Friday, October 4, 2024

பச்சையப்பன் அறக்கட்டளை - 132 பணி நியமனங்கள் நிறைவு

 04.10.2024

பச்சையப்பன் அறக்கட்டளை - 132 பணி நியமனங்கள் நிறைவு

அனைவருக்கும் வணக்கம்.

பல்வேறு பெருமைகளைக் கொண்ட, பாரம்பரியம் மிக்க சென்னை பச்சையப்பன் அறக்கட்டளை தற்போது சென்னை உயர்நீதி மன்றத்தால் நிர்வகிக்கப்படுகிறது. அறக்கட்டளையின் நிர்வாகியாக ஓய்வு பெற்ற நீதிபதி பார்த்தீபன் அவர்களும், செயலாளராக சி.துரைக்கண்ணு அவர்களும் உள்ளனர். இருவரும் நேர்மையாகவும், சிறந்த முறையிலும் செயல்பட்டு வருகின்றனர்.
அறக்கட்டளையால் நடத்தப்படும் 6 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உதவிப் பேராசிரியர் மற்றும் நூலகர்கள் உள்ளிட்ட 132 பணியிடங்களுக்கு பல்கலைக் கழக மானியக் குழு மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல்படி தகுதியானவர்களை நியமிக்க முயற்சித்தனர்.
நேர்மையான முறையில் நடைபெறுவதற்கான அப்பணி நியமனங்களை தடுத்து நிறுத்த முயற்சித்த உயர் கல்வித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, செப்டம்பர் 8 மற்றும் 10 தேதியில் நாம் அணைவரும் இணைந்து கூட்டு அறிக்கை வெளியிட்டிருந்தோம். 27.09.24 அன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்தினோம்.
மேற்படி 132 பணியிடங்களுக்கு செப்டம்பர் 27, 28 மற்றும் 30 ஆகிய மூன்று நாட்களும் நேர்காணல் நடைபெற்றது.
பல்கலைக் கழக மானிய குழு வழிகாட்டுதல் படி, அமைக்கப்பட்ட 113 பேராசிரியர்கள் கொண்ட நேர்காணல் குழு தகுதியான 130 பேரை தேர்வு செய்தது. நேற்று (03.10.2024) அறக்கட்டளை வளாகத்தில் 130 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
சூழ்ச்சி மற்றும் இடையூறுகளுக்கு அஞ்சாமல், மனந்தளராமல் உறுதியாக நின்ற நிர்வாகி மற்றும் செயலாளர்; தடைகளை எல்லாம் தடுத்து நிறுத்தி சரியான போக்கில் வழிகாட்டிய சென்னை உயர் நீதி மன்றம்; கல்விச் சீர்கேடுகளையும் ஊழலையும் ஒழிக்கும் இச்செயலில் உடன் நின்ற
1.எழுத்தாளர் எஸ்.வி.இராஜதுரை, மனித உரிமை செயற்பாட்டாளர்
2.வழக்கறிஞர் ஹென்றி டிபேன், மக்கள் கண்காணிப்பகம், மதுரை.
3.பேராசிரியர் அ.மார்க்ஸ், மனித உரிமைச் செயற்பாட்டாளர்
4.பேராசிரியர் பிரபா கல்விமணி, மக்கள் கல்வி இயக்கம்.
5.பேராசிரியர் சங்கரலிங்கம், தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்.
6.வழக்கறிஞர் ஜான்வின்சென்ட்,செயலாளர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்
7.கண.குறிஞ்சி, ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு மக்கள் உரிமைப் பேரவை
8.பேராசிரியர் மு.திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ), மக்கள் விடுதலை
9.பழ.ஆசைத்தம்பி, மாநிலச்செயலாளர், சி.பி.ஐ (எம்.எல்), தமிழ்நாடு
10.வே.அ.இரமேசுநாதன், அமைப்பாளர், நீதிக்கான தலித்,பழங்குடியினர் கூட்டமைப்பு
11.பேராசிரியர் அரசமுருகுபாண்டியன், பி.யூ.சி.எல், சிவகங்கை
12.அ.சிம்சன், ஒருங்கிணைப்பாளர், நீதிக்கான மக்கள் இயக்கம், காரைக்குடி.
13.கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி
14.காஞ்சிஅமுதன், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு, காஞ்சிபுரம்
15.அருட்தந்தை அ.ரபேல்ராஜ், கவசம், கக்கனூர், விழுப்புரம்
16.எழுத்தாளர் வ.கீதா, சென்னை
17.பேராசிரியர் வீ.அரசு, சென்னை
18.பேராசிரியர் அரங்கமல்லிகா, சென்னை
19.வாசுகி பாஸ்கர், ஆசிரியர், நீலம் பதிப்பகம், சென்னை
20.பேராசிரியர் சே.கோச்சடை, எழுத்தாளர், கல்வியாளர், சிவகங்கை
21.வழக்கறிஞர் சுப.தென்பாண்டியன், மக்கள் உரிமைக் கூட்டணி, சென்னை
22.அ.தேவநேயன், தோழமை, குழந்தை உரிமை செயற்பாட்டாளர், சென்னை
23.வழக்கறிஞர் இராபர்ட் சந்திரகுமார், உயர்நீதி மன்றம், மதுரை.
24.ஆ.இரவிகார்த்திகேயன், மருதம், விழுப்புரம்.
25. கவிஞர் இசாக், சென்னை
26.ஆர்.மோகனசுந்தரம், ஓய்வு பெற்ற ஆசிரியர், விழுப்புரம்
27.பி.வி.இரமேஷ், தலைவர், மக்கள் பாதுகாப்புக் கழகம், விழுப்புரம்
28.இரா.பாபு, மனித உரிமை செயல்பாட்டாளர், கடலூர்
29.முருகப்பன் ராமசாமி, செயலாளர், நகரக் கல்வி மேம்பாட்டுக் குழு, திண்டிவனம்.
உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும், பணி நியமனம் பெற்றவர்களுக்கு பாராட்டுகளும் தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி.
-------------------------------
மக்கள் கல்வி இயக்கம்
7, பாரதிதாசன் நகர், கல்லூரிச் சாலை,
திண்டிவனம் – 604 001.
தொடர்புக்கு : 9442622970 / 9894207407



No comments: