Tuesday, October 12, 2021

பார்ப்பனர் மற்றும் சடங்குகள் இல்லாத திருமணம் - 1956 இல்






 1956 இல் 

பேருந்து வசதியில்லாத கிராமத்தில் -

பார்ப்பனர் இல்லாத திருமணம்

--------------------------------------------------------

இருவரும் இன்று உயிரோடு இல்லை. எனது தாய், தந்தையான அவர்களின் திருமண நாள் இன்று.

இன்றும் கூட சரியான பேருந்து வசதியில்லாத சிறிய கிராமம் எங்களுடையது. 1956 இல் போக்குவரத்து வசதி என்பது ? 

இதே நாளில் 65 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் கிராமத்திலேயே நடைபெற்ற எனது தாய்-தந்தையின் திருமணத்தின் வாழ்த்து மடல்.

திருமணத் தம்பதியரான எனது பெற்றோருக்கு திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) வி.வா.சுந்தரம் என்பவர் என்பவர் வழங்கிய 

மு.வ-வின் நண்பர்க்கு என்கிற அன்பளிப்பு நூல். 

இத்திருமணத்தின் முக்கிய சிறப்பு என்னவென்றால் 65 வருடங்களுக்கு முன்பு, ஒரு சிறு கிராமத்தில் பார்ப்பனர் மற்றும் எவ்வித சடங்குகள் இல்லாமல் நடைபெற்ற ஒரு திருமணம். 

அருகே உள்ள பரவளூர் என்கிற கிராமத்தைச் சேர்ந்த பெரியவர் பூமாலை என்பவர் தாலியினை எடுத்துக்கொடுக்க திருமணம் நடைபெற்றுள்ளது.

இப்படி திராவிட இயக்கம், அதன் கொள்கைகளை உள்வாங்கி, எங்கள் மீது எவ்வித ஆதிக்கமும் செய்யாமல் எங்கள் விருப்பத்திற்கு எங்களை வளர்த்தனர் பெற்றோர்.


இதன் தொடர்ச்சியாக, 

எனது அண்ணன் அண்ணாதுரையின் திருமணம் சுயமரியாதைத் திருமணமாக நடைபெற்றது.


என்னுடையது பதிவுத் திருமணமாக மட்டுமே நடைபெற்றது.

No comments: