Monday, February 16, 2009

போரை நிறுத்து! - தாய்தமிழ் பிள்ளைகள் கருப்புக்கொடி ஊர்வலம்

ஈழ்த்தமிழினம் மீதான போரை நிறுத்தக்கோரி
திண்டிவனம், உரோசனை,
தாய்த் தமிம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் திண்டிவனத்தில் கருப்புக் கொடி ஊர்வலம் நடத்தினார்கள்.
1 முதல் 5 -ஆம் வகுப்பு வரை உள்ள 10 வயதுக்கும் குறைவான 95 மாணவ, மாணவிகள் சுமார் 2-00 மணி நேரம் திண்டிவனம் நகர் முழுவதும் நடந்துசென்றனர்.
மாணவர்களுடன், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்தவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் உட்பட சுமார் 100 பேர் என ஊர்வலத்தில் 200-க்கும் அதிகமனோர் கலந்துகொண்டனர்.
ஊர்வலத்தில் மாணவர்கள் அட்டைகளுடன், கருப்புக்கொடி ஏந்தி முழக்கமிட்டார்கள். ஊர்வலத்தின் சில புகைப்படங்கள்.































No comments: