Thursday, January 27, 2011

இந்திய இறையாண்மையும், சட்ட விரோதக் கைதும்

 உயர்நீதி மன்றத்தின் அனுமதியோடு, கடலூர் மணிக்கூண்டு திடலில் 22.01.11 அன்று நடந்த மாவீரர் தின பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பேராசிரியர் பிரபா.கல்விமணி, கூட்டத்தை ஏற்பாடு செய்த தோழர் மு.பாலகுரு உள்ளிட்ட 10 பேரை இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக, கூட்டம் முடியும்முன்னரே போலீசார் கைது கடலூர் மாவட்ட போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட 10 பேரும் கைது செய்யப்பட்டு காவல் நிலையில் கொண்டுசெல்லப்பட்டது முதலே, தங்கள் சட்டவிரோதக்காவலைக் கண்டித்து உண்ணாவிரதம் இருக்கத்தொடங்கினர்.
தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தவர்கள் உடல் சோர்ந்த நிலையில் 26.01.11 அன்று மாலை கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் 25.01.11 மாலை கடலூரில் அனைத்துக் கட்சி மற்றும் இயக்கங்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. சுமார் 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் சட்டவிரோதக் கைதைக் கண்டித்து 31-ஆம் தேதி கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், தொடர்ந்து மாநில அளவில் பலதலைவர்களையும் ஒருங்கிணைத்து பிப்ரவரி 6-ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.










No comments: