Friday, July 2, 2010

இலங்கை ராணுவத்தின் போர் குற்றம்

வெளிநாடுகளிலும் இலங்கை இராணுவம் போர் குற்றம்: மறைக்கப்பட்டதா ?

ஹைட்டி நாட்டில் ஐ.நாவின் அமைதிப்படை சென்றபோது இலங்கையில் இருந்து சுமார் 114 இலங்கை இராணுவத்தினரும் சென்றிருந்தனர். 2007 நவம்பர் மாதத்தில் சுமார் 16 வயது நிரம்பிய சிறுமியுடன் உடலுறவில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக் காரணமாக, பல இலங்கை இராணுவத்தினரை ஐ.நா திரும்பவும் இலங்கைக்கு அனுப்பியது. வறுமையில் வாடும் சிறுமியருக்கு உணவைக் கொடுத்தும், அல்லது சிறு பணத்தைக் காட்டியும், அவர்களை கரும்புத் தோட்டங்களில் பலாத்காரமாகக் கெடுத்துள்ளது இலங்கை இராணுவம்.

இது குறித்து நேரடி சாட்சியாக ஜோகானா உள்ளார். பாதிக்கப்பட்ட இப் பெண் தெரிவிக்கையில், தனக்கு உணவு தருவதாகக் கூறி தன்னைக் கூட்டிச் சென்ற இலங்கை இராணுவத்தினர் தன்னை கற்பழித்ததாகத் தெரிவித்துள்ளார். இவரது சாட்சியை ஏன் தமிழ் அமைப்புகள் இன்னும் சரிவரப் பயன்படுத்தவில்லை. குற்றம் இழைத்த அனைத்து இராணுவத்தினருக்கும் தகுந்த தண்டனை வழங்கப்படவேண்டும் என ஐ.நா கோரியிருந்தும், இது குறித்து இலங்கை அரசு தீர்க்கமான முடிவு எதனையும் மேற்கொள்ளவில்லை.

இலங்கை இராணுவத்தினரின் இக் குற்றசெயல்கள் தொடர்பான ஆவணங்களை ஹைட்டி நாட்டில் இருந்து பெற்று, போர் குற்றங்களை முன்னெடுக்கும் தமிழ் அமைப்புகள் இதனையும் ஒரு சாட்சியாக வைத்து ஐ.நா நிபுணர்கள் குழுவிடம் சமர்ப்பிக்கவேண்டும்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4070

No comments: