Wednesday, March 24, 2010

தமிழகத்தின் பல பகுதிகளிலும் போலீசாரின் என்கவுன்டர்கள் தொடர்ந்து அதிகரித்தபடி இருந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம் மதுரை என அடுத்தடுத்து கொலைகளைச் செய்தனர் தமிழகப் போலீசார். இந்தக் கொலைகள் தமிழகத்தில் எந்தவித அதிர்வையும் ஏற்படுத்தவில்லை. சாலை விபத்துகளைப் போன்ற சாதாரண நிகழ்வுகளாக மாற்றினர் போலீசார்.
இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராபர்ட் சந்திரகுமார், கடந்த 4 ஆண்டுகால தி.மு.க ஆட்சியில் நிகழ்ந்த 26 என்கவுன்டர் படுகொலைகளுக்கும் சி.பி.ஐ விசாரணைக் கேட்டு வழக்கு தொடுத்தார். விசாரணைக்கு ஏற்ற மதுரை உயர்நீதிமன்றம் 25&03&10 அன்று சி.பி.ஐ, மற்றும் அரசு அதிகாரிகளுக்கு அழைப்பானை அனுப்பியுள்ளது. வழக்கறிஞர் ராபர்ட் சந்திரகுமார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கீழே உள்ளது

அனுப்புநர்

இ. இராபர்ட் சந்திரகுமார்
வழக்கறிஞர்,
த/பெ. கோ.இம்மானுவேல்,
எண். 99இ வழக்கறிஞர் வளாகம்,
உயர்நீதிமன்றம்,
மதுரை.23

பெறுநர்

உயர்திரு. உள்துறை செயலர் அவர்கள்,
தலைமைச் செயலகம்,
புனித ஜார்ஜ் கோட்டை,
சென்னை

ஐயா,

பொருள் : கடந்த 16.02.2010 செவ்வாய் கிழமை நண்பகல் சுமார் 12.20 மணியளவில் மதுரை தெப்பக்குளத்தில் இருந்து இராமநாதபுரம் செல்லும் சாலையில் உள்ள காவல் சோதனை சாவடியில் வைத்து கல்மண்டையன்(எ)முருகன் (27/10) த/பெ.ஆறுமுகம், மற்றும் கவியரசு த/பெ. மச்சக்காளை ஆகியோரை என்கவுண்டர் என்;ற பெயரில் சுட்டுக்கொலைசெய்த, மதுரை மாநகர காவல்துறை உதவி ஆணையாளர் வெள்ளைத்துரை மற்றும் அவரது தலைமையிலான காவலர்கள் மீதும், கீரைத்துறை காவல்நிலைய சார்புஆய்வாளர் தென்னரசு, மதுரை தெப்பக்குளம் காவல்நிலைய தலைமைகாவலர் கணேசன் ஆகியோர் மீதும் கொலை வழக்கு பதிவுசெய்ய வேண்டியும். இவ்வழக்கினையும் தமிழகத்தில் 2006ல் இருந்து; மோதல்சாவுகள் என்ற பெயரில நடத்தப்பட்ட காவல்துறை உயர்அதிகாரிகளின் நேரடி பார்வையிலும் திட்டத்திலும் நடந்த 26; கொலைகளை ஊடீஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடுமாறும் வேண்டி மனு

நான் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு கட்டுரைகளை எழுதியும், மனித உரிமைகள் தொடர்பான பயிற்சி வகுப்புகளை எடுத்தும் வருகிறேன். மேலும் பல்வேறு மனித உரிமை ஆர்வலர்களுடனும் அமைப்புகளோடும் இணைந்து மனித உரிமை மீறல்களுக்கு எதிரான சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறேன்.
இந்நிலையில் கடந்த 16.02.2010 செவ்வாய் கிழமை அன்று நண்பகல் 12.20 மணியளவில் மதுரை தெப்பக்குளத்தில் இருந்து இராமநாதபுரம் செல்லும் சாலையில் உள்ள காவல் சோதனை சாவடியில் வைத்து மதுரை மாவட்டம்இ நரிமேட்டைச் சேர்ந்த கல் மண்டையன் (எ) முருகன் (27ஃ10) தஃபெ.ஆறுமுகம் மற்றும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆரியப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மச்சக்காளை மகன் கவியரசு (32ஃ10) ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் வந்தபோது மதுரை கீரைத்துறை சார்பு ஆய்வாளர் தென்னரசு இருவரையும் மறித்து விசாரித்தாகவும் உடனே இரண்டு காவலர்களை பட்டா கத்தியால் தாக்கியதாகவும் இதனால் மதுரை மாநகர் காவல்துறை உதவி ஆணையர் வெள்ளைத்துரை மற்றும் கீரைத்துறை காவல்நிலைய சார்பு ஆய்வாளர் தென்னரசு, தெப்பக்குளம் காவல்நிலைய தலைமை காவலர் கணேசன் (குற்றப்பிரிவு) ஆகியோர் என்கவுண்டர் என்ற பெயரில் சுட்டுக் கொலை செய்தனர் என்ற செய்தியை நான் அன்றைய (16.02.2010) மாலை நாளிதழ்களிலும் மற்றும் மறுநாள் 17.02.2010 தினசரி நாளிதழ்களிலும், தொலைக்காட்சியிலும் பார்;த்தேன்.
இதனைத் தொடர்ந்து மேற்படி என்கவுண்டர் தொடர்பான உண்மை நிலையை கண்டறிவதற்காக நிகழ்வு நடந்த இடத்தை அன்றைய தினம் இரவே நேரில் சென்று பார்த்ததோடு மேற்படி என்கவுண்டரில் இறந்து போன இருவரின் உடல் வைக்கப்பட்டிருந்த மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனைக்கு சென்றேன். பின்னர் மேற்படி என் கவுண்டரில் கொலை செய்யப்பட்ட கல் மண்டையன் (எ) முருகனின் தாயார் குருவம்மாள் மற்றும் உறவினர்களை சந்தித்து மேற்கண்ட சம்பவத்தின் உண்மை நிலையைக் கேட்டறிந்தேன்.
மேற்படி என்கவுண்டர் நடந்த 16.02.2010ம் தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பதாகவே 14.02.2010 அன்று இரவு 12 மணியளவில் மதுரை நரிமேட்டில் உள்ள கல் மண்டையன் (எ) முருகனின் வீட்டிற்குள் மதுரை கீரைத்துரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தென்னரசு, தெப்பக்குளம் காவல்நிலைய தலைமை காவலர் கணேசன் மற்றும் அவர்களது தலைமையிலான சீருடை அணியாத 7 போலீசார்கள் அத்துமீறி நுழைந்தும் கல் மண்டையன் (எ) முருகனின் தாயார் குருவம்மாளிடம் அவரது மகனை எங்கு இருக்கிறான் என மிரட்டி லத்தியால் அவரது பின் புறத்தில் அடித்துள்ளனர். மேலும் கல் மண்டையன் (எ) முருகன் எங்களிடத்தில் சரண்டர் ஆகும் வரை உங்களை காவல்நிலையத்திலேயே அடைத்து வைக்கப் போகிறோம் என்று மிரட்டியதோடு முருகனின் தாயார்; குருவம்மாள் அவரது, அக்கா, தனலெட்சுமி, அக்கா மகன் கலைவேந்தன் அக்கா கணவர் செல்வம், தம்பி மணி மற்றும் பெரியப்பா மகன் மலைச்சாமி மற்றும் பெரியப்பா மகன் ராக்கு ஆகியோரை மேற்படி எஸ்.ஐ. தென்னரசு தலைமைக் காவலர் கணேசன் ஆகியோர் போலீஸ் ஜீப்புக்குள் மதுரை மாநகர காவல்துறை உதவி ஆணையாளர் வெள்ளைத்துரைக்கு முன்பாக அழைத்து சென்று தகாத வார்த்தைகளால் திட்டி கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
மேலும் கல் மண்டையன் (எ) முருகனின் குடும்பத்தினரிடமும் கல் மண்டையன் எங்கிருக்கிறான் என அடையாளம் காட்டுமாறும் இல்லையெனில் குடும்பத்தினர் அனைவர் மீதும் கஞ்சா வழக்கு போட்டு ஜென்மத்திற்கும் வெளியே வரமுடியாதபடி செய்துவிடுவோம் என மிரட்டியதோடு கல் மண்டையனின் தம்பி மணி, செல்லப்பா மகன் ராக்கு, மற்றும் மலைச்சாமி ஆகியோரை கைகளை மேலே து}க்கச் சொல்லிவிட்டு லத்தியால் பின்புறத்தில் தாக்கியுள்ளனர். அவர்கள் அடிபடுவதிலிருந்து தவிர்ப்பதற்காக கையை நீட்டியதால் மணி, மலைச்சாமி ஆகியோரது கை மணிக்கட்டு மற்றும் விரலில் பலத்தக் காயம் மற்றும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மேற்கண்ட அனைவரையும் மதுரை தெற்குவாசல் காவல்நிலையத்தில் இரவு முழுவதும் சட்டப்புறம்பாக அடைத்து வைத்திருந்தனர்.
மேலும் கல் மண்டையனின் அக்கா மகன் கலைவேந்தனை ஜீப்புக்குள வைத்தே கன்னம், காது, முட்டியில் காலாலும், கையாலும் அடித்திருக்கின்றனர். மேற்கண்ட நிகழ்வுகளுக்கு பின்னர் கல் மண்டையன் என்ற முருகன் 14.02.2010 அன்று காலை சுமார் 5.15 மணிக்கு சார்பு ஆய்வாளர் தென்னரசுவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னை எதற்காக தேடுகிறீர்கள் என கேட்டதற்கு ஒரு சிறிய விசாரணை இருக்கிறது. அதற்கு நீயும் உனது நண்பன் உசிலம்பட்டி, ஆரியப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கவியரசும் வந்து எங்களுக்கு ஒத்துழைத்தால் போதும் என்று கூறியுள்ளனர். அதோடு கல் மண்டையனிடம் (எ) முருகனிடம் அவரது குடும்பத்தினர் அனைவரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீ காவல்நிலையத்திற்கு வரவில்லையெனில் நாங்கள் அனைவரும் சாவதை தவிர வேறு வழியில்லை என கூறியதை தொடர்ந்து கல் மண்டையன் (எ) முருகன் தனது குடும்பத்தை விட்டுவிடுமாறும் தான் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி திம்மபுரம் சுடுகாட்டில் இருப்பதாகவும் கூறியுள்ளார். பிறகு கல் மண்;டையன் என்ற முருகனின் பெரியப்பா மகன் ராக்கு மற்றும் மலைச்சாமியை அழைத்துக் கொண்டு திம்மபுரம் சுடுகாட்டிற்கு முருகனை தேடி சென்றுள்ளனர். அங்கே கல்மண்டையன் (எ) முருகன் தானாகவே போலீசாரிடம் சரணடைந்துள்ளார்;. அதன்பிறகு காலை 10 மணிக்கு கல் மண்டையனின் குடும்பத்தினரை காவல்துறை உதவி ஆணையாளர் வெள்ளைத்துரை மற்றும் கீரைத்துறை காவல்நிலைய சார்பு ஆய்வாளர் தென்னரசு ஆகியோர் எழுதி வாங்கிக் கொண்டு வெளியேவிட்டுள்ளனர்.
பின்னர் கல் மண்டையன் என்ற முருகன்;, கவியரசு ஆகியோரை பிடித்த உதவி காவல்துறை ஆணையர் வெள்ளைத்துரை மற்றும் சார்பு ஆய்வாளர், தென்னரசு, தலைமைக் காவலர் கணேசன் ஆகியோh,; முருகன் மற்றும் கவியரசு இருவரையும் 14.02.2010 மற்றும் 15.02.2010 முழுவதும் கடுமையாக தாக்கியுள்ளனர். மேற்கண்ட சித்ரவதைகள் அனைத்தும் முடிந்த பின்னரே கடந்த 16.02.2010 அன்று மதுரை தெப்பக்குளம் முதல் விரகனு}ர் சுற்றுச்சாலை வரை காலை சுமார் 11.30 மணியில் இருந்து பொதுமக்கள் போக்குவரத்துக்கும் வாகனம் செல்வதற்கும் மதுரை மாநகர காவல்துறையினரால் தடைசெய்யப்பட்டு ;பின்னர் நண்பகல் 12.20 மணியளவில் காவல்துறை உதவி ஆணையாளா மற்றும் அவரது தலைமையிலான காவலர்கள், சார்பு ஆய்வாளர் தென்னரசு, தலைமை காவலர் கணேசன் ஆகியோர், மோதல் சாவுகள் என்ற பெயரில் கொடூரமாக, மனித தன்மையற்று, இயற்கை நீதிக்குப் புறம்பாக சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
தமிழகத்தில் 2006 முதல்; கீழ்கண்ட கொலைகள் தமிழக காவல்துறையினரால் நிகழ்த்தப்பட்டுள்ளன

பெயர் முகவரி மாவட்டம்
1. ராஜன் என்ற உருண்டை ராஜன் (25) வடக்கு குண்டல் கிராமம் கன்னியாகுமரி
2. நூகூர் மீரான் (35) புக்தவச்சலம் காலனி, வியாசர்பாடி, சென்னை
3. செந்தில்குமார் (29) செல்வகணபதி நகர், திருவேற்காடு, சென்னை
4. குமார் என்ற பங்கு குமார் கோத்தவால்சாடி தெரு, சைதாப்பேட்டை சென்னை
5. வெள்ளை ரவி, வியாசர் பாடி சென்னை
6. குணா, வியாசர் பாடி சென்னை
7. ரவி என்ற முட்டை ரவி (35) புpச்iசாண்டார் கோயில், மணச்சநல்லு}ர் தாலுகா, திருச்சி
8. கிருஷ்ணன் என்ற கொரகிருஷ்ணன் (எ) 7) திருக்காளிமேடு, காஞ்சிபுரம்
9. அசோக் (21) சு10ணாம்பேடு கிராமம், செய்யூர் சென்னை
10. மாரிமுத்து என்ற டோரி மாரி (32) மீனாட்சிபள்ளம், காஜா தெரு, தெற்குவாசல் மதுரை
11. சங்கர் என்ற மணல்மேடு சங்கர் களத்து}ர், மணல்மேடு, நாகப்பட்டினம்
12. மிதுன் சக்கரவர்த்தி (27) மருதாநல்லு}ர், கும்பகோணம் தஞ்சாவூர்
13. பாம்பாலாஜி தஞ்சாவூர்
14. ஜெயக்குமார் (33) காந்தி சாலை, பணியநகர், து}த்துக்குடி
15. சுடலை மணி (24) போல்டன் புரம் 2வது தெரு, து}த்துக்குடி
16. நவீன் பிரசாத் வடகவுஞ்சி, கொடைக்கானல் திண்டுக்கல்
17. கோபி (28), அக்கரைப்பட்டி கிராமம், ராசிபுரம் நாமக்கல் மாவட்டம்
18. தெய்வேந்திரன், கீழக்கூடலு}ர், உத்தமபாளையம் தாலுகா தேனி
19 சண்முகம் அரண்மணை சிறுவயல், காரைக்குடி சிவகங்கை
20. தனசேகரன் பழனிபேட்டை, அரக்கோணம் வேலு}ர்
21. சந்தரமூர்த்தி (37) குன்னு}ர் புது}ர் கிராமம், கிருஷ்ணன்கோவில், திருவில்லிபுத்து}ர் விருதுநகர்
22. செந்தில் என்ற குரங்கு செந்தில் (30) விளாந்திடல் சமுத்திரம்
23. பாண்டியன் சவுரியார் பாளையம், பேகம்பூர் திண்டுக்கல்
24. வேலு (40) நந்திவரம், கூடுவாஞ்சேரி, காஞ்சிபுரம்

இவர்கள் தவிர மதுரையில் தெப்பக்குளம் பகுதியில் கவியரசு, கல்மண்டையன் ஆகிய இருவர் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர். இவர்களையும் சேர்ந்து சுட்டு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆகிறது.
இவ்வாறு கொலைகளில் ஈடுபடுபவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்ற தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் இருந்த போதிலும் அந்த போலி மோதல்களில் ஈடுபட்டவர்களுக்கு அரசு முறையற்ற பதவி உயர்வும், அக்கொலைகளில் ஆயுதமற்ற மனிதனை சுற்றி நின்று மிகவும் அண்மையில் நின்று கோழைத்தனமாக சுட்டு கொல்பவர்களுக்கு வீரர்களைப் போன்ற ஊடக சித்திரிப்பும் கிடைப்பதால் மறுபடியும் மறுபடியும் இந்தக் கோழைத்தனமான கொலைகள் தமிழகத்தில் நிகழ்த்தப்படுகின்றன.
எனவே, தேசிய மனித உரிமைகள் ஆணையம் வரையறுத்துள்ள மோதல் சாவுகள் நிகழ்வுகளின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை பின்பற்ற வேண்டியும், கடந்த 16.02.2010ல் மதுரையில் மோதல் சாவுகளை நிகழ்த்திய காவல்துறை உதவி ஆணையாளர் வெள்ளைத்துரை மற்றும் அவரது தலைமையிலான போலீசார்கள, கீரைத்துறை காவல்நிலைய சார்பு ஆய்வாளர் தென்னரசு, தெப்பக்குளம் காவல்நிலைய தலைமைக் காவலர் கணேசன் ஆகியோர் மீது கெலை வழக்கு பதிவு செய்வதோடு மட்டுமின்றி, இவ்வழக்கினையும் தமிழகத்தில் 2006ல் இருந்து; மோதல் சாவுகள் என்ற பெயரில நடத்தப்பட்ட காவல்துறை உயர்அதிகாரிகளின் நேரடி பார்வையிலும் திட்டத்திலும் நடந்த 26; கொலைகளை ஊடீஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
இடம் : மதுரை ஐ.இராபர்ட் சந்திரகுமார்.
நாள் : 19.02.10

Tuesday, March 23, 2010

பெண்கள் நிமிடத்துக்கு நிமிடம் நொடிக்கு நொடி

பெண்கள் மீதான வன்முறைகள்
சில அதிர்ச்சித் தரவுகள்

- நிஷா



பெண் மீதான அடக்குமுறை காலத்துக்குக் காலம் வெவ்வேறு வடிவம் பெறுகின்றது. கடந்த சில தசாப்தங்களில் பெண் மீதான அடக்குமுறைகள், அவள் மீதான உடல், உள ரீதியான வன்முறைகளாக மாற்றம் பெற்றுள்ளன.



அதிலும் பெண் குடும்பத்தில் தமக்கு மிகவும் நெருக்கமானவர்களாலேயே, தெரிந்தவர்களாலேயே அதிகளவில் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றாள். நாம் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றோம் என்பதை அறிந்திருந்தும் அதை எதிர்த்துக் குரல் எழுப்ப முடியாதவர்களாய், அனேக பெண்கள் இருக்கையில், தம்மை அடித்துத் திருத்தும் உரிமை கணவனுக்கு இருப்பதாக எண்ணும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமானதாக இருக்கின்றது. அவ்வாறு தம் மீதான வன்முறைகளை எதிர்க்கப் பெண்கள் துணியாத நிலையில் அவர்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் பெருகிவிடுகின்றன.



பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் ஐ. நா. மற்றும் உலக உணவு ஸ்தாபனம் என்பன வெளியிட்டுள்ள அறிக்கையில் பல அதிர்ச்சித் தரவுகள் வெளியாகியுள்ளன. அதன் பிரகாரம், 1000 பேரைக் கொண்ட ஒரு கிராமத்தில், 500 பேர் பெண்களாக இருக்கின்றனர். 510 பெண்கள் பிறந்திருக்க வேண்டிய இடத்தில் 500 பெண்கள் இருக்கின்றனர்.



10 பேர் பாலியல் தேர்வு காரணமாக தாயின் வயிற்றிலேயே அழிக்கப் பட்டிருக்கின்றனர். 500 பெண்களில் 30 பெண்கள் ஆசியாவைச் சேர்ந்தவர்கள். 167 பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஏதோவொரு வகையான வன்முறையைச் சந்தித்தவர்களாக இருக்கின்றார்கள். 100 பேர் தமது வாழ்நாளின் ஏதோவொரு கட்டத்தில் பாலியல் வன்முறைகளை எதிர்கொண்டவர்களாக இருப்பார்கள்.



பெண்களும் சனத்தொகையும்



உலகின் சனத்தொகையில் 49.7 சத வீதமானவர்கள் பெண்கள். சமூக அமைப்புகளில் ஆண்களுக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் அளிக்கப்படுகின்றது. அது மாத்திரமின்றி, பிறக்கப் போவது ஆணா பெண்ணா என்பதைக் கருவிலேயே அறிந்து கொள்ளக் கூடுமாகையால், அடிப்படைத் தேவைகள் புறக்கணிக்கப்படுவதாலும், பாலியல் தேர்வினாலும் உலகின் பல்வேறு சமூகங்களில் இருந்து சுமார் 60 மில்லியன் பெண் பிள்ளைகள் காணாமல் போயுள்ளனர்.



குடும்பத்தில் வன்முறை



குடும்ப வன்முறைகள் பல்வேறு வடிவங்களை எடுக்கின்றன. அடித்தல், உதைத்தல் என்பனவற்றிலிருந்து, உள ரீதியான பாதிப்புகள் வரை குடும்ப வன்முறைகள் வேறுபடுகின்றன. பெண்ணை அவளது உறவினர், நண்பர்களிடமிருந்து தனிமைப்படுத்தல், பெண்ணின் நடவடிக்கைகளைக் கண்காணித்தலும், கட்டுப்படுத்தலும், தொடர்ச்சியான உடல் உள வன்முறைகளாகக் காணப்படுகின்றன.



உலகம் பூராகவும் நிலவும் நிலை



* மூன்று பெண்களில் ஒருவர் தான் நன்கு அறிந்தவர்களாலேயே அல்லது தனக்கு மிக நெருக்கமானவர்களாலேயே அடித்துத் துன்புறுத்தப்பட்டோ, கட்டாயப் பாலுறவுக்குத் தள்ளப்பட்டோ துன்புறுத்தப்படுகின்றாள்.



* கொலை செய்யப்படும் பெண்களில் 70 சதவீதமானவர்கள், அவர்களது கணவனாலேயே கொல்லப்படுகிறார்கள்.



* கென்யாவில், ஒவ்வொரு கிழமையும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் தமது துணைவர்களால் கொல்லப்படுகிறார்கள்.



* எகிப்தில் திருமணமான பெண்களில் 35 சதவீதமானோர் திருமண வாழ்வின் ஏதோவொரு கட்டத்தில் கணவனால் அடித்துத் துன்புறத்தப்படுகின்றனர்.



* கனடாவில் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் பாராமரிப்புக்கென வருடாந்தம் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப் படுகின்றது.



* அமெரிக்காவில் ஒவ்வொரு 12 செக்கன்களுக்கும் ஒரு பெண் தனது கணவனாலோ, துணைவனாலோ அடித்துத் துன்புறுத்தப்படுகின்றாள்.



* பாகிஸ்தானில் 42 சதவீதமான பெண்கள் குடும்பத்தில் தம்மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளைத் தமது தலைவிதி என ஏற்றுக்கொள்கின்றனர்.



* ரஷ்யாவில் தினமும் சுமார் 36,000 பெண்கள் தமது கணவரால் வன்முறைக்கு உள்ளாகின்றனர்.



* ஸ்பெயினில் 2000ஆம் ஆண்டளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், 5 நாட்களுக்கு 1 தடவை ஒரு பெண் தனது கணவனால் கொல்லப்படுகின்றாள்.



பாலியல் வன்முறைகள்



* ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவதே, பாலியல் வன்முறையின் உச்சக்கட்டமாகக் கருதப்படுகின்றது. விருப்பமில்லாத கருத்தரிப்பு, எச். ஐ. வி/ எயிட்ஸ் உட்பட்ட பாலியல் நோய்களின் தொற்றுகை என்பனவற்றோடு, பாலியல் வல்லுறவு நெருக்கமாகத் தொடர்புபடுகின்றது. தாம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு விட்டோம் என்பது வெளியே தெரியவந்தால் சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டு விடுவோம் என்ற பயத்தாலேயே, தமக்கு நேர்ந்த அவலத்தை பல பெண்கள் வெளியே சொல்வதில்லை.



* தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவனை சட்டத்தின் முன் நிறுத்துவதுமில்லை. இது ஆணை தண்டனையின்றியே தப்பித்துக் கொள்ளவும், மேலும் குற்றம் செய்யும் தூண்டுகின்றது.



உலகில்...



* ஐந்து பெண்களில் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டோ, தனது வாழ்நாளில் ஒரு தடவையேனும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டோ இருப்பார்.



* அமெரிக்காவில் 20 நிமிடங்களுக்கு ஒரு தடவை ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் படுகின்றாள்.



* பிரான்ஸில் ஒவ்வொரு வருடமும் 25,000 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.



* துருக்கியில் திருமணமான பெண்களில் 35 சதவீதமானவர்கள் தமது கணவனாலேயே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் படுகின்றார்கள்.



யுத்தமும் பெண்களும்



யுத்தங்களின்போது பெண்கள் அதிகளவில் வன்முறைக்கு உள்ளாக நேர்கின்றது. யுத்தங்களின்போது பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறக் காரணம், பாலியல் வல்லுறவை ஓர் ஆயுதமாக யுத்தத்தில் ஈடுபடும் தரப்பினர் கருதுவதுதான். பல யுத்தங்களின்போது தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்வதற்காக பாலியல் தொழிலில் பெண்கள் தள்ளப்படுகின்றார்கள்.



யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர் களிலும் பெண்களும் சிறுவர்களுமே அதிகளவு இருக்கின்றார்கள்.



* அகதிகளில் 80 சதவீதத்தினர் பெண்களும் சிறுவர்களுமாக உள்ளனர்.



* இவ்வுலகில் இடம்பெற்ற 34 யுத்தங்களில் பல மில்லியன் பெண்களும் சிறுவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.



* யுத்தம் இடம்பெறும் பகுதிகளில் பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்திச் செல்லப்படுவது 85 சதவீதமாக இருக்கின்றது.



* கொங்கோவின் உள்நாட்டுப் போரில் யுவிரா பிரதேசத்தில் 2002 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 40 பெண்கள் வீதம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டிருக்கின்றார்கள்.



* உகண்டாவில் 1994 இல் இடம்பெற்ற பாரிய இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் 250000 முதல் 500,000 வரையான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டிருக்கின்றார்கள்.



* சியராலியோனில் இடம்பெயர்ந்த பெண்களில் 94 சத வீதத்தினர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப் பட்டிருக்கின்றார்கள்.



* ஈராக்கில் 2003 இல் இடம்பெற்ற யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் பெண்களும் சிறுமிகளுமாக குறைந்தது 400 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள். அவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமிகளில் 8 வயது நிரம்பிய சிறுமிகளும் அநேகம்.



* கமரூஜ் ஆடசிக் காலத்தில் கம்போடியாவில் 250,000 கம்போடிய பெண்கள் கட்டாயத் திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளனர்.



* பொஸ்னியாவிலும் ஹெஸ்ஸகோவின்னாவிலும், 1992 இல் 5 மாதங்களே நீடித்த யுத்தத்தில் 20,00மும் 50,000 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர்.



* கொசோவோவில் 30 முதல் 50 சதவீதம் வரையான பெண்கள், சேர்பிய இராணுவத்தினரால் பாலியல் வல்லுறுவுக்குட்படுத்தப்பட்டடனர்.



தீங்கு விளைவிக்கும் நடைமுறைகள்



உலகில் உள்ள எல்லாக் கலாசாரங்களும் பெண்களுக்குத் தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளை வழக்குகளை கொண்டிருக்கின்றன. ‘கலாசார நடைமுறைகளாக’ அவை பார்க்கப்படுவதால், பலருக்கும் தவறெனத் தெரியவில்லை.



உலகம் முழுவதிலும்



* உலகம் முழுவதிலும் 135 மில்லியன் பெண்களுக்கு விருத்த சேதனம் செய்யப்பட்டுள்ளது. இன்னமும் 2 மில்லியன் பெண்கள் அவ்வாறான நடைமுறைகளைப் எதிர்கொள்ளும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள்.



* தற்போது 10 முதல் 17 வயது வரையுள்ள 82 மில்லியன் சிறுமிகள் 18 வயதுக்கு முன்பாக திருமணம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.



* ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள 28 நாடுகளில் விருத்த சேதனம் செய்யும் சம்பிரதாய வழக்குகள் நடைமுறையில் உள்ளன.



* நைகரில் 76 சதவீதமான வறிய பெண்கள் 18 வயதுக்கு முன்னரே திருமணம் செய்கின்றனர.



* எகிப்தில் திருமணம் முடித்த 15 வயது முதல் 49 வயதான பெண்களில் 97 சத வீதத்தினருக்கு விருத்த சேதனம் செய்யப்பட்டுள்ளது.



* ஈரானில் 2003 ஆம் ஆண்டில், இரண்டு மாதங்களில் மாத்திரம், 45 பெண்கள் தங்கள் குடும்ப கெளரவத்தைக் காப்பாற்றுவதற்காகக் கொல்லப்பட்டனர்.



* விருத்த சேதனம் செய்யும் சம்பிரதாயபூர்வ வழக்கு இந்தியா, இந்தோனேஷியா, மலேஷிய, இலங்கை போன்ற நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது.



* இந்தியாவில் சுமார் 15,000 பெண்கள், வருடாந்தம் சீதனக் கொடுமையினால் கொல்லப்படுகின்றனர்.



* பெரும்பாலும் அவ்வாறான மரணங்கள் சமையல் எரிவாயு வெடித்ததால் ஏற்படுபவையாக சித்தரிக்கப்படுவதனால், குற்றவாளிகள் எளிதில் தப்பித்து விடுகின்றனர்.



குற்றமிழைப்போருக்குத் தண்டனை இல்லை



பெண்களுக்கெதிரான வன்முறைகள் பதிவு செய்யப் படுவதில்லை. அதனால் குற்றமிழைப்வோர் தண்டனை எதுவுமின்றி இலகுவில் தப்பித்துக் கொள்ள முடிகின்றது. பெண்கள் மீதான வன்முறைகள் பதிவு செய்யப்படாமைக்குப் பல காரணங்கள். பழிவாங்கப்படலாமென்ற அச்சம், போதிய பொருளாதார வசதிகளின்மை, பிறரில் தங்கி வாழுதல், குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படலாமென்ற அச்சம், சட்டநிவாரணங்களைப் பெறுவதற்கான வழிவகைகள் பற்றி அறியாதிருத்தல் என்பனவற்றைக் காரணங்களாகக் குறிப்பிடலாம்.



உலகில்...



* சிலியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களில் 3சத வீதமானோர் மாத்திரமே, அதுபற்றி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தனர்.



* அமெரிக்காவில் இது 16 சதவீதமாக இருந்தது. ஆனால், தம்மைப் பற்றிய விபரங்கள் இரகசியமாகப் பாதுகாக்கப்படுமிடத்து, தம்மீதான வன்முறைகளுக்கு எதிராக பொலிசாரிடம் முறைப்பாடு செய்ய, பாதிக்கப்பட்ட பெண்களில் 50 சதவீதமானவர்கள் தயாராக உள்ளனர்.



* அவுஸ்திரேலியாவில் 1999ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் எவரும் அதனை வெளியே சொல்லவில்லை.



* பங்களாதேஷில் 68 சதவீதமான பெண்கள் தாங்கள் அடித்துத் துன்புறுத்தப் படுவதை எவருக்கும் சொல்வதில்லை.



* ஒஸ்ரியாவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு அது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த 20 சதவீதமான பெண்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.



சட்ட நிவாரணங்கள்



பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் குற்றவாளிகள் தண்டனைகள் இன்றியே தப்பித்து விடுகின்றார்கள். இவ்வன்முறைக்கு எதிரான சட்டங்கள் எவையும் சில நாடுகளில் இல்லை. சில நாடுகளில் சில வன்முறைகளுக்கு எதிராக மட்டுமே சட்டங்கள் அமுலில் உள்ளன. பெண்கள் மீதான எல்லாவிதமான வன்முறைகளை எதிர்த்தும் சட்டங்கள் இருந்தாலும் பல நாடுகளில் இவை ஒழுங்காக அமுல்படுத்தப் படுவதில்லை.



* 2003 இல் பெண்கள் மீதான வன்முறைகளை எதிர்த்து 54 நாடுகள் சட்டமியற்றின.



* 79 நாடுகள் வீட்டு வன்முறைகளை எதிர்த்து எந்தவிதமான சட்டங்களையும் கொண்டிருக்கவில்லை.



* திருமண பந்தத்திலும் பெண்ணின் விருப்பின்றி உறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றம் என 51 நாடுகள் அங்கீகரித்தன. விஷேடமாக பாலியல் பலாத்காரம் தொடர்பில், 16 நாடுகளே சட்டங்களைக் கொண்டிருக்கின்றன.



எச். ஐ. வி. / எயிட்ஸ்



பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரிப்பது, பாரிய சுகாதாரப் பிரச்சினையாகவும் உருவெடுத்துள்ளது. வன்முறைகள் பெண்ணின் இனப்பெருக்க சுகாதாரத்தைப் பாதித்திப்பதோடு, உடல், உள நலனோம்புகையையும் பாதிக்கின்றது. பெண்கள் மீதான வன்முறைகளால் எச். ஐ. வி/ எயிட்ஸ் போன்ற நோய்த்தொற்றுக்குள்ளாகும் வாய்ப்பும் ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களுக்கு அதிகமானதாக இருக்கின்றது.



உலகில்



* உலகில் எச். ஐ. வி/ எயிட்ஸ் தொற்றுக்குள்ளானோரில் 51 சத வீதமானவர்கள் பெண்கள்.



* புதிய எச். ஐ. வி. தொற்றுக்கள், 15 முதல் 24 வயது வரையானோருக்கே ஏற்படுகின்றன. அவ்வயதுப் பருவத்தில் எச். ஐ. வி. தொற்றுக்குள்ளானோரில் 60 சத வீதமானவர்கள் பெண்கள்.



* தினமும் தொற்றுக்குள்ளாகும் 16,000 பேரில் 55 சத வீதமானவர்கள் பெண்கள்.



* ஐரோப்பா, வட மெரிக்கா, ஆசியா போன்ற பகுதிகளில் 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களிடையே ஏற்படும் மரணத்துக்கு எச். ஐ. வி/ எயிட்ஸே காரணமாகின்றது.



- நிஷா

நன்றி : www.keetru.com

Tuesday, March 2, 2010

திண்டிவனம் தலைமைக் காவலர் மீது வழக்கு பதிய நீதிமன்றம் உத்திரவு

திண்டிவனம் தலைமைக் காவலர் மீது

வழக்கு பதிய நீதிமன்றம் உத்திரவு

கடந்த அக்டோபர் மாதம் திண்டிவனம்- ரோசனை தலித் வழக்கறிஞர் பூபால் காவல் நிலையம் சென்றபோது, அங்கிருந்த காவலர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தை பதிந்திருந்தேன்.
இந்நிலையில், தன்னைத் தாக்கிய தலைமைக் காவலர் சுப்பையா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயரதிகாரிகள் அனைவருக்கும் வழக்கறிஞர் பூபால் புகார் மனு அனுப்பியிருந்தார்.
திண்டிவனத்தில் ‘‘நகரக்கல்வி மக்கள் மேம்பாட்டுக் குழு’’ பல்வேறு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, சுப்பையா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதனையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தின் அப்போதைய காவல் கண்காணிப்பாளர் திரு.அமுல்ராஜ், சம்பவம் தொடர்பாக விசாரித்து, தலைமைக் காவலர் சுப்பையாவை காத்திருப்போர் பட்டியலில் வைத்தார்.
இதற்கிடையில், நடவடிக்கைகோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் பூபால் வழக்குத் தொடர்ந்திருந்தார். 22-02-10 திங்களன்று விசாரனைக்கு வந்த இவ்வழக்கில், வழக்கறிஞர் பூபாலின் புகாரின் அடிப்படையில் தலைமைக்காவலர் சுப்பையா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

வழக்கறிஞர் பூபால் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சத்தியச்சந்திரன் அவர்கள் வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.