடுவதையும், சில நேரங்களில் பின் வாங்குவதையும் நேரடியாகவும், தூரத்திலிருந்தும் பார்த்துள்ளேன்.
மேலும் பலர் பொது வாழ்க்கையின் பெயரால் கிடைக்கும் புகழ், சிறப்பு, தொடர்பு ஆகியவைகளினால் சொந்த வாழ்க்கையில் ஏராளமான அனைத்துவிதப் பலன்களை பெற்றுள்ளதையும் அறிவேன்.
ஆனால் நான் கண்ணுற்ற வகையில் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள் தன்னுடைய சிந்தனைக்கும், அறிவுக்கும் நேர்மையாக இருக்கின்றார்.
இந்த வயதிலும் அறிவார்ந்த உழைப்பு, செறிவான சிந்தனை, அவைகளையொட்டிய செயல்பாடுகள் மூலமாக தமிழ் சமூகத்திற்கு பெரும் பங்களிப்பினை செய்து வருகிறார்.
சொல்லிக்கொள்ளும் படியான பெரிய அமைப்பு-கட்சி பின்னணி கிடையாது. ஆனாலும் அன்றாட அரசியல் – சமூக பிரச்சனைகளுக்கு அவ்வப்போது உடனடியாக எதிரிவினையாற்றி சமூகவியல் நோக்கில், சாதாரண மக்களின் பக்கம் நின்று செயல்படுகிறார்.
ஒரு பெரிய கட்சி, இயக்கம் செய்யவேண்டிய அளவிலான பணியினை இயல்பாக செய்துவருகிறார்.
நான் சங்கடம் மற்றும் எதிர்ப்புகளை எதிர்கொள்ளும்போதும், மனம் சோர்வடையும் போதும் உங்களை எண்ணிப்பார்ப்பேன் சார்.
உங்களின் சோர்வறியா உழைப்பை நினைத்துப் பார்ப்பேன் என்னுடையை தடைகளை எல்லாம் தாண்டி மீறி வருவேன்.
இப்படி
என்னைப் போன்ற பலருக்கு உதாரணமாய் உள்ள
உங்களுக்கு என்னுடைய
அன்பார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்..
இனிய வாழ்த்துக்களுடன்..

(04.10.2024 முகநூல் பதிவு)

No comments: