Friday, March 6, 2020

பீப்ஃ கவிதைகள் - பச்சோந்தி

"பண்ணை அடிமையாக மாறி விடுவார்களோ என்ற பயத்தில் ஒவ்வொரு பிள்ளைகளாக ஊரிலிருந்து வெளியேறினர். உதவியாக இருந்தார் அப்பா" என்று முன்னுரையில் அப்பாவை நினைவு கூர்கின்றார்.

நிலமாக இருந்த தாய் இயலாமல் விழுந்ததும் இவருக்கு பெரும்
பாதிப்பாக அமைந்தது. அது அவரவருடைய தாயாரை நினைவுபடுத்துவதாகவும் வருத்தங்களை உருவாக்குவதாகவும் உள்ளது.

முதல் நூலை வெளியிட்ட அன்பு நண்பர் தமிழ் அலை இசாக் இசாக் Ishaq அவர்களை கவிஞர் பச்சோந்திஅவர்கள்
அன்புடன் நினைவு கூறுகிறார்.

கட்டுரைகள், கதை, ஆய்வுக் கட்டுரை, ஆராய்ச்சி உள்ளிட்டவை எழுதுவதற்காக மட்டுமே இதுவரை கள ஆய்வுகளும் பயணங்களும் நடைபெற்றுள்ளது. மாறாத கவிதை எழுதுவதற்காக பெரும் பயணங்களும் கள ஆய்வுகளில் செய்திருப்பது இவர்தான்.

இந்தக் கவிஞர்தான்,
கவிதை எழுதுவதற்காக
முதன் முதலாக ஊர் ஊராகச் சென்று, நிறைய புத்தகங்கள் படித்ததையும் அதுவும் குறிப்பாக மாடு வெட்டுவது தொடர்பாக நேரில் கண்டறிந்து பல இடங்களுக்கு நேரில் சென்று காத்திருந்து கவனித்து எழுதியுள்ளார்.
எவ்வளவு பெரிய கொடுப்பினை.

கவிதை ஆழமாக வரவேண்டும் என்ற எண்ணம் மட்டும் அல்ல மிகப்பெரிய உணர்வும் அதில் உள்ளது என்பதை நாம் அறிய முடிகிறது.

குறிப்பாக "வேள்வியில் எஞ்சிய கவியமுதம்" என்கிற ஒரே ஒரு கவிதை எழுதுவதற்காக மட்டுமே சென்னை பாண்டிச்சேரி மார்த்தாண்டம் திண்டுக்கல் கேரளத்திலுள்ள கொச்சி ஆகிய நகரங்களுக்கு பயணம் செய்து அலைந்து திரிந்து உள்ளார் என்பதை பதிவு செய்துள்ளார்.

ஒரு தேர்ந்த பயணமும் அலைச்சலும் காத்திருத்தலும் பல நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் ஆய்வு செய்தது வருடக்கணக்கில் பலருடன் பேசியதில் இந்த பீஃப் என்ற கவிதை நூல் ஆழமாகவும் பெரும் ஆவணமாகவும் அடையாளமாக உள்ளது.

'நினைவுகளில் அவியும் மாட்டுக்கறி;
தொழுவத்து மருத்துவக் குறிப்புகள்; அக்கிரகாரத்து மாடுகள்;
வழிப்போக்கனின் புலால் நாற்றம்; கோசாலை கோயில் மாடுகள்;
கடைசி பச்சையம் தேசியக் கொடியில்;
தலைகீழ் சந்தை;
அரளிக்காற்றெங்கும் ரத்தநெடி;
எரியூட்டப்பட்ட காம்புகள்;
நிழல்பட்ட மரணம்;
வேள்வியில் எஞ்சிய கறியமுதம்'
ஆகிய தலைப்புகளில் நீண்ட கவிதைகள் உள்ளன.

நீலம் பதிப்பகத்தின் முதல் வெளியீடுகளில் ஒன்றாக வந்துள்ள இந்தக் கவிதை புத்தகம், சம கால அரசியல் மற்றும் மக்களின் வாழ்வனுபங்களை உள்ளடக்கியுள்ளது.

பச்சோந்தி பச்சோந்தி

No comments: