Sunday, April 19, 2020

பழங்குடி இருளர்களுக்கு வாய்ப்புள்ளோர் உதவி செய்யவும்.

பேராசிரியர் கல்யாணி, சகோதரி லூசினா ஆகியோர் ஒருங்கிணைப்பில் ”பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்” 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பழங்குடி இருளர் மக்களுக்கான கல்வி மற்றும் உரிமை சார்ந்தது உள்ளிட்ட பிறசெயல்பாடுகளில்
பலரும் உதவி செய்து வருகின்றனர்.

அன்றாடம் உழைத்து சம்பாதிப்பதன் மூலம் கிடைக்கும் வருவாயில் குறைவான வசதிகளுடன் நிறைவான வாழ்க்கையை வாழும் வழக்கமுடைய பழங்குடி இருளர் மக்கள் பலரும், தற்போதுள்ள ஊரடங்கில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரிசி மட்டும் இருந்தால்கூட போதுமென பலரும் பேராசிரியர் கல்யாணி அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
நண்பர்கள் சிலர் ஒன்றிரண்டு கிராமங்களில் உதவி வருகின்றனர்.
மேலும், கூடுதலாக உதவி தேவைபடுகின்றது.
அதனால்தான் உங்களிடம் இந்த நிவாரண உதவிக் கோரிக்கையினை முன்வைக்கின்றோம்.
பழங்குடி இருளர் குடும்பங்களுக்கு உதவி செய்ய உங்களால் இயன்ற உதவியினை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு :
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்.
பேராசிரியர் கல்யாணி @
பிரபா கல்விமணி –
9442622970 / 9047222970
வங்கிக் கணக்கு விவரம் :
Name : Pirapa kalvimani,
Current A/C No : 19560200001115.
IFSC: FDRL0001956
Federal Bank, Tindivanam Branch.



No comments: