Tuesday, November 30, 2010

அடங்காத ஆதிக்கம்

தமிழகத்தில் சில தோட்டங்களை நமக்குத் தெரியும்இவை விவசாயத் தோட்டங்கள் கிடையாதுஅரசியல் அதிகாரத்தோட்டங்கள்ஆனால்அவற்றின் தேவையும்செயலும் யாருக்கானவை என்பது குறித்தெல்லாம் இதுவரை நாம்கவலைப்பட்டது இல்லைராமாவரத் தோட்டம்போயஸ் தோட்டம்கோபாலபுரம் போன்றவையுடன்சில ஆண்டுகளாகதமிழகத்தில் மிகவும் பிரபலமாக உள்ளது திண்டிவனம் அருகில் உள்ள தைலாபுரம் தோட்டம். "சமூக நீதிக் காவலர்', "இரண்டாவது பெரியார்', "பாட்டாளிகளின் தோழன்', "அரசியல் சாணக்கியன்', "ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவன்'என்றெல்லாம் புகழ்ந்து தள்ளப்படும் மருத்துவர் ராமதாசின் இருப்பிடம்தான் தைலாபுரம் தோட்டம்.
திண்டிவனத்திலிருந்து புதுச்சேரிசெல்லும்போது பார்த்திருக்கலாம் –இடது பக்கம் உள்ளமைதானத்தில் பெரியார்அம்பேத்கர்மார்க்ஸ் சிலைகளைக்கொண்டுள்ள தைலாபுரம் தோட்டத்தைஅதற்கு வலதுபக்கமாக உள்ளதுதான் தைலாபுரம் கிராமம். 1017 தலித்வாக்காளர்களையும், 3000 வன்னியர்கள் வாக்காளர்களையும்கொண்டுள்ள கிராமம்.
இக்கிராமத்தின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முகாம்அமைப்பாளர் கண்ணதாசன் அவர்களை நாம் நேரில்சந்தித்தபோது அவர் நம்மிடம் கூறியது : “எங்க தைலாபுரம்பஞ்சாயத்து ரிசர்வ் பஞ்சாயத்து. 2006 உள்ளாட்சித் தேர்தல்லஊர்க்காரங்க ஆதரவோட நின்னவங்க ஜெயிச்சிடுறாங்கநாங்கதோத்துடுறோம்அதுல இருந்து ஊர்க்காரங்க எங்களைஎல்லாம் எதிரியாவே பார்க்க ஆரம்பிச்சாங்கஅதை எல்லாம்கிளியனூர் போலிசுல புகார கொடுத்தாவழக்கும் போடறதுஇல்லரசீதும் கொடுக்கறது இல்லஇதுவரைக்கும் 10–க்கும் மேல புகார் கொடுத்திருக்கோம்ஒண்ணுலகூட வழக்குப்போடலகிளியனூர் காவல் நிலையத்தில் பா...வில் உள்ள என்.எம்கருணாநிதியோட சொந்தக்காரர் ஏழுமலைபோலிசா வேலை செய்றார்அந்தக் காவல் நிலையத்துல வன்னியர்களோட அமைச்சர் மாதிரி அவர் வேலை செய்றார்.வன்னியர் பேர்ல கொடுக்கிற எந்தப் புகார்லயும் நடவடிக்கை எதுவும் எடுக்காம பார்த்துக்கிறதுதான் அவரோட முமுநேரவேலையா இருக்கு.
இந்த நிலைமையிலதான் ஈழப் பிரச்சனையை ஒட்டி எங்க கட்சித் தலைவர் உண்ணாவிரதம் இருக்காருஅப்பஇந்தபோலிஸ் லிமிட்ல உள்ள நல்லாவூர் கிராமத்துல பஸ் எரிஞ்ச வழக்குலஎந்த வகையிலும் தொடர்பில்லாத என்னைவேணும்னே சேர்த்தாங்கபுது ஸ்பிளன்டர் வண்டியோட என்னைக் கைது செஞ்சாங்கவண்டிய போலிசு இதுவரைக்கும்திருப்பித் தரல.
மெயின் ரோட்டில் இருந்து எங்க ஊருக்குள்ள வந்ததும் ஊருக்கும்காலனிக்கும் ரோடு தனியா பிரியும்அதுல எங்ககாலனிக்கு ரோடு பிரியற எடத்துலகாலங்காலமாக நாங்க திருவிழா காலத்துல நாடகம் போடுவோம்அப்படித்தான்இந்த வருசமும் திருவிழா ஆரம்பிச்சதும் நாடகம் போடமேடையெல்லாம் அமைச்சோம். “இவ்வளவு நாள் உங்களுக்குஇடம் கொடுத்ததே தப்புரொம்ப திமிர் ஏறி ஆடிக்கிட்டு இருக்கீங்கஇனிமே இங்க உங்களுக்கு எதுக்கும் இடம்கிடையாதுஎதுவும் நடத்தக் கூடாதுஇவ்வளவு நாள் உங்கள விட்டுவச்சதே தப்பு'' என்று கூறி நாடக மேடையைஉடைத்து பிய்த்து எறிந்தார்கள் வன்னியர்கள்நாங்க உடனே புகார் கொடுத்தோம்போலிஸ் எல்லாம் வந்தாங்கவழக்கம்போல வழக்கு எதுவும் போடலவானூர் தாலுக்கா ஆபிசுல அமைதிக் கூட்டம் நடத்துனாங்க.
இந்த நிலைமையிலதான் எங்க தலைவரோட பிறந்த நாளுக்காக ஆகஸ்ட் 16 ஆம் தேதிபோலிசிடம் அனுமதி வாங்கிதலைவரோட பேனர் வைச்சோம்கட்டிய அடுத்த நிமிடமே கூட்டமாக வந்த வன்னியர்கள், “உங்களதான் இனிமே இங்கேஎதுவுமே செய்யக் கூடாதுன்னு சொல்லியிருக்கோம்அப்புறம் என்னடா பேனர் கட்றீங்க'' என்று கூறி கட்டிய பேனரைபிடுங்கி கிழித்து எறிந்தார்கள்உடனே போலிசுக்கு தகவல் கொடுத்தோம்வந்து பாத்தாங்கஎந்த நடவடிக்கையும்எடுக்கலஅதுக்கப்புறம்எங்க கட்சியோட மாநிலமாவட்டஒன்றிய நிர்வாகிகள் எல்லாம் சேர்ந்து கிளியனூர் காவல்நிலையம் சென்று புகார் கொடுத்தோம்எங்க கட்சியைச் சேர்ந்தகிளியனூர் பஞ்சாயத்து தலைவர் இரணியனும் கூடவந்தாருவழக்கம்போல எந்த நடவடிக்கையும் எடுக்கலரசீது மட்டும் கொடுத்தாங்க.
இப்படி நாங்க எல்லாம் போலிஸ் ஸ்டேஷன்ல இருக்கும்போதுகாலனியில் புகுந்த 150–க்கும் மேற்பட்ட வன்னியர்கள்,தலித்துகளின் வீடுகளை அடித்துஉடைத்து சேதப்படுத்தினார்கள்வீடுகளில் இருந்த டி.வி., டி.வி.டி., மிக்சிகிரைண்டர்,பாத்திரங்களையும் உடைத்தார்கள்பித்தளைப் பாத்திரங்களை எல்லாம் திருடிச் சென்றார்கள்வீடுகளில் கட்டியிருந்தஆடுமாடுகளை எல்லாம் கொடுவாளால் வெட்டிக் கொன்றார்கள்கூரை வீடுகளுக்கு தீ வைத்துள்ளார்கள்.கண்ணில்பட்ட தலித்துகளை எல்லாம் தாக்கினார்கள்இரு பெண்களுக்கு கடுமையான காயம் ஏற்பட்டது.
நடவடிக்கை எடுக்கக் கோரி கிளியனூரில் சாலை மாறியல் செய்தோம். “தகவல் அறிந்து எஸ்.பிவந்துகொண்டிருக்கிறார்அவர் கட்டாயம் நடவடிக்கை எடுப்பார்சாலை மறியலைக் கைவிடுங்கள்'' என்று போலிசார் கேட்டுக்கொண்டதன் பேரில் சாலை மறியலைக் கைவிட்டோம்விழுப்புரத்திலிருந்து வந்த எஸ்.பிஅமுல்ராஜ்நேராககாலனிக்குள் சென்று வன்னியர்களால் அடித்து சேதப்படுத்தப்பட்ட வீடுகளையும்காயம் பட்டவர்களையும்பார்வையிட்டார்வழக்குப் பதிவு செய்யச் சொல்லி, 28 வன்னியர்களைக் கைது செய்து வண்டியில் ஏற்றினர்எஸ்.பி.யுடன் வந்திருந்த போலிசார்.
உடனே ஒன்று கூடிய வன்னியர்கள் எஸ்.பி.யின் வாகனத்தை சூழ்ந்து நின்றுகைது செய்யப்பட்ட வன்னியர்களைவிடுவிக்க கட்டாயப்படுத்தினார்கள்இரண்டு மணி நேரம் வன்னியர்களின் முற்றுகையில் இருந்த எஸ்.பி.யால்வெளியேறி கிளம்ப முடியாத நிலையில்போலிசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்கைதுசெய்யப்பட்டவர்களை போலிசார் அழைத்துச் சென்றனர்அதனால்வன்னியர்கள் போலிசாரின் வாகனங்களையும்,நின்றிருந்த பஸ்உட்பட பிற வாகனங்களையும் அடித்துஉடைத்து சேதப்படுத்தினார்கள்இதை செஞ்சது எல்லாம்வன்னியர்கள்ஆனால்கிளியனூர் போலிசார் கேசுல எங்களையும் சேத்தாங்க.
இது மட்டும் இல்லாமசாலை மறியல் செஞ்சதுக்கும் எங்கமேல புது வழக்குப் போட்டு 8 பேரை கைது செய்தார்கள்.பாதிக்கப்பட்ட நாங்கதான் சிறைக்கும் போக வேண்டியதா இருக்குஇதைக் கண்டிச்சு விடுதலைச் சிறுத்தைகள் சார்பாகபெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம்அதுக்கப்புறமும் எந்த நடவடிக்கையும் எடுக்கலஅமைதிக் கூட்டத்துலவீடுகள்பாத்திரங்கள் சேதப்படுத்தப்பட்டது தொடர்பா எதுவும் பேசலபள்ளிக்கு படிக்கப் போற எங்க பசங்கள, “பறப்பசங்க எதுக்குடா நீங்க பேண்டு சட்ட போட்டு வர்ரீங்கசாக்கு கட்டிகிட்டு வந்து தனியா உட்காருங்கடா என்றுபள்ளியில் உள்ள வன்னியர் மாணவர்கள் மிரட்டுகின்றனர்.
அமைதிக் கூட்டம் நடந்த அடுத்த நாள்ஊரில் வன்னியர் சங்கம் உறுப்பினர் சேர்ப்பு விழாவும்பொதுக்கூட்டமும்நடத்தினார்கள்இந்தக் கூட்டத்துல தி.மு.., .தி.மு.., .தி.மு.., தே.மு.தி.ன்னு எல்லா கட்சியில இருந்தும் சுமார்500 வன்னியர்கள் பா..கட்சியிலயும்வன்னியர் சங்கத்துலயும் சேர்ந்தாங்கஇந்தக் கூட்டத்துல பேசிய காடுவெட்டிகுரு, “மாட்டை தெய்வமாக நாம் கும்பிடுறோம்அந்த மாட்டை அடித்துவெட்டித் திங்கற கீழ் சாதிக்காரங்க நம்மளைஎதிர்க்கிறதாதமிழ் நாட்ல உள்ள 2 கோடி பேரும் நாம் ஒண்ணா இல்லாததால்காலனிக்காரன் நமக்கு சமமா பேசறான்.எவ்வளவு தைரியம் இருந்தா போலிசு ஊருக்குள்ள புகுந்துநம்மள புடிச்சிகிட்டுப் போவான்எங்க ஊரா இருந்தா உள்ளநுழைஞ்ச போலிசு வெளியில வந்திருக்க முடியாதுஇப்படி ஒரு காலனியும் இருக்காதுகாலி பண்ணியிருப்பேன்''ன்னுபேசறாரு.''

No comments: