Wednesday, September 11, 2024

ஆசிரியர் மீது மட்டும் ஏன் நடவடிக்கை? முதன்மைக் கல்வி அலுவலர் மீது.....?

கேள்வி கேட்ட ஆசிரியர் சங்கரிடம், முதன்மைக் கல்வி அலுவலர் என்பதை உரிமையோடு பயன்படுத்துகிறார் மகாவிஷ்னு. பத்திரிகையாளர்களிடம் தலைமை ஆசிரியர் தமிழரசி, ‘’முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலில்தான் அனைத்தும் நடந்தது” என்கிறார். பள்ளிக் கல்வி அமைச்சர், பாடநூல் குழு தலைவர், சுகாதார அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்தே இதற்கான அனுமதியை மகாவிஷ்ணு பெற்றுள்ளார் என்பதை அவரது பக்கத்திலியே குறிப்பிட்டுள்ளதை Screen Shot கூறுகின்றன. இந்த நிலையில், தலைமை ஆசிரியரை மற்றும் மாற்றுவது ஏன்? முதன்மைக் கல்வி அலுவலரிடம் விசாரணை கூட நடைபெற்றதாகத் தெரியவில்லை. யாரேனும் ஒருவர் பொறுப்பேற்றுக்கொண்டு பலிகடாவாக்க வேண்டும்.

No comments: