Sunday, April 26, 2020

வகுப்பறைத் தண்டனையைத் தவிர்ப்பதற்கு வழிகாண்போம்!!


வகுப்பறைத் தண்டனையைத் தவிர்ப்பதற்கு வழிகாண்போம்!!
பத்திரிகைச் செய்தி
-----------------------------------------------------
விழுப்புரம் காமராஜர் நகராட்சி மேனிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. த.பாலு அவர்கள், மாணவனின் காலில் மண்டியிட்டு ‘ஒழுங்கா படிப்பா” என வேண்டிக்கொண்டார். வகுப்பறை தண்டனை ஒழிப்பில் இது ஒரு முன்னுதாரணமாகப் பார்க்கப்பட்டது, இவரின் இச்செயலைப் பாராட்டி மாவட்ட ஆட்சியர் குடியரசு தினவிழாவில் தலைமை ஆசிரியருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பு செய்தார். அதே நேரத்தில் தலைமை ஆசிரியர் தன் நிலையை மறந்து கீழிறங்கி செயல்பட்டுள்ளார் என்ற விமர்சனமும் எழுந்தது.

இந்நிலையில் இதனையொட்டி திண்டிவனம் ரோசனை தாய்த் தமிழ் பள்ளியின் முன்முயற்சியில் தமிழகப் பள்ளிகளில் நிலவும் வகுப்பறைத் தண்டனைகளைத் தவிர்ப்பது குறித்த கலந்துரையாடல் கூட்டம் 04-02-18 விழுப்புரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம், சென்னை மற்றும் குழந்தை நேயப் பள்ளித் திட்டம்-த.நா சார்பில் ஆசிரியர் ஏ.ஸ்ரீதர்; நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை சார்பில் இரா.உஷா; நெய்வேலி தமிழ்ச் சங்கம் சார்பில் ஆசிரியர் வே.சுபச்சந்திரன்;  வாழை அமைப்பு விழுப்புரம் சார்பில் முகுந்தன்;  புனித அன்னாள் சபை சார்பில் சகோதரி பவுலி; திண்டிவனம் தாய்த் தமிழ் பள்ளி சார்பில் முருகப்பன்;  விழுப்புரம் காமராஜர் மேனிலைப் பள்ளித்  தலைமை ஆசிரியர் த.பாலு:  நூறு பூக்கள் அறக்கட்டளை, விழுப்புரம் பேராசிரியர் த.பழமலை; மக்கள் கல்வி இயக்கம், திண்டிவனம் சார்பில் பேராசிரியர் பிரபா கல்விமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.
·
விழுப்புரம் காமராஜர் நகராட்சி மேனிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் த.பாலு அவர்கள் தனது பணிக்காலத்தில் வகுப்பறைத் தண்டனையைத் தவிர்ப்பதற்கும் மாணவர் முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து முயற்சி செய்து வந்துள்ளார். அதற்காக அவரை நாம் பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். 

வகுப்பறைத் தண்டனைக்கு எதிராக உள்ள ஆசிரியர்களை அடையாளங்கண்டு, அவர்கள் மூலம் வகுப்பறைத் தண்டனைக்கான சூழல்களையும், அதனைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும் கண்டறிவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் மாநில அளவில் இதுபோன்று முயற்சிகள் மேற்கொண்டுவரும் ஆசிரியர்களை இனம் கண்டு அவர்கள் அனைவரின் அனுபவங்களை ஒரு தொகுப்பாக வெளிக்கொணர்வது எனத் தீர்மானிக்கப்பட்டத

       வகுப்பறைத் தண்டனையை ஒழிப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்களைத் தொகுப்பது எனவும், இதற்காக மாவட்டந்தோறும் கருத்தறியும் கூட்டங்களை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
· 
தொடக்க நிலை, இடைநிலை, மேல் நிலை மற்றும் கல்லூரி அளவில் வகுப்பறைத் தண்டனையை முற்றிலும் களைவதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு குறிப்பாகக் கல்வித்துறை மேற்கொள்ளவேண்டும். அதற்கு முதற்கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர், மாணவர் மற்றும் பெற்றோர்களின் கருத்தறியும் கூட்டங்களை நடத்துமாறு கேட்டுக்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.

06.02.2018



No comments: