Monday, October 25, 2021

வேலையின்மையால் தற்கொலை செய்துகொண்டவர்கள்

2016 ல் 2208 பேர், 

2017 ல் 2404 பேர், 

2018 ல்  2741 பேர் 

2019 ல் 2801 பேர் என, 4 வருடங்களில் மொத்தம் 10, 154 பேர் 

வேலையின்மையால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.  

இத்தகவலை நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுதும் பதிவான வழக்குகளை தொடுக்கும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவர அடிப்படையில் இந்த தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. பெரும்பகுதி தற்கொலைகள் குறித்த வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை என்ற நிலையில் உண்மை எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாகவே இருக்கும். 

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (Centre for Monitoring Indian Economy) மதிப்பீடுகளின்படி பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்ட 2016 நவம்பர் மாதத்தில் 1.29 கோடி பேர் வேலை இழந்தார்கள். 

CMIE மதிப்பீடுகளின்படி வேலையின்மை ஏப்ரல் 2021 ல் 8 சதவீதமாக இருந்தது . தற்போது 11.9 % அதிகரித்துள்ளது . 

2021 ஜனவரி முதல் மே மாதம் வரை 2.53 கோடி பேர் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

- அரசு ஊழியர், அக்டோபர் 2021 இதழில் 

No comments: