Sunday, October 13, 2024

சட்டங்களை தவறாகப் எப்படி பயன்படுத்தலாம் என தமிழகப் போலீசாரிடம் பயிற்சி எடுக்கலாம்!!




போக்சோ சட்டத்தை எப்படி தவறாகப் பயன்படுத்தலாம் என்பதற்கு

தமிழப் போலீசாரிடம், பிற மாநில போலீசார் பயிற்சி எடுக்கலாம்

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுப்பது குற்றம்.

கொடுத்தால் பொய் வழக்கு - சிறை - சித்திரவதை என அணுகும் காவல்துறை.

—------------------------------
முன்னாள் முதல்வர் கலைஞர் ‘’தமிழக காவல் துறையின் ஈரல் அழுகிவிட்டது” என்றார். அவரின் மகனும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின், ஜெய்பீம் படம் பார்த்துவிட்டு, ’’காவல் துறையின் சித்திரவதைகளை நானும் அனுபவித்துள்ளேன்” என்று கூறியவர்.
தமிழகப் போலீசார் போக்சோ சட்டத்தை மிக மிக மோசமாக கையாள்வதையும், பழிவாங்க மட்டுமே பயன்படுத்துவதையும், இச்சட்டத்தை போலீசார் லஞ்சம் பெற்று பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பாகவும் பயன்படுத்துகின்றனர்.
காவல் துறையின் இந்தப் பொறுப்பற்ற செயல்குறித்து நீதிமன்றம் சுட்டிக்காட்டிய பிறகும் கொஞ்சமும் திருத்திக்கொள்ளவில்லை.
70 வயதான பழங்குடி இருளர் பொன்னுசாமி. 70% மாற்றுத் திறனாளி. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு அனந்தபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றார்.
அனந்தபுரம் போலீசார், குற்றமிழைத்தோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்கின்றனர். அதுவும் போக்சோ சட்டத்தில் கைது செய்கின்றனர்.
அனந்தபுரம் போலீசார் இப்படி குற்றமிழைப்பது முதல் முறையல்ல. பழங்குடியினருக்கு எதிராகவும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை சீர்குலைக்கும் நோக்கிலும் தொடர்ந்து செயல்படுகின்றனர்.
அத்தியூர் விஜயா எனும் 17 வயது பழங்குடி இருளர் பெண்ணை, புதுச்சேரி போலீசார் பாலியல் வன்கொடுமை செய்ய உதவி செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் கொடுப்பதை ஒரு குற்றமாக பார்ப்பதில் விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் போலீசாருக்கு முதலிடம் அளிக்கலாம்

No comments: