Wednesday, September 11, 2024

தமிழ்க்குரிசில் நினைவேந்தல்

அன்னையை இழந்த பிள்ளைகள் ஆனோம்! இனி வழிகாட்டுவர் யாரம்மா!! அடிப்படையில் திராவிட இயக்க ஆதரவாளராகவும், திமுக காரராகவும் இருந்த, எங்கள் அப்பா (ஆசிரியர் தொ.பா.இராமசாமி) இந்திரா காந்தி இறந்த போது இதனை எழுதி படத்துடன் கிராமத்தில் ஊர்வலமாக வந்த நினைவு இன்றும் இருக்கிறது. தோழர் தமிழ் குரிசில் அவர்களின் மறைவு இந்த வரிகளை நினைவூட்டுகிறது. தாய் தமிழ் பள்ளிகளுக்கும், தாய் தமிழ் கல்வி பணிக்கும் ஒரு அன்னையாக இருந்து அரவணைத்து வழிகாட்டியவர். அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று என்பதே, அவருக்கான அடையாளமும் அவருடைய ஆளுமையும். நினைவைப் போற்றுகிறோம். (03.09.24 முகநூல் பதிவு)

No comments: