Monday, January 4, 2021

தொற்றிடம் தோற்காத கல்வி - 100 வது நாளைக் கடக்கும் நுண் வகுப்பறை.

 தொற்றிடம் தோற்காத கல்வி..

100 வது நாளைக் கடக்கும் நுண் வகுப்பறை
----------------------------------------------------------
சாதாரண காலங்களிலேயே கல்வியில் இடை நிற்றல் இருக்கும். இந்தக் கொரோனா காலத்தில் இடை நிற்றல் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. கல்வியிலிருந்து குழந்தைகள் விலகினால், மீண்டும் அவர்களை கல்விக்கு கொண்டுவருவது பெரும் சவாலான ஒன்றாகிவிடும். இதனைத் தவிர்க்க, நாங்கள்
தாய்த் தமிழ் பள்ளி திண்டிவனம்
பள்ளியில்,
சூலை 15 அன்று நுண் வகுப்பறை மூலம், குழந்தைகளின் வீடுகளையே கற்றல் மையமாக்கி கல்வி கற்பிக்கத் தொடங்கினோம் நேற்று 100-வது நாளை அடைந்தோம்.
பள்ளியையும், கல்வியையும், குழந்தைகளையும் உயிர்ப்போடு வைத்திருக்கும் தாய்த்தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு இந்நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
கொரோனா தொற்றிடம் தோற்காத கல்வி அளிக்கும் நுண் வகுப்பறை 100-வது நாளை தாண்டியுள்ளோம்.
தினந்தோறும் உணவளித்து உதவி வரும் நல் உள்ளங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..

(31.12.2020)








No comments: