Monday, February 2, 2009

முத்துக்குமார் - நினைவேந்தல்


ஈழப் போராட்டத்தில் இந்திய அரசின் போக்கை கண்டித்து சென்னையில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட பத்திரிகையாளர் முத்துக்குமாரின்

நினைவு ஊர்வலம் 28-01-2009 மாலை 5-30 மணியளவில் திண்டிவனம் நேரு வீதியில் நடத்தப்பட்டது. பின்பு 6-15 மணியளவில் காந்தி சிலை அருகில் நினைவுக் கூட்டமும் நடைபெற்றது. நகரக் கல்வி மக்கள் மேம்பாட்டுக்குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர் மு.கந்தசாமி. பேராசிரியர் பா.கல்யாணி, தி.அ.நசீர் அகமது, வழக்கறிஞர்கள் அ.ராஜகண்பதி, மு.பூபால், ஆசிரியர்கள் நவா.ஏழுமலை, க.சாரதி, நடத்துனர் ஏழுமலை, ஓவியர் சங்கர்,

ஆ.வெங்கடேசன், இரா.முருகப்பன், வை.கருணாநிதி, த.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments: