Monday, October 25, 2021

பஞ்சாப் - போராட்டம்-உத்தம்சிங்

ரெளலட் சட்டத்தை எதிர்த்தும், திரும்பப் பெறக்கோரியும் பஞ்சாபில் போராட்டம் நடத்தக் கூடிய மக்கள்தான் முதல் படம்.

தங்களை எதிர்க்க நினைத்தால் அச்சம்வரவேண்டும் என்பதற்காக, பிரிட்டிஷார் திட்டமிட்டு நடத்திய  ஜாலியன்வாலாபாக் படுகொலைதான் சம்பவம்தான்

அடுத்த இரண்டு படங்கள்.

பிரிட்டிஷார் செய்த இந்தப் படுகொலைக்கு கொஞ்சமும் குறைவில்லாதது, இப்போது  விவசாயச் சட்டங்களை திரும்பப்பேற கோரி போராட்டம் நடத்தும் பஞ்சாப் விவசாயிகள் மீது கார் ஏற்றி பாஜக அரசு செய்த படுகொலை. 





உத்தம்சிங்

இந்திய விடுதலைப் போராட்டத்தை பஞ்சாப்பிலிருந்த பகத்சிங் உள்ளிட்டோர் உயிர்ப்போடு எடுத்துச்சென்றனர். உத்தம சிங்கும் மிக முக்கியமானவர் என்பதை இப்படம் உணர்த்துகின்றது.

இப்போதுள்ள இந்தியக் கொடுங்கோலாட்சிக்கு எதிரான போராட்டங்களையும் பஞ்சாப்தான் உயிர்ப்போடு ஏந்திச் செல்கிறது.

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிவாங்கதான் ஜெனரல் டயரை லண்டனில், உத்தமசிங் கொலை செய்தார் என இதுவரை சொல்லப்பட்டு வந்தது.

ஆனால், இந்தப் படத்தில், நீதிமன்ற விசாரணையின்போது உத்தம்சிங் சொல்வார், "நான் குற்றமிழைக்கவில்லை. பிரிட்டாஷாரைக் கொலை செய்யவில்லை. பழிவாங்கவும் இல்லை. நான் சுதந்திரப் போராட்ட வீரன். இது என்னுடைய போராட்டம்" என்கிறார்.

இன்னும் நுணுக்கமான பலக் காட்சிகள் உள்ளன. ஜாலியன்வாலாபாக் படுகொலையினை ஏறக்குறைய 30 நிமிடம் காட்சிப் படுத்தியுள்ளனர். 

ஜெனரல் டயர் சுடும் காட்சியும், ஆயிரக்கணக்கான மக்களின் மரணத்தையும் ஒரு சில நிமிடங்களில் காட்டிவிடுவார்கள். ஆனால், உத்தம்சிங்க அவ்விடத்திற்குச் சென்று, அவதியுறுவதும், காயம்பட்டோரை தேடிப்பிடித்து காப்பாற்றும் காட்சிகள் கொடூரமாக உள்ளன. மனதை பதைபதைக்கச் செய்கின்றது.