Saturday, October 31, 2009

தலித் வழக்கறிஞரைத் தாக்கிய திண்டிவனம் போலீஸ்


வழக்கறிஞர் மு.பூபால்

திண்டிவனம் உரோசனையைச் சேர்ந்த வழக்கறிஞர் மு.பூபால், சென்னை உயர்நீதி மன்றத்தில், அனைவருக்கும் தெரிந்த மனித உரிமையாளரும், மூத்த வழக்கறிஞருமான பொ. ரத்தினம் அவர்களுக்கு உதவியாக இரண்டரை ஆண்டு பணியாற்றியவர். சொந்த ஊரில், சட்டப் பணியாற்றுவதற்காக திண்டிவனம் திரும்பி, கடந்த 4 ஆண்டுகாலமாக சிறந்த முறையில் வழக்கறிஞராக செயலாற்றி வருகிறார். பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்களுக்கு புகார் எழுதுவது, வழக்கு பதிவு செய்ய காவலதிகாரிகளுடன் உரையாடுவது உள்ளிட்ட மனித உரிமைப் பணியினையும் செய்துவருகிறார். திண்டிவனம் நகர மன்றத்தின் உறுப்பினராக 3-வது வார்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றுகிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளராகவும் உள்ளார். சட்டவிரோதக் காவலில் வைத்து சித்தரவதை செய்யப்பட்ட தலித் இளைஞர்களைப் பார்க்க ரோசனை காவல் நிலையம் சென்ற இவரைத்தான், கடந்த 18.10.09 தலைமைக் காவலர் சுப்பையா தாக்கினார்.
ரோசனை காவல் நிலையத்தில் நடந்த சம்பவம்.

கடந்த 18.10.09, ஞாயிற்றுகிழமை, பகல் 1&30 மணியளவில், ரோசனையைச் சேர்ந்த ராசேந்திரன் என்பவர் தெள்ளார் போகும்போது, ஊரல் கிராமத்தில் இருசக்கர வாகனத்தை, அதே ஊரைச் சேர்ந்த ஆட்டோ இடிச்சிருக்கு. விபத்து தகவல் கிடைச்சு, ரோசனையில் இருந்து ராசேந்திரனின் நண்பர்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். ஆட்டோ ஓட்டுனர் வண்டியை சரி செய்து கொடுப்பதாக சொல்லியுள்ளார். அந்த நேரத்தில், சம்பவ இடத்திற்குச் சென்ற ரோசனை போலீசார், ரோசனை இளைஞர்களை மட்டும் கடுமையாக லத்தியால் அடித்து, ஜீப்பில் தூக்கிபோட்டு காவல் நிலையம் கொண்டு சென்று, சட்டவிரோதக் காவலில் அடைத்து, தொடர்ந்து அடித்துள்ளனர். சாதி சொல்லி தாக்கியுள்ளனர். வீட்டுப் பெண்களை இழிவு செய்து உதவிஆய்வாளர் நாகரத்தினம் கேவலமாக பேசியுள்ளார்.தகவல் அறிந்த வழக்கறிஞர் மு.பூபால், இளைஞர்களைப் பார்ப்பதற்காக காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போதும், இளைஞர்களை போலீசார் அடித்துக்கொண்டிருந்துள்ளனர். ஆய்வாளரிடம் பூபால், ‘‘எதுக்குசார் பசங்கள இப்படி போட்டு அடிகிறீங்க’’ என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், ‘‘ஊர்காரங்க புகார் கொடுத்தா நாங்க விசாரிக்கக்கூடாதா’’ என்று கூறியுள்ளார். தொடர்ந்து பூபால், ‘‘விசாரிக்கிறத யாரும் வேணாம்னு சொல்லமாட்டாங்க சார். புகாரே எதுவும் இல்லாம 10 பசங்கள இப்படி ரத்தம் காயம் வர்ற அளவுக்கு எதுக்கு சார் அடிக்கணும். அவனுங்க ஏதாவது தப்பு பண்ணியிருந்தா, வழக்கு போட்டு ரிமான்ட் செய்யுங்க. எதுவும் இல்லாம் இப்படி வச்சி அடிச்சிங்கின்னா என்னா அர்த்தம். காலன்காறங்கன்றதாலதானே நீங்க இப்படி வச்சி அடிக்கிறீங்க.’’ என்று கூறியுள்ளார். அதற்கு ஆய்வாளர் எதுவும் பதில் சொல்லாத நிலையில் பூபால், ‘‘நான் எஸ்.பி&க்கு புகார் எழுதிட்டு அப்புறம் பேசிக்கிறேன். இல்லன்னா கட்சிக்காரங்கள் கூப்பிட்டு சாலை மறியல்தான் செய்யனும்‘‘ என்று கூறிவிட்டு, எழுந்து வெளியில் செல்லத் திரும்பியுள்ளார். அப்போது, அருகில் அமர்ந்திருந்த ஏட்டு சுப்பையா என்பவர் எழுந்து, ‘‘ஓத்தா நீ என்னா பெரிய மயிறா. சாலை மறியல் செஞ்சி, புகார் எழுதிடுவியா’’ என்று கூறியபடி வழக்கறிஞர் பூபாலை கண்ணத்தில் ஓங்கி அடித்துள்ளார். தகவல் அறிந்து, ரோசனைபகுதி மக்கள் சுமார் 300 பேர் காவல் நிலையம் அருகில் கூடியுள்ளார். காவல் நிலையத்தில் வைத்து சித்ரவதைக்கு ஆளான 10 இளைஞர்களையும் போலீசார் விடுவித்துள்ளனர். அனைவரும் அரசு மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துகொண்டு, மீண்டும் காவல் நிலையம் திரும்பியுள்ளனர். விசாரனைக்கு டி.எஸ்.பி அவர்களிடம், தான் தாக்கப்பட்டது தொடர்பாக வழக்கறிஞர் பூபால் தனிப்புகாரும், சித்திரவதைக்கு ஆளான இளைஞர்கள் தனிப்புகாரும் அளித்தனர். பூபால் புகாருக்கு மட்டும் மனு ஏற்புச்சான்று அளித்தார்கள். தாக்கிய தலைமைக் காவல் சுப்பையா மீது இதுவரை வழக்கும் பதியப்படவில்லை, நடவடிக்கையும் எடுக்கப்பட்டாமல், காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது.
மு.பூபால் ஒரு மனித உரிமை வழக்கறிஞர்

தலித்துகளுக்காக மட்டும் அல்லாமல், பல்வேறு கிராமங்களில் பாதிக்கப்படும் அனைத்து சாதியைச் சேர்ந்தவர்களுக்கும், பழங்குடி இருளர்களுக்காகவும், தொடர்ந்து ஆதரவாக உதவி வருகின்றார். ஆசாரி சமூகத்தைச் சார்ந்த முருங்கம்பாக்கம் ஆட்டோ ஓட்டுனர் கணேசன் காவல் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்யப்பட்டதை மனித உரிமை ஆணையத்திற்கு எடுத்துச்சென்றார். பூதேரி கலா உயிரோடு எரித்து கொலை செய்யமுயற்சித்த சம்பவம், அதற்கு சாட்சியாகவும் ஆதரவாகவும் இருந்ததற்காக லட்சுமி தொடர்ந்து சமூகவிரோத சக்திகளாலும், காவல் துறையினராலும் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு ஆதரவாக இருந்தார். ஒங்கூர்&கரிக்கம்பட்டைச் சேர்ந்த 10 வயது காயத்திரி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் குற்றவாளி கைது செய்ய காரணமாக இருந்தார். மாணவர் பருவத்திலேயே, 1997&ஆம் ஆண்டு திண்டிவனம் கீழ்அருங்குணம் கிராமத்தில் நிகழ்ந்த போலீசாரின் துப்பாக்கிச்சூடு சம்பவத்தினை தொடர்ந்து, கைதுசெய்யப்பட்டிருந்த தலித்துகளை பார்ப்பதற்காக காவல் நிலையம் சென்ற இவரும் கைதுசெய்யப்பட்டு, 57 நாட்கள் பொய்வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை முகப்பேரில் கட்டிடத் தொழிலாளியின் மகளை காவலர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், மேலும், புளியந்தோப்பு, தண்டையார்பேட்டை, அபிராமபுரம் ஆகிய காவல் நிலையங்களின் அத்துமீறல் சம்பவங்களை கள ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணியாற்றியுள்ளார். அனைவருக்கும் தெரிந்த மனித உரிமையாளரும், மூத்த வழக்கறிஞருமான பொ. ரத்தினம் அவர்களுக்கு உதவியாக சென்னை உயர்நீதி மன்றத்தில் பணியாற்றியுள்ளார். 1998&ஆம் ஆண்டு சட்டக் கல்லூரி மாணவராக இருக்கும்போதே, செய்யார் காவல் நிலையத்தில் மரணமான, பெருங்களத்தூர் மோகன் என்பவர் இறந்துபோன சம்பத்திற்கு சி.பி.ஐ விசாரனைகோரி வழக்கறிஞர் பொ.ரத்தினத்துடன் இணைந்து பணியாற்றினார். மேலும், புதுசேரி போலீசாரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அத்தியூர் விஜயா வழக்கு, செஞ்சி சிறைக்காவலர்களால் பாலியல்வன் கொடுமைக்கு ஆளான ரீட்டாமேரி வழக்கு போன்றவறிலும் பணியாற்றினார்.

உச்சநீதி மன்றத்தில் மனு

1996-ஆம் ஆண்டு மதுரை மேலவளவு கிராமத்தின் தலித் பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்ளிட்ட 6 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அண்மையில் உச்சநீதிமன்றம் 17 குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனையை உறுதி செய்தது. இவ்வழக்கில் 12 வழக்கறிஞர்களுடன் இணைந்து, திண்டிவனம் வழக்கறிஞர் நமது பூபாலும் டெல்லி உச்ச நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கறிஞர் பூபாலின் கல்விப்பணி

கல்வியில் மிகவும் பின்தங்கியிருந்த ரோசனையின் கல்வித்தரத்தை முன்னேற்றுவதற்காக 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு இலவச பயிற்சியினை ஒருங்கிணைத்து நடத்தினார். ரோசனையில் நடைபெறும் தாய்த் தமிழ் மழலையர் (ம) தொடக்கப்பள்ளியின் வளர்ச்சியில் இவருடைய பங்கு மகத்தானது ஆகும். அரசின் உதவியில்லாத நிலையிலும், நகரமக்களின் ஆதரவோடு நடைபெறும் மதிய உணவுத் திட்டக் குழுவின் தலைவராகவும் இருந்து சிறப்பாக செயலாற்றி வருகிறார். நகரத்தில் நடைபெற்று வரும் கல்விச் சீர்கேடுகளுக்கு எதிராகவும், நகரக் கல்வி மக்கள் மேம்பாட்டுக் குழு மற்றும் மக்கள் கல்வி கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் இணைந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

Thursday, October 8, 2009

சாதியின் பெயரால் படுகொலை செய்யும் சமுதாயம்.


சாதியின் பெயரால்

படுகொலை செய்யும் சமுதாயம்.


வண்டிப்பாளையம் கிராமம். திண்டிவனம் வட்டம், மரக்காணம் ஒன்றியம், நடுகுப்பம் ஊராட்சியில் உள்ளது. 30 தலித் குடும்பங்களும், சுமார் 300&க்கும் மேற்பட்ட சாதி இந்துக்களான வன்னியர், நாயுடு, ஆசாரி, செட்டியார் போன்ற சாதியைச் சேர்ந்தவர்களின் குடும்பம் உள்ளது. விவசாயத்தையே அடிப்படைத் தொழிலாக கொண்டுள்ள கிராமம். இரட்டை குவளை முறை உள்ளிட்ட தீண்டாமையை கடைபிடிக்கும் கிராமம்.
சுமார் 70, 80 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, இரு சமூகத்தினருக்கும் தனித்தனி சுடுகாடு என்றாலும், இறுதி ஊர்வலம் கிராமத்திலுள்ள ஓடை வழியாக ஒரே பாதையில் சென்றுகொண்டிருந்துள்ளது. ஊராட்சிகள் வலுப்பெறத் தொடங்கிய 10 ஆண்டுகளுக்கு முன்பு, சாலை வசதிகள் உருவாக்கப்பட்டதும், சாதி இந்துக்கள் புதிய சாலை வழியாக பிணம் தூக்கிச்சென்றார்கள். தலித்துகள் மட்டும் அந்த பழைய ஓடை வழியிலேயே கொண்டு சென்றார்கள். இந்தவழி, காலப்போக்கில் சுருங்கி, ஓடை ஒத்தையடி பாதையாய் மாறியது. இருபக்கமும் முட்செடிகள் வளர்ந்து பாதையை மேலும் குறுகலாக்கியிருந்தது. சாதாரணமாக இருவர் நடந்துசென்றாலே ஒருவர் பின் ஒருவராக குனிந்து செல்லவேண்டிய நிலையில்தான் உள்ளது அந்த வழி.


15.09.09

14-09-09 அன்று மேற்படி வண்டிபாளையம் கிராமத்தில் தலித் பறையர் சமூகத்தைச் சேர்ந்த ஜோதி(26) என்பவர் இறந்துள்ளார். அவரின் இறுதி ஊர்வலத்தை, ஓடைபாதையில் செல்ல வழியில்லை என்பதால், சாலை வழியாக கொண்டு செல்வது என்று தீர்மானித்து, 15-09-09 அன்று காலை 10-30 மணியளவில் வீட்டிலிருந்து சடலத்தை தூக்கிக்கொண்டு, தலித் குடியிருப்பை தாண்டினர். அப்போது அங்கு கூட்டமாக வந்த சாதி இந்துக்கள் இறுதி ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி, ‘‘இந்த வழியே போகக்கூடாது, ஓடைவழியா போங்க எனக்கூறி’’ பாதையில் முட்களையும், கற்களையும், மரங்களையும் போட்டுத்தடுத்து, ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். தலித்துகள் தொடர்ந்து பிணத்தை தூக்கிச்செல்ல வழியில்லாமல் நடுசாலையில் இறக்கிவைத்தனர்.
தகவல் அறிந்து 11.30 மணிக்கு, சம்பவ இடத்திற்கு சென்ற இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மைய கண்காணிப்பு குழுவினர், உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அறிவித்து தலையீடு செய்த்காவல் துறை, வருவாய்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சாதி இந்துக்கள் வழிவிட மறுத்தார்கள். தலித் பெரியவர் ஒருவர், மிகுந்த வேதனையுடன், ‘‘ரெண்டு பேரும் ஒரே வழியில போனோம். திடீர்னு நீங்க மட்டும் நல்ல வழியில போயிட்டு, என்ன மட்டும் எதுக்கு பழைய வழியில போகச்சொல்ற’’ என்று கேட்டார். எவரும் பதில் சொல்ல மறுத்து அமைதி காத்தனர். சந்தர்ப்பத்தை பயன்படுத்திய வட்டாட்சியர், ஊழியர்கள் மூலம் ஊர்வலப்பாதையின் வழியில் போடப்பட்டிருந்த மரம், கற்கள், முட்செடிகளை அப்புறப்படுத்தி, ஊர்வலத்தை நடத்தினார். பொது வழியாக பிணம் சென்றது.
இந்த வன்கொடுமையினை, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சார்ந்த பரந்தாமன் (எ) மோகன் த/பெ லிங்குசாமி நாயுடு என்பவர் தலைமையில், குப்புசாமி, வெங்கடேசன், சுந்தர், எட்டியப்பன், ரவி, செல்வம் உள்ளிட்ட வன்னியர் சமூகத்தினர் கூட்டாக நிகழ்த்தினர்.


04.10.09, ஞாயிற்றுகிழமை.
• 02.10.09 வெள்ளிக்கிழமை முதலே தலித்துகளுக்கு ஊரில் இருந்த கடைகளில் பொருட்கள் தர மறுத்துள்ளார்கள். குடிதண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது. மணி, நாகராஜ் என்கிற இரு தலித்துகளின் கிணற்றில் இருந்த மின்மோட்டார்கள் முழுவதும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக 04.10.09 அன்று காலை மரக்காணம் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தனர் தலித்துகள். ஆய்வாளர் மாலை விசாரிப்பதற்காக வரச்சொன்ன நிலையில், மீண்டும் மாலை 5&00 மணியளவில் காவல் நிலையம் சென்றுள்ளனர். • அன்று மாலை 6 மணியளவில், கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ராஜா தனது, கோழிபண்ணை எரிவதரிந்து உடன் இருவரை அழைத்துக்கொண்டு ஓடியுள்ளார். அப்போது அங்கு சாதி இந்துக்களான பரந்தாமன் உள்ளிட்ட சுமார் 30 பேர் நின்றிருந்துள்ளனர். ராஜாவின் 300 அடி நீள கோழிபண்ணை எரிந்துகொண்டிருந்த நிலையில் கொளுத்திய சாதி இந்துக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அவர்களே, அருகே இருந்த சாதி இந்துவான அய்யனார் என்பவரின் கோழிபண்ணைக்கும் தீ வைத்துள்ளனர். • உடனடியாக ராஜா, விசாரணைக்காக மரக்காணம் காவல் நிலையத்தில் இருந்தவர்கள் மூலம் போலீசாருக்கு தகவல் சொல்லியுள்ளார். போலீசாரிடம் உடனடியாக ஒரு தீயணைப்பு வண்டியினை ஊருக்கு அனுப்பியுள்ளனர். ஊருக்குள் சென்ற வண்டியினை வழிமறித்த சாதி இந்துக்கள் அய்யனாரின் கோழிப்பண்ணையை அணைக்கும்படி கூறியுள்ளனர். அதற்கு ராஜா, ‘‘என்னுடைய பண்ணை அதிகமாக எரியுது, நான்தானே போன் செஞ்சி வரவழைச்சேன் என்னுடையதை முதலி அணைங்க’’ என்று கூறியுள்ளார். ஆனாலும், ஊர்காரர்களின் அச்சுறுத்தல் காரணமாக அய்யனாரின் பண்ணையில் தண்ணீர் அடிக்கத்தொடங்கியுள்ளனர். • அப்போது ‘‘ஏன் இந்தமாதிரி பண்ணையை கொளுத்திட்டு, சொத்த அழிக்கிறீங்க’’ என்று கூறிய ராஜாவை அங்கிருந்த சாதி இந்துக்கள் கட்டையை கொண்டு தாக்கியுள்ளனர். ராஜாவின் உடன் சென்ற இருவரும் உயிர்பயத்தில் ஓடிச்சென்றுள்ளனர். மீண்டும் அடிப்பட்ட நிலையில் ராஜாவும் ஓடமுயன்ற நிலையில், கைலி தடுக்கி கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த ராஜாவை சாதி இந்துக்கள் அனைவரும் கூடி நின்று கட்டை, கல், கழி போன்றவற்றால் தொடர்ந்து தாக்கியுள்ளனர். பெரிய கல்லை தூக்கிப்போட்டு, முகத்தை சிதைத்துள்ளனர். கத்தியாலும் வெட்டியுள்ளனர். ராஜாவின் முகம் முழுவதும் சிதைந்துள்ளது. சாதி இந்துக்களின் தொடர் தாக்குதலில் ராஜா மயக்கமடைந்துள்ளார். • அதன்பிறகு சாதி இந்துக்களின் வன்முறைக்கும்பல் தலித் குடியிருப்பிற்குள் புகுந்து வீடுகளையும், வீட்டிலிருந்த பாத்திரம் உள்ளிட்ட பொருட்களையும் அடித்து, உடைத்து சேதப்படுத்தியுள்ளது. ராஜாவைப்போன்று தாங்களும் தாக்கப்படுவோம் என்ற அச்சத்தில் தலித்துகள் இரவோடு இரவாக தங்கள் குடியிருப்பைவிட்டு வெளியேறினர். • பேச்சில்லாமல் கிடந்த ராஜாவைக் காப்பாற்ற, ஆம்புலன்சிற்கு போன்செய்துள்ளனர். வந்த ஆம்புலன்சை வழிமறித்த சாதி இந்துக்கள் தங்களை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுமாறு வலியுறுத்தி, மிரட்டி எடுத்துச்சென்றுள்ளனர். அதன்பிறகு தகவல்சொல்லி, மற்றொரு ஆம்புலன்ஸ் வந்து ராஜாவை தூக்கும்போது, ராஜா இறந்துவிட்டிருந்தார்.
05.10.09, திங்கட்கிழமை

இறந்துபோன ராஜாவின் உடலருகே, ராஜாவின் குடும்பத்தினரை தவிர உள்ளூர் தலித்துகள் எவருமே இல்லை. சாதி இந்துக்களின் கொடுந்தாக்குதலுக்கு பயந்து இரவே கிராமத்தைவிட்டு வெளியூர் சென்றுள்ளனர். • சாதி இந்துக்களால் மீண்டும் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தில், தலித் சமூகத்தைச் சேர்ந்த 30 குடும்பத்தினர் சுமார் 200 பேர் கிராமத்தைவிட்டு வெளியேறி, 3 நாட்களாக அருகில் உள்ள நடுகுப்பம் என்கிற கிராமத்தின் தலித் குடியிருப்பில் தங்கியுள்ளனர். அங்குள்ள தலித்துகள்தான் உணவளித்து வருகின்றனர். மூன்றாவது நாளாக சொந்த கிராமத்தை விட்டு, உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, குழந்தைகளுக்கு பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இன்றி மிகுந்த அவலமான வாழ்க்கையை எதிர்கொண்டு வாழ்ந்துவருகின்றார்கள் வண்டிபாளையம் தலித்துகள். • 06.10.09 அன்று காலை வீட்டில் உள்ள ஆடு, மாடு போன்ற கால்நடைகளை பார்த்துவர கிராமத்திற்கு சென்ற தலித் பெண்களை, சாதி இந்துப்பெண்கள் வழிமறித்து, திட்டி, அவமானபடுத்தி, கிராமத்திற்குள் நுழையவிடாமல் திருப்பிஅனுப்பியுள்ளனர். • ராஜா கொலை சம்பம்தொடர்பாக 04.10.09 அன்று இரவு 8&00 மணியளவில் புகார் கொடுக்கச் சென்ற மாசிலாமணி த/பெ பெருமாள் என்பவரை, மரக்காணம் போலீசார், அய்யனார் கோழிப்பண்னையை கொளுத்தியதாக கூறி, காவல் நிலையத்திலேயே உட்கார வைத்திருந்துள்ளனர். புகார் கொடுக்கச்சென்றவர் திரும்பிவரவில்லை என்பதால், மறுநாள் 05.10.09 அன்று காலை 9-00 மணியளவில் காவல் நிலையம் சென்ற தலித் இளைஞர்கள், மாசிலாமணியை போலீசார் அடைத்துவைத்திருப்பது அறிந்துள்ளனர். அதன்பிறகு போலீசார் புகாரைப்பெற்று, மாசிலாமணியை அனுப்பி வைத்துள்ளனர்.

Tuesday, March 3, 2009

சென்னை உயர்நீதி மன்றம் : காவல்துறை வன்முறை

சில ஆண்டுகட்கு முன்னர் இன்றைய முதல்வர் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது தமிழக காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது என்றார். ஈரல் மட்டுமல்ல இதயமும் சேர்ந்து அழுகிவிட்டது என்று சொல்லத்தக்க அளவில் சமீப காலத்தில் சில சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. சில மாதங்களுக்கு முன் சட்டக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கலவரங்களின் போது கல்லூரி நிர்வாகம் காவல்துறைக்கு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து நின்றது விமர்சனத்திற்கு உள்ளானது. இன்று யாருடைய ஆணையும் இன்றி உள்ள நுழைந்து தலைமை நீதிபதி (பொறுப்பு) வேண்டிக்கொண்டும் வெளியேறாமல் இரக்கமற்ற கொடுந் தாக்குதல் ஒன்றை வரலாறு காணாத வகையில் வழக்குரைஞர்கள் மீது மேற்கொண்டுள்ளது. காவல்துறையினரே பொதுச் சொத்துக்களையும் வழக்குரைஞர்களின் உடமைகளையும் கொடூரமாக அழித்துள்ளனர். இந்திய அளவில் இன்று பரப்பரபாகியுள்ள இச்சம்பவம் குறித்த உண்மைகளை அறிய தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய ஒரு உண்மை அறியும் குழு கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டது.உறுப்பினர்கள்:1. பேரா. என். பாபையா, மக்கள் ஜனநாயக கழகம் (PDF), கர்நாடகம்.2. பேரா. ஜி.கே. இராமசாமி, மக்கள் ஜனநாயக கழகம் (PDF), கர்நாடகம்.3. திரு. வி.எஸ்.கிருஷ்ணா, மனித உரிமைக் கழகம் (HRF), ஆந்திரா.4. திரு. கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி.5. பேரா. அ.மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), தமிழ்நாடு.6. முனைவர். ப. சிவக்குமார், கல்வியாளர், முன்னாள் அரசு கல்லூரி முதல்வர், சென்னை.7. பேரா. சே.கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), காரைக்குடி.8. திரு. அயன்புரம் இராஜேந்திரன், பொறியாளர், தென்னிந்திய இரயில்வே, சென்னை.9. திரு. சிவகுருநாதன், மனித உரிமைளுக்கான மக்கள் கழகம் (PUHR), திருவாரூர்.10. திரு. நடராசன், மனித உரிமை ஆர்வலர், சென்னை.இக்குழு உறுப்பினர்கள் சென்ற பிப்ரவரி 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தையும் அழிக்கப்பட்டுள்ள பொது சொத்துக்களையும் பார்வையிட்டனர். பாதிக்கப்பட்ட மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்குரைஞர்களைச் சந்தித்தனர். சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும், சிகிச்சைக்குப் பின் வெளியே அனுப்பப்பட்டுள்ள வழக்குரைஞர்களையும் சந்தித்தனர். சென்னைஉயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தலைவர் திரு. பால் கனகராஜ், முன்னாள் தலைவர் திரு. கருப்பன், சென்னை சட்டக் கழகத் தலைவர் திரு.டி.வி.கிருஷ்ணகுமார், நீதிமன்றப் பதிவாளர் (மேலாண்மை) திரு.விஜயன், பாதிக்கப்பட்ட நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோரையும் சந்தித்தனர். பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சட்டமன்ற உறுப்பினரும் வழக்குரைஞருமான பதர் சயீத் அவர்களுடனும் உரையாடியுள்ளார். தலைமைப் பதிவாளர் திருமதி.மாலா பதிவாளர் (நிர்வாகம்) ஆகியோர் பார்க்க மறுத்துவிட்டனர். பதிவாளர் விஜயன் எங்களைச் சந்தித்த போதும் பிரச்சினை விசாரணையில் உள்ளது எனச் சொல்-எந்தத் தகவலையும் அளிக்க மறுத்துவிட்டார். தாக்குதல் மற்றும் பொருள் அழிவு குறித்து புகார்கள் ஏதும் தரப்பட்டுள்ளதா என்பது போன்ற சாதாரணத் தகவல்களையும் கூட, பொது நல நோக்கில் ஆய்வுக்கு வந்துள்ள சிவில் சமூக உறுப்பினர்களுக்குத் தருவதற்கு விசாரணை எந்த வகையில் தடையாக உள்ளது என்பது எங்களுக்கு விளங்கவில்லை. அதேபோல் நகர காவல்துறை ஆணையர் திரு. ராதாகிருஷ்ணனை எமது குழு பிப்ரவரி 27 மாலை தொடர்பு கொண்டபோது, குழு உறுப்பினர்களின் பெயர்களை எல்லாம் விளக்கமாகக் கேட்டுக் கொண்ட அவர், அரசு பேச அனுமதி அளித்தால்தான் பேச முடியும் என்றார். அவர் கூறியபடி இரவு 8 மணிக்குத் தொடர்பு கொண்டபோது தொலைபேசியை எடுக்கவே மறுத்துவிட்டார்.இக் குழு உறுப்பினர் அ.மார்க்ஸ் சென்ற பிப்ரவரி 26 அன்று மதுரையில் சில வழக்குரைஞர்களையும் மதுரை வழக்குரைஞர் சங்கச் செயலாளர் திரு.ஏ.கே.ராமசாமி அவர்களையும் சந்தித்துப் பேசினார். சுப்பிரமணிய சாமியைச் சந்திக்க நாங்கள் முயற்சித்தபோது அவர் டெல்-யில் உள்ளதாகப் பதிலளித்தார்.பின்னணி:ஈழத்தில் இன்று இனவாத இலங்கை அரசு மேற்கொண்டுள்ள போர், அதனால் தமிழ் மக்கள் பெரிய அளவில் அழிக்கப்படுதல், இந்திய அரசு அதற்கு இராணுவ ரீதியான உதவிகளைச் செய்தல் ஆகியவற்றை எதிர்த்து தமிழக வழக்குரைஞர்கள் பெரிய அளவில் கடந்த ஜனவரி, 29 முதல் வேலை நிறுத்தம் செய்து போராடி விடுகின்றனர். மனித உரிமை நோக்கிலும், மனிதாபிமான அடிப்படையிலும் தமிழகம் தழுவி நடைபெறுகிற இன்றைய போர் எதிர்ப்புப் போராட்டங்களில் வழக்குரைஞர்களும், மாணவர்களும் முன்னணியில் இருப்பது அரசுக்கு எரிச்சலூட்டுவதாக இருந்து வந்தது. கல்லூரி மற்றும் விடுதிகளை மூடி மாணவர் போராட்டத்தை ஓரளவு கட்டுப்படுத்தியது போல வழக்குரைஞர்கள் போராட்டத்தை அரசால் முடிவுக்குக் கொண்டுவர இயலவில்லை. இந்நிலையில் அவர்களின் போராட்டத்தை கடுமையாக ஒடுக்குவது என்கிற முடிவை அரசு மேற்கொண்டது.அரசின் இந்நிலைப்பாட்டின் முதல் வெளிப்பாடாக சென்ற பிப்ரவரி 4 நிகழ்ச்சிகள் அமைந்தன. அன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்னும் கூட்டமைப்பு தமிழ்நாடு தழுவிய பந்த்தை அறிவித்திருந்தது. அன்று கடைகளை அடைக்க வற்புறுத்தியதாக மூன்று வழக்குரைஞர் குழுக்களைக் காவல்துறையினர் தனித்தனியே கைது செய்தனர். இரு குழுக்களை மாலையில் விடுதலை செய்த காவல்துறையினர் போராட்டத்தில் முன்னணியிலுள்ள இளம் வழக்குரைஞர்கள் அடங்கிய ஒரு குழுவை மட்டும் ‘ரிமாண்ட்’ செய்வதற்காக அன்று மாலை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றனர். அதை அறிந்த பிற வழக்குரைஞர்கள் அவர்களுக்கு ஆதரவாகவும் பிணை கோரவும் பெருந்திரளாக, முழக்கங்களுடன் அவர்கள் சென்ற போலீஸ் வேனைப் பின்தொடர்ந்தபோது எவ்விதத் தூண்டலும் இன்றி காவல்துறையினர் மேற்கொண்ட தடியடிப் பிரயோகத்தில் வழக்கறிஞர் புகழேந்தியின் தலை உடைந்தது. வேறு சில வழக்குரைஞர்களும் அடிபட்டனர். தலையில் 5 தையல்களுடன் புகழேந்தி சென்னை பொது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற நேர்ந்தது. ‘ரிமாண்ட்’ செய்ய வேண்டியவர்களை ராஜராத்தினம் ஸ்டேடியத்திற்குக் கொண்டு சென்று இரவு வெகு நேரம் கழித்து நீதிபதி ஒருவரை அழைத்து வந்து ரிமாண்ட் செய்ய முயற்சித்துள்ளனர்.தொடர்ந்து ஈழ ஆதரவுகுற்ற நடைமுறைச் சட்டத் திருத்த எதிர்ப்பு ஆகியவற்றை முன்னிருத்தி வழக்குரைஞர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். போராட்டம் தீவிரமாக செல்வதையும், கொடும்பாவி எதிப்பு முதலான வடிவங்கள் எடுப்பதையும் அரசும் காவல்துறையும் ஆத்திரத்துடன் கவனித்து வந்தன. இங்கொன்றைக் குறிப்பிடுவது முக்கியம். வழக்குரைஞர் தொழி-ல் இன்று இளம் வழக்குரைஞர்களின் வீதம் அதிகம். தவிரவும் ஒரு காலத்தில் வழக்குரைஞர்கள் தொழில் சமூகத்தின் மேற்தட்டுகளி-ருந்து வந்தவர்களாலேயே நிரப்பப்பட்ட நிலை இன்று மாறி அடித்தளச் சமூகத்தினர் பெரிய அளவில் பங்கேற்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. முற்றிலும் மனித உரிமைகள் சார்ந்த இன்றைய பிரச்சினையில் போர் நிறுத்தம் கோரியும் இந்திய அரசு போருக்கு உதவி செய்வதை எதிர்த்தும் நடத்திய இப்போராட்டத்தில் இத்தகைய இளம் வழக்குரைஞர்கள் முன்னணியில் நிற்பது யாரும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று. ஆனால் அரசும், காவல்துறையும், பொதுவான மத்தியதர வர்க்க மனப்பாங்கும் இதைப் புரிந்து கொள்ள மறுத்தன.இந்நிலையில்தான் சென்ற 17ந் தேதி நடைபெற்ற ஒரு சிறு சம்வத்தை வழக்குரைஞர்களுக்கு எதிராகக் காவல்துறை பயன்படுத்தியது. வழக்கம்போல அன்றும் வேலை நிறுத்தத்தில் உள்ள வழக்குரைஞர்கள், வேலை நடைபெறக்கூடிய நீதிமன்றங்களுக்கு எதிரில் முழக்கங்கள் இட்டுச் சென்று கொண்டிருந்தனர்.அப்போது நீதிமன்ற வளாகம் ஒன்றில் நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா மற்றம் கே.சந்துரு முன்னிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலையத்துறை எடுத்துக் கொள்வதற்கு எதிரான ‘ரிட் அப்பீல்’ வழக்கு ஒன்று விசாரிக்கப்பட இருந்தது. மத்திய அமைச்சர் சுப்பிரமணிய சாமி அங்கு வந்து வழக்குரைஞர்கள் அமரும் மேடையில் (Dias) அமர்ந்தார். அவருடன் அவரது வழக்குரைஞர் ராதா மோகனும் இருந்துள்ளார். ஈழப் போராட்டத்தில் மட்டுமின்றி இது போன்ற வழக்குகளில் இடையீடு செய்வதை வழக்கமாக கொண்ட அவரைக் கண்டதும் வழக்குரைஞர்கள் அவருக்கு எதிராக முழக்கமிட்டுள்ளனர்.அவர்களின் கோபத்தைத் தூண்டும் வண்ணம் அவர் தனது வழக்குரைஞரிடம் இவர்களைப் பற்றி இழிவாகப் பேசியும் உள்ளார். முழங்கங்கள் தீவிரமானபோது யாரோ சிலர் சாமி மீது முட்டைகளை வீசியுள்ளனர். நீதிபதி சந்துரு கண்டித்த பின் வழக்குரைஞர்கள் கலைந்துள்ளனர். சுப்பிரமணியசாமியும் புகர் ஏதும் தராமல் வீடு சென்றுள்ளார். எனினும் பத்திரிகைகளில் இது செய்தியாகியது. நீதிபதி சந்துரு, நடந்த நிகழ்ச்சி குறித்து தலைமை நீதிபதிக்கு (பொறுப்பு) அறிக்கை ஒன்று அளித்துள்ளார். எனினும் அதில் எந்த வழக்குரைஞர்கள் பெயரும் குறிப்பிடப்படவில்லை. நடந்த நிகழ்ச்சி வருந்தத்தக்கதுதான். தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியதுதான். எனினும் இந்தச் சிறிய நிகழ்வை அதற்குரிய சட்டப்படி சந்திக்காமல் இதை முன்னிட்டு வழக்குரைஞர்களை வழிக்குக் கொண்டுவர அரசும் காவல்துறையும் முடிவு செய்தது தொடர்ந்த நிகழ்ச்சிகள் மூலம் உறுதியாகிறது.பாதிப்படைந்த நபர் எந்தப் புகாரும் அளிக்காதபோதும் வழக்குரைஞர்கள் ரஜினிகாந்த், விஜேந்திரன், கினி இமானுவேல், புகழேந்தி, ஜெய்குமார், மனோகர், சிவசங்கரன், வடிவாம்பாள், செங்கொடி, கயல் (எ) அங்கயற்கண்ணி, ரவிக்குமார், பார்த்தசாரதி மற்றும் 6 பேர்கள் மீது இ.பி.கோ 147, 451, 355, 353, 333, 506(II), 294(B), 153(A), 307 மற்றும் 3(1) TNPPD சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, 18-ந் தேதி அன்று இவர்களில் கினி இமானுவேலைக் கைதும் செய்தனர். மற்றவர்களையும் கைது செய்வதற்குக் கெடுபிடிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையில் சென்ற 19 முதல் வேலைநிறுத்தத்தை முடிந்துக்கொண்டு நீதிமன்றங்களுக்குச் செல்வது என்கிற முடிவை வழக்குரைஞர்கள் எடுத்தனர். அன்று நீதிமன்றம் இயங்கியது. மேற்கண்ட 20 பேரையும் கைது செய்ய காவல்துறை மும்முரமாக உள்ளதை அறிந்த தொடர்புடைய வழக்குரைஞர்கள் அதற்குத் தயாராக வந்தனர். எனினும் 17-ந் தேதி நிகழ்வின்போது தம்மை இழிவு செய்யும் வகையில் பேசிய சுப்பிமணிசாமியை விட்டுவிட்டு தம்மீது மட்டுமே இத்தகைய மோசமான பிரிவுகளில் வழக்கு மேற்கொள்ளபட்டுள்ளதைக் கணக்கில் கொண்டு, மேற்படி வழக்கில் ஏ1 ஆக உள்ள ரஜினிகாந்த், சுப்பிரமணியசாமி மீது புகாரளிப்பது என முடிவு செய்து, முன்னாள் தலைவர் கருப்பன் உள்ளிட்ட சுமார் 200 வழக்குரைஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள பி4 காவல் நிலையத்திற்குச் சென்றனர். கடும் விவாதத்திற்குப் பின்னர் சுப்பிரமணியசாமி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. நீங்கள் கேட்டபடி அறிக்கை பதிவு செய்தாகிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் வேனில் ஏறுங்கள் என காவல்துறையினர் கெடுபிடி செய்தனர்.இதற்கிடையில் சுமார் 200 லத்தி ஏந்திய போலீசார் பி4 காவல்நிலையம் அருகே கொண்டு வந்து குவிக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட 20 பேரும் அந்த இடத்தில் இல்லை. ஒரு சில வழக்குரைஞர்கள் தமது சங்கக் கட்டிடத்திற்குச் சென்று 20 பேரில் கைதானவர் ஒருவர் தவிர மீதியுள்ளவர்களைத் திரட்டிக் கொண்டு வந்து முழக்கமிட்ட வண்ணம் கைதாகலாம் என்கிற முடிவுடன் சங்க அலுவலகத்திற்குச் சென்றனர்.இந்நிலையில் உதவி ஆணையர் விஸ்வநாதன் மற்றும் இணை ஆணையர் இராமசுப்பிரமணி ஆகியோர் அங்கிருந்த சுமார் 15 வழக்குரைஞர்களை “ரவுண்ட் அப்” செய்து வேனில் ஏற்றினார். இவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆத்திரமடைந்த வழக்குரைஞர்கள் முழக்கமிட்டு முன்னேறிவர காவல்துறையினரின் வரலாறு காணாத கொடுந்தாக்குதல் தொடங்கியது. அப்போது நேரம் சுமார் மாலை 3.30 மணி.தாக்குதல்உயர்நீதி மன்றத்தின் வாயில்களை அடைத்த காவல்துறையினர் மூர்க்கமாகத் தாக்கத் தொடங்கினர். மேலும் அதிக அளவில் தாக்குதல் படை (SAF) கொண்டு வந்து குவித்துத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. வளாகத்திற்குள் நின்றிருந்தவழக்குரைஞர்கள் மற்றும் எல்லோரது வாகனங்களும் மூர்க்கத்தனமாக தாக்கி அழிக்கப்பட்டன. காவல்துறையினர் தமது வேன்களில் கற்கள் கொண்டு வந்ததை நேரில் பார்த்ததாகப் பெயர் குறிப்பிட விரும்பாத மூவர் எங்களிடம் கூறினர். நகர சிவில் நீதிமன்றம், குடும்பநீதி மன்றம், ஆகிவற்றிற்கு அருகில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் பெரிய அளவில் அழிக்கப்பட்டன.காயமடைந்த வழக்குரைஞர்கள் ரத்தம் சொட்டச் சொட்ட வளாகங்களுக்குள் ஒடி ஒளிந்து கொண்டனர். நடப்பதை அறிந்த தலைமை நீதிபதி (பொறுப்பு), காவல்துறைஆணையரைத் தொடர்புகொண்டு படைகளை வெளியே அனுப்புமாறு கேட்டுக்கொண்டும் பயனில்லை. 4மணி சுமாருக்கு நீதிபதி சுதாகர் வெளியே வந்து தாக்குதலை நிறுத்த முனைந்தார். பின் தலைமை நீதிபதியும் வெளிவந்தார். இதனால் சுமார் 15 நிமிடங்கள் தாக்குதல் நிறுத்தப்பட்டது. ரத்தம் ஒழுகும் சுமார் 10 வழக்குரைஞர்கள் வெளியே கொண்டு செல்லப்பட்டனர். நீதிபதிகள் திரும்பியவுடன் காவல்துறையின் வெறியாட்டம் மீண்டும் தொடங்கியது. இம்முறை சுமார் 1மணி நேரம் மாலை 5.30 வரை தாக்குதல் நடந்தது. 5.30 மணி சுமாருக்கு நீதிபதி ஆறுமுக பெருமாள் ஆதித்தன் உள்பட 5 நீதிபதிகள் வெளியே வந்தனர். சமாதானம் செய்வதும் தாக்குதலை நிறுத்துவதும் மட்டுமே அவர்களின் நோக்கம். ஆனால் இம்முறை நீதிபதிகளையும் விட்டுவைக்க காவல் துறையினர் தயாராக இல்லை. அவர்களும் தாக்கப்பட்டனர். நீதிபதி ஆதித்தன் அவர்கள் லத்தியால் தாக்கப்பட்டார். தலையிலும் காயம் அடைந்தார். மற்ற நீதிபதிகளும் தாக்கப்பட்டனர்.ஆதித்தன் அவர்களைத் தாக்கும் போது “அவர் நீதிபதி அவரை அடிக்காதீர்கள்” எனக் கூவி பாதுகாப்புக்கு வந்த இளம் வழக்குரைஞர்கள் ஏழு பேர் கடுமையாகத் தாக்கப்பட்டு, ஒரு சிலர் மண்டை உடைந்து அப்போலோ மருத்துவமனையில் இருந்ததை குழு உறுப்பினர்கள் கண்டனர். நீதிபதி என்ற போது, “எந்த தேவடியா மகனா இருந்த என்னடா” என்று அடித்ததை அவர்கள் குறிப்பிட்டனர். பெண் நீதிபதி ஒருவரை, “நீதிபதியா இவ, ஆயா மாதிரி இருக்கா” எனச் சொல்லி அடித்துள்ளனர்.நீதிமன்ற வளாகங்களுக்குள் புகுந்து கண்ணாடிக் கதவுகள், கணினிகள், நூலகங்கள், வழக்குரைஞர் அறைகள், வழக்கு மன்றங்கள் அனைத்தும் தாக்கித் தகர்த்து நொறுக்கப்பட்டன. கண்ணில்பட்ட கருப்பு வெள்ளை சட்டை அணிந்த வழக்குரைஞர்கள் ஒவ்வொருவரும் அடித்து நொறுக்கப்பட்டனர்.மாலை 6.30 மணி வாக்கில் எப்படியோ தப்பி வெளியே என்.எஸ்.சி. போஸ் சாலைக்கு வந்தவர்கள் எல்லாம் அடித்து தாக்கப்பட்டனர். சாலையில் துரத்தித் துரத்தி வழக்குரைஞர்கள் அடிக்கப்பட்டனர். பெண் வழக்குரைஞர்களை “தேவடியாச் சிறுக்கிகளா” எனக் கத்தி தாக்கியதாக ஒரு பெண் வழக்குரைஞர் குறிப்பிட்டார்.சாலையில் தங்களை விரட்டி விரட்டி அடித்ததைச் சொல்லும் போது வழக்குரைஞர் சுதாவின் கண்கள் கலங்கின. கயல் என்னும் பெண் வழக்குரைஞர் கடும் காயம்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுள்ளார். வழக்குரைஞர் அலுவலகங்கள் அதிகம் உள்ள தம்பு செட்டித் தெருவிலும் புகுந்து தாக்கியுள்ளனர்.வழக்குரைஞர்களுக்கு சீருடை தைக்கும் கடை, செராக்ஸ் செய்து கொடுக்கும் டால்பின் செராக்ஸ் முதலிய கடைகளும் கூட உடைக்கப்பட்டன. அங்கிருந்தவர்களும் தாக்கப்பட்டனர். இரவு 7.00 மணிவரை வெறியாட்டம் தொடர்ந்தது.எந்த அளவுக்கு காவல் துறையினர் வெறியோடு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்பதற்கு ஏராளமான எடுத்துக் காட்டுகளைச் சொல்லாம். பெண் வழக்குரைஞர்கள் தாக்கப்பட்டது தவிர, நீதிபதிகளும் பெண்களும் தம் வாழ் நாளில் கேட்டிராத வசவுகளால் இழிவுசெய்யப்பட்டது தவிர, குடும்ப நீதிமன்றம், வழக்குரைஞர் ஒய்வு பகுதியில் உள்ள குழந்தை காப்பகங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. சென்னை சட்டக் கழகம் மற்றும் வழக்குரைஞர் சங்க அலுவலகளிலுள்ள நூலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ள நிலை இனப்படுகொலைகளின் போது நூலகங்கள் எரியூட்டப்படுவதை நினைவுறுத்துகிறது.சென்னை சட்டக் கழகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த சோனி தொலைக்காட்சி, இரு செராக்ஸ் எந்திரங்கள், நூலக அரங்கம், சலவைக்கல் மேஜைகள் ஆகியவை அழிக்கப்பட்டதோடு 60 வயதான அதன் மேலாளர் ராஜகுருவும் தாக்கப்பட்டு தலையில் காயமடைந்துள்ளார். மூன்று ஊழியர்களும் கூட தாக்கப்பட்டுள்ளனர். வழக்குரைஞர்கள் தவிர நீதிமன்ற ஊழியர்கள் பலரும் தாக்கப்பட்டுள்ளனர். தமது அலுவலகத்தி-ருந்து சில ஆவணங்களைக் காவல்துறையினர் தூக்கிச் சென்றதாகவும் ஒரு பெண் ஊழியர் எங்களிடம் குறிப்பிட்டார்.பத்திரிகையாளர் சிலரும் தாக்கப்பட்டுள்ளனர். ‘தமிழ் ஓசை’யைச் சேர்ந்த கார்த்திக் பாபு, ‘மக்கள் தொலைக்காட்சி’ யைச் சேர்ந்த ஜோதிமணி, சேதுராமன் மற்றும் ‘நக்கீரன்’ இதழைச் சேர்ந்த ஒருவர், ‘தமிழ்ச்சுடர்’ புகைப்படகாரர் எனப் பலரும் தாக்கப்பட்டுள்ளனர்.சுமார் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் (கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள்) அடித்து நொறுக்கி நாசமாக்கப்பட்டுள்ளன. பெரிய அளவில் வழக்குரைஞர்கள், பெண்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் அச்சம் உறைந்துள்ளது. பொருள் இழப்புகளை விட இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள அச்சம் கவலைக்குரியதாக உள்ளது. பல ஊழியர்கள் பேச மறுக்கின்றனர். சுதாகர் என்னம் இளம் வழக்குரைஞர் மாடியிலிருந்து சன்ஷேட் ஒன்றில் குதித்து இரு கரங்களும் கூப்பி நிற்கும் காட்சி யாரையும் கலங்க அடிக்கும். கைது செய்யப்பட்டு 6 நாட்கள் வரை காவ-ல் இருந்து விடுதலையாகியுள்ள வழக்குரைஞர் கினி எங்ளிடம் பேசியபோது காவல்நிலையத்தில் “கோட்டா” வழக்குரைஞர்கள் எனப் போராடுகிறவர்களை இட ஒதுக்கீட்டில் பயன் பெற்றவர்கள் எனக் கேலி செய்ததைக் குறிப்பிட்டார். சுமார் 83 வழக்குரைஞர்கள் முதல் அரசு மருத்துவமனையிலும் பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தனியார் மருத்துமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர். இது தவிர சொந்தப் பொறுப்பில் தனியார் மருத்துவமனைகளில் தங்கிச் சிகிச்சை பெற்றவர்கள், வெளி நோயாளிகளாகச் சிகிச்சை பெற்றவர்கள் ஏராளம்.ஊடகங்களில் ஏதோ வழக்குரைஞர்களும் காவல்துறையினரும் சம அளவில் ஒருவரை ஒருவர் கல்வீசித் தாக்கிக் கொண்டதாகக் காட்டப்பட்டது. முதற் கட்டத்தில் வழக்குரைஞர்களும் கூட சிறிது நேரம் கல்வீசியிருக்கலாம். ஆனால், கொடுந்தாக்குதலுக்குப் பின் அவர்கள் எல்லோரும் தம்மைத் தற்காத்துக் கொள்வதிலும், ஓடி ஒளிந்து கொள்வதிலும், அச்சத்தில் திகைத்துத் தப்புவதிலும்தான் குறியாய் இருந்துள்ளனர். இடையில் பி4 காவல் நிலையம் எரிக்கப்பட்டது. மேல் தோற்றத்தில் இது வழக்குரைஞர்கள் செய்தது போலத் தோன்றினாலும் அப்போது அங்கிருந்த சூழல், காவல் நிலையத்திற்கு முன்னதாகப் பெரிய அளவில் போலீஸ் மற்றம் தாக்குதல் படை குவிக்கப்பட்டிருந்தது. எனவே வழக்குரைஞர்கள் இதைச் செய்திருப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. தலைமை நீதிபதி (பொறுப்பு), நீதிபதி தனபாலன், நீதிபதி சந்துரு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தமது ஆணையில் பதிவு செய்துள்ளபடி சம்பவத்தின் போதே பெண் வழக்குரைஞர்கள் பலரும் இதை மறுத்துள்ளனர். காவல்துறையே நிலையத்திற்குத் தீ வைத்திருக்க வேண்டும் என்கிற ஐயமும் இன்று முன்வைக்கப்படுகிறது. இது தனியே விசாரிக்கப்பட்டு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். குறிப்பாகச் சில இளைஞர்களை அரசும் காவல்துறையும் மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தி அடையாளம் காட்டுவதை எமது குழு மிகக் கவலையுடன் நோக்குகிறது. மிகவும் அடிப்படையான மனிதாபிமான நோக்கிலிருந்து நடத்தப்படுகிற ஒரு போராட்டத்தில் முன்னணியாக இருந்தார்கள் என்கிற ஒரே நோக்கிற்காகவும், மனித உரிமைகளுக்காகப் போராடக்கூடிய சில வழக்குரைஞர் அமைப்புகளில் இருக்கிறார்கள் என்பதற்காகவும் பழைய வழக்குகளை எல்லாம் தேடிப்பிடித்து எடுத்து தாதாக்களைப் போல காவல் துறையினர் இவர்களைச் சித்திரிக்கின்றனர்.காவல்துறையினர் சொல்வதை அப்படியே ஏற்று “Gang of 20” என்பது போன்ற மொழியில் ஒரு சில பத்திரிகைகள் எழுதுவதும், படங்களை வெளியிடுவதும் வருத்தத்தை அளிக்கின்றன. அடிப்படை பத்திரிக்கை தருமங்களுக்கு இது முரணானது என்பதை எமது குழு வருத்தத்துடன் சுட்டிக் காட்டுகிறது.எமது பார்வைகளும் பரிந்துரைகளும்1. சட்டத்தின் காவலாளர்களான, தமது உரிமைகளையும் சட்டங்களையும் நன்கறிந்த வழக்குரைஞர்களே இவ்வாறு சென்னை போன்ற ஒரு பெரு நகரில் வைத்துத் தாக்கப்படுவார்களேயானால், ஏழை, எளிய பாமர மக்களின் கதி என்ன என்கிற கவலை உருவாகிறது. ஜனநாயக அரசு ஒன்றில் காவல்துறை இப்படி மேலும் மேலும் அதிகாரம் பெறுவதும், அரசு மட்டுமின்றி ஏனைய அரசியற் கட்சிகளும் அதைக் கண்டு கொள்ளாததும் கவலையளிக்கிறது. மதுரையில் உயர் போலீஸ் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி கையில் துப்பாக்கியை நீட்டி வழக்குரைஞர்களை நோக்கி வரும் புகைப்படம் எல்லா இதழ்களிலும் வெளிவந்துள்ளது. காவல்துறையின் ஈரலும் இதயமும் அழுகியிருப்பதற்கு இது ஒரு சான்று.2. அமைதியாகப் போராடிக் கொண்டுள்ள வழக்குரைஞர்களைக் கைது செய்வதற்கு பெருங் கலவரங்களை ஒடுக்குவதற்காகப் பயிற்சி பெற்ற தாக்குதல் படை (SAF), அதுவும் இந்த அளவில் ஏன் குவிக்கப்பட்டது? இந்தப் படைக் குவிப்பிற்கு உத்தரவிட்டது யார்? தாக்குதலுக்கு உத்தரவிட்டது யார்? நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு ஏன் இன்னும் அரசு பதிலளிக்கவில்லை? நீதிமன்றமும் ஏன் இதைக் கண்டுக்கொள்ளவில்லை? வெறும் 147 காவல்துறையினரே அன்று குவிக்கப்பட்டிருந்ததாகவும், அதில் 122 பேர் காயமடைந்துள்ளதாகவும், நீதிமன்றத்திற்கு அரசு தன் வழக்கறிஞர் மூலம் தகவல் அளிப்பது எத்தனை அபத்தமானது. வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய பொய்யுரை இது.3. முட்டை வீசியதாக குற்றம் சாட்டி கடும் பிரிவுகளின் கீழ் வழக்குரைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள அரசு, சுப்பிரமணிய சாமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதா? அவர் மீது நடவடிக்கை எடுக்க இத்தனை அவசரம் ஏன் காட்டப்படவில்லை?4. நேர்மையாளராகப் பெயர் பெற்றுள்ள நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதையும், அதற்கு வழக்குரைஞர்கள் முழுமையாக ஒத்துழைக்க முடிவெடுத்துள்ளதையும், இக்குழு வரவேற்கிறது .5. அரசு ஆணைப்படியும், நீதிமன்ற உத்தரவின்படியும், ஒரு சில காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலை போதாது. தாக்குதலுக்கு காரணமானவர்களாக அடையாளம் காட்டப்பட்டுள்ள கீழ்கண்ட அதிகாரிகள்1. கே. ராதாகிருஷ்ணன், காவல்துறை ஆணையர்,2. டி. ராஜேந்திரன், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஓழுங்கு),3. ஏ.கே. விஸ்வநாதன், கூடுதல் ஆணையர்,4. இராமசுப்பிரமணி, இணை ஆணையர்,5. சந்தீப் ராய் ராத்தோர், இணை ஆணையர்,6. சாரங்கன், துணை ஆணையர்,7. பிரேம் ஆனந்த் சின்ஹா, துணை ஆணையர்,8. பன்னீர்செல்வம், துணை ஆணையர்ஆகியோர் உடனடியாகத் தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் தொடரப்படவேண்டும்.5. வழக்குரைஞர்கள் மற்றும் நீதிமன்ற அலுவலகர்கள் மத்தியில் உறைந்துள்ள அச்சத்தை நீக்கி நம்பிக்கை ஏற்படுத்துவது அவசியம். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது தவிர இழப்புகள் ஈடு செய்யப்படுவது அவசியம். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த காவல்துறையினர் அனைவர் மீதும் தமிழ்நாடு பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்போர் மீது நடவடிக்கை (TNPPD Act) சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படவேண்டும். சட்ட அமைச்சரும் முதலமைச்சரும் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்க வேண்டும். இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் யாரும் வந்து பார்வையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.6. ஒரு சில இளம் வழக்குரைஞர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தாதாக்கள் போல சித்திரிக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும். உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் எடுத்த முடிவின் அடிப்படையில் செயல்பட்ட ஒரு சிலரை மட்டும் இப்படித் தனித்துப் பழிவாங்க அரசும், காவல்துறையும் முயற்சிக்கக்கூடாது.

சென்னை உயர்நீதி மன்றம் : காவல்துறை வன்முறை

சில ஆண்டுகட்கு முன்னர் இன்றைய முதல்வர் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது தமிழக காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது என்றார். ஈரல் மட்டுமல்ல இதயமும் சேர்ந்து அழுகிவிட்டது என்று சொல்லத்தக்க அளவில் சமீப காலத்தில் சில சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. சில மாதங்களுக்கு முன் சட்டக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கலவரங்களின் போது கல்லூரி நிர்வாகம் காவல்துறைக்கு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து நின்றது விமர்சனத்திற்கு உள்ளானது. இன்று யாருடைய ஆணையும் இன்றி உள்ள நுழைந்து தலைமை நீதிபதி (பொறுப்பு) வேண்டிக்கொண்டும் வெளியேறாமல் இரக்கமற்ற கொடுந் தாக்குதல் ஒன்றை வரலாறு காணாத வகையில் வழக்குரைஞர்கள் மீது மேற்கொண்டுள்ளது. காவல்துறையினரே பொதுச் சொத்துக்களையும் வழக்குரைஞர்களின் உடமைகளையும் கொடூரமாக அழித்துள்ளனர். இந்திய அளவில் இன்று பரப்பரபாகியுள்ள இச்சம்பவம் குறித்த உண்மைகளை அறிய தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய ஒரு உண்மை அறியும் குழு கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டது.உறுப்பினர்கள்:1. பேரா. என். பாபையா, மக்கள் ஜனநாயக கழகம் (PDF), கர்நாடகம்.2. பேரா. ஜி.கே. இராமசாமி, மக்கள் ஜனநாயக கழகம் (PDF), கர்நாடகம்.3. திரு. வி.எஸ்.கிருஷ்ணா, மனித உரிமைக் கழகம் (HRF), ஆந்திரா.4. திரு. கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி.5. பேரா. அ.மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), தமிழ்நாடு.6. முனைவர். ப. சிவக்குமார், கல்வியாளர், முன்னாள் அரசு கல்லூரி முதல்வர், சென்னை.7. பேரா. சே.கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), காரைக்குடி.8. திரு. அயன்புரம் இராஜேந்திரன், பொறியாளர், தென்னிந்திய இரயில்வே, சென்னை.9. திரு. சிவகுருநாதன், மனித உரிமைளுக்கான மக்கள் கழகம் (PUHR), திருவாரூர்.10. திரு. நடராசன், மனித உரிமை ஆர்வலர், சென்னை.இக்குழு உறுப்பினர்கள் சென்ற பிப்ரவரி 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தையும் அழிக்கப்பட்டுள்ள பொது சொத்துக்களையும் பார்வையிட்டனர். பாதிக்கப்பட்ட மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்குரைஞர்களைச் சந்தித்தனர். சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும், சிகிச்சைக்குப் பின் வெளியே அனுப்பப்பட்டுள்ள வழக்குரைஞர்களையும் சந்தித்தனர். சென்னைஉயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தலைவர் திரு. பால் கனகராஜ், முன்னாள் தலைவர் திரு. கருப்பன், சென்னை சட்டக் கழகத் தலைவர் திரு.டி.வி.கிருஷ்ணகுமார், நீதிமன்றப் பதிவாளர் (மேலாண்மை) திரு.விஜயன், பாதிக்கப்பட்ட நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோரையும் சந்தித்தனர். பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சட்டமன்ற உறுப்பினரும் வழக்குரைஞருமான பதர் சயீத் அவர்களுடனும் உரையாடியுள்ளார். தலைமைப் பதிவாளர் திருமதி.மாலா பதிவாளர் (நிர்வாகம்) ஆகியோர் பார்க்க மறுத்துவிட்டனர். பதிவாளர் விஜயன் எங்களைச் சந்தித்த போதும் பிரச்சினை விசாரணையில் உள்ளது எனச் சொல்-எந்தத் தகவலையும் அளிக்க மறுத்துவிட்டார். தாக்குதல் மற்றும் பொருள் அழிவு குறித்து புகார்கள் ஏதும் தரப்பட்டுள்ளதா என்பது போன்ற சாதாரணத் தகவல்களையும் கூட, பொது நல நோக்கில் ஆய்வுக்கு வந்துள்ள சிவில் சமூக உறுப்பினர்களுக்குத் தருவதற்கு விசாரணை எந்த வகையில் தடையாக உள்ளது என்பது எங்களுக்கு விளங்கவில்லை. அதேபோல் நகர காவல்துறை ஆணையர் திரு. ராதாகிருஷ்ணனை எமது குழு பிப்ரவரி 27 மாலை தொடர்பு கொண்டபோது, குழு உறுப்பினர்களின் பெயர்களை எல்லாம் விளக்கமாகக் கேட்டுக் கொண்ட அவர், அரசு பேச அனுமதி அளித்தால்தான் பேச முடியும் என்றார். அவர் கூறியபடி இரவு 8 மணிக்குத் தொடர்பு கொண்டபோது தொலைபேசியை எடுக்கவே மறுத்துவிட்டார்.இக் குழு உறுப்பினர் அ.மார்க்ஸ் சென்ற பிப்ரவரி 26 அன்று மதுரையில் சில வழக்குரைஞர்களையும் மதுரை வழக்குரைஞர் சங்கச் செயலாளர் திரு.ஏ.கே.ராமசாமி அவர்களையும் சந்தித்துப் பேசினார். சுப்பிரமணிய சாமியைச் சந்திக்க நாங்கள் முயற்சித்தபோது அவர் டெல்-யில் உள்ளதாகப் பதிலளித்தார்.பின்னணி:ஈழத்தில் இன்று இனவாத இலங்கை அரசு மேற்கொண்டுள்ள போர், அதனால் தமிழ் மக்கள் பெரிய அளவில் அழிக்கப்படுதல், இந்திய அரசு அதற்கு இராணுவ ரீதியான உதவிகளைச் செய்தல் ஆகியவற்றை எதிர்த்து தமிழக வழக்குரைஞர்கள் பெரிய அளவில் கடந்த ஜனவரி, 29 முதல் வேலை நிறுத்தம் செய்து போராடி விடுகின்றனர். மனித உரிமை நோக்கிலும், மனிதாபிமான அடிப்படையிலும் தமிழகம் தழுவி நடைபெறுகிற இன்றைய போர் எதிர்ப்புப் போராட்டங்களில் வழக்குரைஞர்களும், மாணவர்களும் முன்னணியில் இருப்பது அரசுக்கு எரிச்சலூட்டுவதாக இருந்து வந்தது. கல்லூரி மற்றும் விடுதிகளை மூடி மாணவர் போராட்டத்தை ஓரளவு கட்டுப்படுத்தியது போல வழக்குரைஞர்கள் போராட்டத்தை அரசால் முடிவுக்குக் கொண்டுவர இயலவில்லை. இந்நிலையில் அவர்களின் போராட்டத்தை கடுமையாக ஒடுக்குவது என்கிற முடிவை அரசு மேற்கொண்டது.அரசின் இந்நிலைப்பாட்டின் முதல் வெளிப்பாடாக சென்ற பிப்ரவரி 4 நிகழ்ச்சிகள் அமைந்தன. அன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்னும் கூட்டமைப்பு தமிழ்நாடு தழுவிய பந்த்தை அறிவித்திருந்தது. அன்று கடைகளை அடைக்க வற்புறுத்தியதாக மூன்று வழக்குரைஞர் குழுக்களைக் காவல்துறையினர் தனித்தனியே கைது செய்தனர். இரு குழுக்களை மாலையில் விடுதலை செய்த காவல்துறையினர் போராட்டத்தில் முன்னணியிலுள்ள இளம் வழக்குரைஞர்கள் அடங்கிய ஒரு குழுவை மட்டும் ‘ரிமாண்ட்’ செய்வதற்காக அன்று மாலை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றனர். அதை அறிந்த பிற வழக்குரைஞர்கள் அவர்களுக்கு ஆதரவாகவும் பிணை கோரவும் பெருந்திரளாக, முழக்கங்களுடன் அவர்கள் சென்ற போலீஸ் வேனைப் பின்தொடர்ந்தபோது எவ்விதத் தூண்டலும் இன்றி காவல்துறையினர் மேற்கொண்ட தடியடிப் பிரயோகத்தில் வழக்கறிஞர் புகழேந்தியின் தலை உடைந்தது. வேறு சில வழக்குரைஞர்களும் அடிபட்டனர். தலையில் 5 தையல்களுடன் புகழேந்தி சென்னை பொது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற நேர்ந்தது. ‘ரிமாண்ட்’ செய்ய வேண்டியவர்களை ராஜராத்தினம் ஸ்டேடியத்திற்குக் கொண்டு சென்று இரவு வெகு நேரம் கழித்து நீதிபதி ஒருவரை அழைத்து வந்து ரிமாண்ட் செய்ய முயற்சித்துள்ளனர்.தொடர்ந்து ஈழ ஆதரவுகுற்ற நடைமுறைச் சட்டத் திருத்த எதிர்ப்பு ஆகியவற்றை முன்னிருத்தி வழக்குரைஞர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். போராட்டம் தீவிரமாக செல்வதையும், கொடும்பாவி எதிப்பு முதலான வடிவங்கள் எடுப்பதையும் அரசும் காவல்துறையும் ஆத்திரத்துடன் கவனித்து வந்தன. இங்கொன்றைக் குறிப்பிடுவது முக்கியம். வழக்குரைஞர் தொழி-ல் இன்று இளம் வழக்குரைஞர்களின் வீதம் அதிகம். தவிரவும் ஒரு காலத்தில் வழக்குரைஞர்கள் தொழில் சமூகத்தின் மேற்தட்டுகளி-ருந்து வந்தவர்களாலேயே நிரப்பப்பட்ட நிலை இன்று மாறி அடித்தளச் சமூகத்தினர் பெரிய அளவில் பங்கேற்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. முற்றிலும் மனித உரிமைகள் சார்ந்த இன்றைய பிரச்சினையில் போர் நிறுத்தம் கோரியும் இந்திய அரசு போருக்கு உதவி செய்வதை எதிர்த்தும் நடத்திய இப்போராட்டத்தில் இத்தகைய இளம் வழக்குரைஞர்கள் முன்னணியில் நிற்பது யாரும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று. ஆனால் அரசும், காவல்துறையும், பொதுவான மத்தியதர வர்க்க மனப்பாங்கும் இதைப் புரிந்து கொள்ள மறுத்தன.இந்நிலையில்தான் சென்ற 17ந் தேதி நடைபெற்ற ஒரு சிறு சம்வத்தை வழக்குரைஞர்களுக்கு எதிராகக் காவல்துறை பயன்படுத்தியது. வழக்கம்போல அன்றும் வேலை நிறுத்தத்தில் உள்ள வழக்குரைஞர்கள், வேலை நடைபெறக்கூடிய நீதிமன்றங்களுக்கு எதிரில் முழக்கங்கள் இட்டுச் சென்று கொண்டிருந்தனர்.அப்போது நீதிமன்ற வளாகம் ஒன்றில் நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா மற்றம் கே.சந்துரு முன்னிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலையத்துறை எடுத்துக் கொள்வதற்கு எதிரான ‘ரிட் அப்பீல்’ வழக்கு ஒன்று விசாரிக்கப்பட இருந்தது. மத்திய அமைச்சர் சுப்பிரமணிய சாமி அங்கு வந்து வழக்குரைஞர்கள் அமரும் மேடையில் (Dias) அமர்ந்தார். அவருடன் அவரது வழக்குரைஞர் ராதா மோகனும் இருந்துள்ளார். ஈழப் போராட்டத்தில் மட்டுமின்றி இது போன்ற வழக்குகளில் இடையீடு செய்வதை வழக்கமாக கொண்ட அவரைக் கண்டதும் வழக்குரைஞர்கள் அவருக்கு எதிராக முழக்கமிட்டுள்ளனர்.அவர்களின் கோபத்தைத் தூண்டும் வண்ணம் அவர் தனது வழக்குரைஞரிடம் இவர்களைப் பற்றி இழிவாகப் பேசியும் உள்ளார். முழங்கங்கள் தீவிரமானபோது யாரோ சிலர் சாமி மீது முட்டைகளை வீசியுள்ளனர். நீதிபதி சந்துரு கண்டித்த பின் வழக்குரைஞர்கள் கலைந்துள்ளனர். சுப்பிரமணியசாமியும் புகர் ஏதும் தராமல் வீடு சென்றுள்ளார். எனினும் பத்திரிகைகளில் இது செய்தியாகியது. நீதிபதி சந்துரு, நடந்த நிகழ்ச்சி குறித்து தலைமை நீதிபதிக்கு (பொறுப்பு) அறிக்கை ஒன்று அளித்துள்ளார். எனினும் அதில் எந்த வழக்குரைஞர்கள் பெயரும் குறிப்பிடப்படவில்லை. நடந்த நிகழ்ச்சி வருந்தத்தக்கதுதான். தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியதுதான். எனினும் இந்தச் சிறிய நிகழ்வை அதற்குரிய சட்டப்படி சந்திக்காமல் இதை முன்னிட்டு வழக்குரைஞர்களை வழிக்குக் கொண்டுவர அரசும் காவல்துறையும் முடிவு செய்தது தொடர்ந்த நிகழ்ச்சிகள் மூலம் உறுதியாகிறது.பாதிப்படைந்த நபர் எந்தப் புகாரும் அளிக்காதபோதும் வழக்குரைஞர்கள் ரஜினிகாந்த், விஜேந்திரன், கினி இமானுவேல், புகழேந்தி, ஜெய்குமார், மனோகர், சிவசங்கரன், வடிவாம்பாள், செங்கொடி, கயல் (எ) அங்கயற்கண்ணி, ரவிக்குமார், பார்த்தசாரதி மற்றும் 6 பேர்கள் மீது இ.பி.கோ 147, 451, 355, 353, 333, 506(II), 294(B), 153(A), 307 மற்றும் 3(1) TNPPD சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, 18-ந் தேதி அன்று இவர்களில் கினி இமானுவேலைக் கைதும் செய்தனர். மற்றவர்களையும் கைது செய்வதற்குக் கெடுபிடிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையில் சென்ற 19 முதல் வேலைநிறுத்தத்தை முடிந்துக்கொண்டு நீதிமன்றங்களுக்குச் செல்வது என்கிற முடிவை வழக்குரைஞர்கள் எடுத்தனர். அன்று நீதிமன்றம் இயங்கியது. மேற்கண்ட 20 பேரையும் கைது செய்ய காவல்துறை மும்முரமாக உள்ளதை அறிந்த தொடர்புடைய வழக்குரைஞர்கள் அதற்குத் தயாராக வந்தனர். எனினும் 17-ந் தேதி நிகழ்வின்போது தம்மை இழிவு செய்யும் வகையில் பேசிய சுப்பிமணிசாமியை விட்டுவிட்டு தம்மீது மட்டுமே இத்தகைய மோசமான பிரிவுகளில் வழக்கு மேற்கொள்ளபட்டுள்ளதைக் கணக்கில் கொண்டு, மேற்படி வழக்கில் ஏ1 ஆக உள்ள ரஜினிகாந்த், சுப்பிரமணியசாமி மீது புகாரளிப்பது என முடிவு செய்து, முன்னாள் தலைவர் கருப்பன் உள்ளிட்ட சுமார் 200 வழக்குரைஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள பி4 காவல் நிலையத்திற்குச் சென்றனர். கடும் விவாதத்திற்குப் பின்னர் சுப்பிரமணியசாமி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. நீங்கள் கேட்டபடி அறிக்கை பதிவு செய்தாகிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் வேனில் ஏறுங்கள் என காவல்துறையினர் கெடுபிடி செய்தனர்.இதற்கிடையில் சுமார் 200 லத்தி ஏந்திய போலீசார் பி4 காவல்நிலையம் அருகே கொண்டு வந்து குவிக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட 20 பேரும் அந்த இடத்தில் இல்லை. ஒரு சில வழக்குரைஞர்கள் தமது சங்கக் கட்டிடத்திற்குச் சென்று 20 பேரில் கைதானவர் ஒருவர் தவிர மீதியுள்ளவர்களைத் திரட்டிக் கொண்டு வந்து முழக்கமிட்ட வண்ணம் கைதாகலாம் என்கிற முடிவுடன் சங்க அலுவலகத்திற்குச் சென்றனர்.இந்நிலையில் உதவி ஆணையர் விஸ்வநாதன் மற்றும் இணை ஆணையர் இராமசுப்பிரமணி ஆகியோர் அங்கிருந்த சுமார் 15 வழக்குரைஞர்களை “ரவுண்ட் அப்” செய்து வேனில் ஏற்றினார். இவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆத்திரமடைந்த வழக்குரைஞர்கள் முழக்கமிட்டு முன்னேறிவர காவல்துறையினரின் வரலாறு காணாத கொடுந்தாக்குதல் தொடங்கியது. அப்போது நேரம் சுமார் மாலை 3.30 மணி.தாக்குதல்உயர்நீதி மன்றத்தின் வாயில்களை அடைத்த காவல்துறையினர் மூர்க்கமாகத் தாக்கத் தொடங்கினர். மேலும் அதிக அளவில் தாக்குதல் படை (SAF) கொண்டு வந்து குவித்துத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. வளாகத்திற்குள் நின்றிருந்தவழக்குரைஞர்கள் மற்றும் எல்லோரது வாகனங்களும் மூர்க்கத்தனமாக தாக்கி அழிக்கப்பட்டன. காவல்துறையினர் தமது வேன்களில் கற்கள் கொண்டு வந்ததை நேரில் பார்த்ததாகப் பெயர் குறிப்பிட விரும்பாத மூவர் எங்களிடம் கூறினர். நகர சிவில் நீதிமன்றம், குடும்பநீதி மன்றம், ஆகிவற்றிற்கு அருகில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் பெரிய அளவில் அழிக்கப்பட்டன.காயமடைந்த வழக்குரைஞர்கள் ரத்தம் சொட்டச் சொட்ட வளாகங்களுக்குள் ஒடி ஒளிந்து கொண்டனர். நடப்பதை அறிந்த தலைமை நீதிபதி (பொறுப்பு), காவல்துறைஆணையரைத் தொடர்புகொண்டு படைகளை வெளியே அனுப்புமாறு கேட்டுக்கொண்டும் பயனில்லை. 4மணி சுமாருக்கு நீதிபதி சுதாகர் வெளியே வந்து தாக்குதலை நிறுத்த முனைந்தார். பின் தலைமை நீதிபதியும் வெளிவந்தார். இதனால் சுமார் 15 நிமிடங்கள் தாக்குதல் நிறுத்தப்பட்டது. ரத்தம் ஒழுகும் சுமார் 10 வழக்குரைஞர்கள் வெளியே கொண்டு செல்லப்பட்டனர். நீதிபதிகள் திரும்பியவுடன் காவல்துறையின் வெறியாட்டம் மீண்டும் தொடங்கியது. இம்முறை சுமார் 1மணி நேரம் மாலை 5.30 வரை தாக்குதல் நடந்தது. 5.30 மணி சுமாருக்கு நீதிபதி ஆறுமுக பெருமாள் ஆதித்தன் உள்பட 5 நீதிபதிகள் வெளியே வந்தனர். சமாதானம் செய்வதும் தாக்குதலை நிறுத்துவதும் மட்டுமே அவர்களின் நோக்கம். ஆனால் இம்முறை நீதிபதிகளையும் விட்டுவைக்க காவல் துறையினர் தயாராக இல்லை. அவர்களும் தாக்கப்பட்டனர். நீதிபதி ஆதித்தன் அவர்கள் லத்தியால் தாக்கப்பட்டார். தலையிலும் காயம் அடைந்தார். மற்ற நீதிபதிகளும் தாக்கப்பட்டனர்.ஆதித்தன் அவர்களைத் தாக்கும் போது “அவர் நீதிபதி அவரை அடிக்காதீர்கள்” எனக் கூவி பாதுகாப்புக்கு வந்த இளம் வழக்குரைஞர்கள் ஏழு பேர் கடுமையாகத் தாக்கப்பட்டு, ஒரு சிலர் மண்டை உடைந்து அப்போலோ மருத்துவமனையில் இருந்ததை குழு உறுப்பினர்கள் கண்டனர். நீதிபதி என்ற போது, “எந்த தேவடியா மகனா இருந்த என்னடா” என்று அடித்ததை அவர்கள் குறிப்பிட்டனர். பெண் நீதிபதி ஒருவரை, “நீதிபதியா இவ, ஆயா மாதிரி இருக்கா” எனச் சொல்லி அடித்துள்ளனர்.நீதிமன்ற வளாகங்களுக்குள் புகுந்து கண்ணாடிக் கதவுகள், கணினிகள், நூலகங்கள், வழக்குரைஞர் அறைகள், வழக்கு மன்றங்கள் அனைத்தும் தாக்கித் தகர்த்து நொறுக்கப்பட்டன. கண்ணில்பட்ட கருப்பு வெள்ளை சட்டை அணிந்த வழக்குரைஞர்கள் ஒவ்வொருவரும் அடித்து நொறுக்கப்பட்டனர்.மாலை 6.30 மணி வாக்கில் எப்படியோ தப்பி வெளியே என்.எஸ்.சி. போஸ் சாலைக்கு வந்தவர்கள் எல்லாம் அடித்து தாக்கப்பட்டனர். சாலையில் துரத்தித் துரத்தி வழக்குரைஞர்கள் அடிக்கப்பட்டனர். பெண் வழக்குரைஞர்களை “தேவடியாச் சிறுக்கிகளா” எனக் கத்தி தாக்கியதாக ஒரு பெண் வழக்குரைஞர் குறிப்பிட்டார்.சாலையில் தங்களை விரட்டி விரட்டி அடித்ததைச் சொல்லும் போது வழக்குரைஞர் சுதாவின் கண்கள் கலங்கின. கயல் என்னும் பெண் வழக்குரைஞர் கடும் காயம்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுள்ளார். வழக்குரைஞர் அலுவலகங்கள் அதிகம் உள்ள தம்பு செட்டித் தெருவிலும் புகுந்து தாக்கியுள்ளனர்.வழக்குரைஞர்களுக்கு சீருடை தைக்கும் கடை, செராக்ஸ் செய்து கொடுக்கும் டால்பின் செராக்ஸ் முதலிய கடைகளும் கூட உடைக்கப்பட்டன. அங்கிருந்தவர்களும் தாக்கப்பட்டனர். இரவு 7.00 மணிவரை வெறியாட்டம் தொடர்ந்தது.எந்த அளவுக்கு காவல் துறையினர் வெறியோடு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்பதற்கு ஏராளமான எடுத்துக் காட்டுகளைச் சொல்லாம். பெண் வழக்குரைஞர்கள் தாக்கப்பட்டது தவிர, நீதிபதிகளும் பெண்களும் தம் வாழ் நாளில் கேட்டிராத வசவுகளால் இழிவுசெய்யப்பட்டது தவிர, குடும்ப நீதிமன்றம், வழக்குரைஞர் ஒய்வு பகுதியில் உள்ள குழந்தை காப்பகங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. சென்னை சட்டக் கழகம் மற்றும் வழக்குரைஞர் சங்க அலுவலகளிலுள்ள நூலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ள நிலை இனப்படுகொலைகளின் போது நூலகங்கள் எரியூட்டப்படுவதை நினைவுறுத்துகிறது.சென்னை சட்டக் கழகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த சோனி தொலைக்காட்சி, இரு செராக்ஸ் எந்திரங்கள், நூலக அரங்கம், சலவைக்கல் மேஜைகள் ஆகியவை அழிக்கப்பட்டதோடு 60 வயதான அதன் மேலாளர் ராஜகுருவும் தாக்கப்பட்டு தலையில் காயமடைந்துள்ளார். மூன்று ஊழியர்களும் கூட தாக்கப்பட்டுள்ளனர். வழக்குரைஞர்கள் தவிர நீதிமன்ற ஊழியர்கள் பலரும் தாக்கப்பட்டுள்ளனர். தமது அலுவலகத்தி-ருந்து சில ஆவணங்களைக் காவல்துறையினர் தூக்கிச் சென்றதாகவும் ஒரு பெண் ஊழியர் எங்களிடம் குறிப்பிட்டார்.பத்திரிகையாளர் சிலரும் தாக்கப்பட்டுள்ளனர். ‘தமிழ் ஓசை’யைச் சேர்ந்த கார்த்திக் பாபு, ‘மக்கள் தொலைக்காட்சி’ யைச் சேர்ந்த ஜோதிமணி, சேதுராமன் மற்றும் ‘நக்கீரன்’ இதழைச் சேர்ந்த ஒருவர், ‘தமிழ்ச்சுடர்’ புகைப்படகாரர் எனப் பலரும் தாக்கப்பட்டுள்ளனர்.சுமார் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் (கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள்) அடித்து நொறுக்கி நாசமாக்கப்பட்டுள்ளன. பெரிய அளவில் வழக்குரைஞர்கள், பெண்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் அச்சம் உறைந்துள்ளது. பொருள் இழப்புகளை விட இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள அச்சம் கவலைக்குரியதாக உள்ளது. பல ஊழியர்கள் பேச மறுக்கின்றனர். சுதாகர் என்னம் இளம் வழக்குரைஞர் மாடியிலிருந்து சன்ஷேட் ஒன்றில் குதித்து இரு கரங்களும் கூப்பி நிற்கும் காட்சி யாரையும் கலங்க அடிக்கும். கைது செய்யப்பட்டு 6 நாட்கள் வரை காவ-ல் இருந்து விடுதலையாகியுள்ள வழக்குரைஞர் கினி எங்ளிடம் பேசியபோது காவல்நிலையத்தில் “கோட்டா” வழக்குரைஞர்கள் எனப் போராடுகிறவர்களை இட ஒதுக்கீட்டில் பயன் பெற்றவர்கள் எனக் கேலி செய்ததைக் குறிப்பிட்டார். சுமார் 83 வழக்குரைஞர்கள் முதல் அரசு மருத்துவமனையிலும் பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தனியார் மருத்துமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர். இது தவிர சொந்தப் பொறுப்பில் தனியார் மருத்துவமனைகளில் தங்கிச் சிகிச்சை பெற்றவர்கள், வெளி நோயாளிகளாகச் சிகிச்சை பெற்றவர்கள் ஏராளம்.ஊடகங்களில் ஏதோ வழக்குரைஞர்களும் காவல்துறையினரும் சம அளவில் ஒருவரை ஒருவர் கல்வீசித் தாக்கிக் கொண்டதாகக் காட்டப்பட்டது. முதற் கட்டத்தில் வழக்குரைஞர்களும் கூட சிறிது நேரம் கல்வீசியிருக்கலாம். ஆனால், கொடுந்தாக்குதலுக்குப் பின் அவர்கள் எல்லோரும் தம்மைத் தற்காத்துக் கொள்வதிலும், ஓடி ஒளிந்து கொள்வதிலும், அச்சத்தில் திகைத்துத் தப்புவதிலும்தான் குறியாய் இருந்துள்ளனர். இடையில் பி4 காவல் நிலையம் எரிக்கப்பட்டது. மேல் தோற்றத்தில் இது வழக்குரைஞர்கள் செய்தது போலத் தோன்றினாலும் அப்போது அங்கிருந்த சூழல், காவல் நிலையத்திற்கு முன்னதாகப் பெரிய அளவில் போலீஸ் மற்றம் தாக்குதல் படை குவிக்கப்பட்டிருந்தது. எனவே வழக்குரைஞர்கள் இதைச் செய்திருப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. தலைமை நீதிபதி (பொறுப்பு), நீதிபதி தனபாலன், நீதிபதி சந்துரு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தமது ஆணையில் பதிவு செய்துள்ளபடி சம்பவத்தின் போதே பெண் வழக்குரைஞர்கள் பலரும் இதை மறுத்துள்ளனர். காவல்துறையே நிலையத்திற்குத் தீ வைத்திருக்க வேண்டும் என்கிற ஐயமும் இன்று முன்வைக்கப்படுகிறது. இது தனியே விசாரிக்கப்பட்டு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். குறிப்பாகச் சில இளைஞர்களை அரசும் காவல்துறையும் மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தி அடையாளம் காட்டுவதை எமது குழு மிகக் கவலையுடன் நோக்குகிறது. மிகவும் அடிப்படையான மனிதாபிமான நோக்கிலிருந்து நடத்தப்படுகிற ஒரு போராட்டத்தில் முன்னணியாக இருந்தார்கள் என்கிற ஒரே நோக்கிற்காகவும், மனித உரிமைகளுக்காகப் போராடக்கூடிய சில வழக்குரைஞர் அமைப்புகளில் இருக்கிறார்கள் என்பதற்காகவும் பழைய வழக்குகளை எல்லாம் தேடிப்பிடித்து எடுத்து தாதாக்களைப் போல காவல் துறையினர் இவர்களைச் சித்திரிக்கின்றனர்.காவல்துறையினர் சொல்வதை அப்படியே ஏற்று “Gang of 20” என்பது போன்ற மொழியில் ஒரு சில பத்திரிகைகள் எழுதுவதும், படங்களை வெளியிடுவதும் வருத்தத்தை அளிக்கின்றன. அடிப்படை பத்திரிக்கை தருமங்களுக்கு இது முரணானது என்பதை எமது குழு வருத்தத்துடன் சுட்டிக் காட்டுகிறது.எமது பார்வைகளும் பரிந்துரைகளும்1. சட்டத்தின் காவலாளர்களான, தமது உரிமைகளையும் சட்டங்களையும் நன்கறிந்த வழக்குரைஞர்களே இவ்வாறு சென்னை போன்ற ஒரு பெரு நகரில் வைத்துத் தாக்கப்படுவார்களேயானால், ஏழை, எளிய பாமர மக்களின் கதி என்ன என்கிற கவலை உருவாகிறது. ஜனநாயக அரசு ஒன்றில் காவல்துறை இப்படி மேலும் மேலும் அதிகாரம் பெறுவதும், அரசு மட்டுமின்றி ஏனைய அரசியற் கட்சிகளும் அதைக் கண்டு கொள்ளாததும் கவலையளிக்கிறது. மதுரையில் உயர் போலீஸ் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி கையில் துப்பாக்கியை நீட்டி வழக்குரைஞர்களை நோக்கி வரும் புகைப்படம் எல்லா இதழ்களிலும் வெளிவந்துள்ளது. காவல்துறையின் ஈரலும் இதயமும் அழுகியிருப்பதற்கு இது ஒரு சான்று.2. அமைதியாகப் போராடிக் கொண்டுள்ள வழக்குரைஞர்களைக் கைது செய்வதற்கு பெருங் கலவரங்களை ஒடுக்குவதற்காகப் பயிற்சி பெற்ற தாக்குதல் படை (SAF), அதுவும் இந்த அளவில் ஏன் குவிக்கப்பட்டது? இந்தப் படைக் குவிப்பிற்கு உத்தரவிட்டது யார்? தாக்குதலுக்கு உத்தரவிட்டது யார்? நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு ஏன் இன்னும் அரசு பதிலளிக்கவில்லை? நீதிமன்றமும் ஏன் இதைக் கண்டுக்கொள்ளவில்லை? வெறும் 147 காவல்துறையினரே அன்று குவிக்கப்பட்டிருந்ததாகவும், அதில் 122 பேர் காயமடைந்துள்ளதாகவும், நீதிமன்றத்திற்கு அரசு தன் வழக்கறிஞர் மூலம் தகவல் அளிப்பது எத்தனை அபத்தமானது. வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய பொய்யுரை இது.3. முட்டை வீசியதாக குற்றம் சாட்டி கடும் பிரிவுகளின் கீழ் வழக்குரைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள அரசு, சுப்பிரமணிய சாமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதா? அவர் மீது நடவடிக்கை எடுக்க இத்தனை அவசரம் ஏன் காட்டப்படவில்லை?4. நேர்மையாளராகப் பெயர் பெற்றுள்ள நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதையும், அதற்கு வழக்குரைஞர்கள் முழுமையாக ஒத்துழைக்க முடிவெடுத்துள்ளதையும், இக்குழு வரவேற்கிறது .5. அரசு ஆணைப்படியும், நீதிமன்ற உத்தரவின்படியும், ஒரு சில காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலை போதாது. தாக்குதலுக்கு காரணமானவர்களாக அடையாளம் காட்டப்பட்டுள்ள கீழ்கண்ட அதிகாரிகள்1. கே. ராதாகிருஷ்ணன், காவல்துறை ஆணையர்,2. டி. ராஜேந்திரன், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஓழுங்கு),3. ஏ.கே. விஸ்வநாதன், கூடுதல் ஆணையர்,4. இராமசுப்பிரமணி, இணை ஆணையர்,5. சந்தீப் ராய் ராத்தோர், இணை ஆணையர்,6. சாரங்கன், துணை ஆணையர்,7. பிரேம் ஆனந்த் சின்ஹா, துணை ஆணையர்,8. பன்னீர்செல்வம், துணை ஆணையர்ஆகியோர் உடனடியாகத் தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் தொடரப்படவேண்டும்.5. வழக்குரைஞர்கள் மற்றும் நீதிமன்ற அலுவலகர்கள் மத்தியில் உறைந்துள்ள அச்சத்தை நீக்கி நம்பிக்கை ஏற்படுத்துவது அவசியம். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது தவிர இழப்புகள் ஈடு செய்யப்படுவது அவசியம். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த காவல்துறையினர் அனைவர் மீதும் தமிழ்நாடு பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்போர் மீது நடவடிக்கை (TNPPD Act) சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படவேண்டும். சட்ட அமைச்சரும் முதலமைச்சரும் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்க வேண்டும். இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் யாரும் வந்து பார்வையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.6. ஒரு சில இளம் வழக்குரைஞர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தாதாக்கள் போல சித்திரிக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும். உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் எடுத்த முடிவின் அடிப்படையில் செயல்பட்ட ஒரு சிலரை மட்டும் இப்படித் தனித்துப் பழிவாங்க அரசும், காவல்துறையும் முயற்சிக்கக்கூடாது.

Thursday, February 19, 2009

முத்துகுமார் கவிதைகள்


முத்துகுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 'புதியவன் முத்துகுமார்' என்ற பெயரில் எழுதிய கவிதைகள் இவைகள்.

தற்போது வந்துள்ள கவிதாசரண் (அக்டோபர் 08&மார்ச் 09) இதழில் வெளியாகியுள்ளது.

கவிதைகளை வெளியிட்டமை உட்பட அனைத்துக்கும் அய்யா கவிதாசரண் அவர்களுக்கு நன்றி.


சாதிப்பன

என் கண்ணைத் தோண்டி,

அமிலம் ஊற்றி,

காலை வெட்டி,

கையை உடைத்து,

குடலைக் கிழித்து,

சதையை அறுத்து,

என்னைக்

கொன்றுவிட்டதாக

எகத்தாளம் செய்யும்

என்

எதிரணியில் உள்ள

நண்பனே, நீஅறிவாயா?

போராளியின்

வாழ்வை விட

மரணம்

அதிகமாகவே சாதிக்கும்.


வாஸ்து

குளியறையில் சமையல்-

கழிவறையில் சாப்பாடு-

பரணில் படுக்கை-

நடுவீட்டில் கிணறு-

கூரையில் வாசல்-

குழப்ப வேண்டாம்-

இது‘வாஸ்து’ சாஸ்திர நிபுணரின்

வீடாகவும் இருக்கலாம்.


காகிதக் கூழ்

கல்லணை கட்ட

கரிகாலனுக்கு

போரடிமைகளும்

கற்களும்

தேவைபட்டனவாம்.

நாம்தான்

முன்னேறிவிட்டோமல்லவா

அறிவியலில்?

இனி

காவிரியில்

இன்னொரு

அணை கட்ட

கற்கள் தேவையில்லை.

கொஞ்சம் போதும்

காகிதக் கழிவுகளும்

காகிதக் கூழம்



மே

உழைப்பதற்குக்

கைகள் மட்டுமே

கொண்டிருந்த

தொழிலாள வர்க்கத்திற்கு

உரிமைகளை

உரக்கக் கேட்க

வாய் புதிதாக

வாய்த்த திருநாள்.


மனிதாபிமான உதவி

தீராத வழக்கொன்று

தினம் தினம்

சண்டைக்கென்று

திரள்கின்றான்

பக்கத்து வீட்டான்.
அவன்

பேச்சை மட்டுமல்ல

மூச்சையே நிறுத்திக்

கொலை செய்தாலும்

கூட

நல்லதுதான்.
கழுத்தைச் சுற்றிக்

கயிறு போட்டு

இறுக்கக்கையில்

தெம்பு இல்லை.
கத்தி

வாங்கக் கைவசம்

காசும் இல்லை.

அணுகுண்டு

கிடைத்தால்

நலம்.
தயவு செய்து

எந்த நாடாவது

செய்யுங்களேன்

எனக்கு

மனிதாபிமான உதவி.


சுயமரியாதை

மீண்டும்

மீண்டும்

மிதிக்கிறேன்

குரூரமாய்

ஆனாலும்

உயிரது

பனியாய்த்

துளிர்க்க

மீண்டும்

மீண்டும்

தலைநிமிர்கிறது-

புல்!


வைத்தியப் பரிமாணம்

உள்ளங்கை மட்டுமே

உடைமையாகஇருந்த

காலத்தில்

பாட்டி வைத்தியம்.
இழப்பதற்கு

குடிசையன்று

கிடைத்துவிட்ட

பிறகு

வைத்தியரிடம்

வந்தான்,

சொஸ்தமானது.
கையில்

கொஞ்சம்காசு

சேர்ந்தபோது

சர்கார் வைத்தியம்-

சடுதியில் அல்ல

சாவகாசமாய் சரியானது.
காசின்

பரிணாமம்

கொஞ்சமே

கொஞ்சம்

கூடிவிட்ட

பின்பு

தனியார்

வைத்தியம்

வாடிக்கையாளன்

ஆனான்.
காசுகள் காக்க

பணப் பைகள்

கிடைத்த பிறகு

ஸ்பெஷலிஸ்டிடம் போனான்
ஸ்பெஷலிஸ்ட்

வெற்றிகரமாக

முடித்து வைத்தார்

அவன் கதையை.


தனி வழி
நாலு பக்கம்

கடலிருந்தால்

தீவு.

மூனு பக்கம்

கடலிருந்தால்

தீபகற்பம்.
மூனு பக்கம்

கடல்

நாலாவது பக்கம்

மலை

எட்டுப் பக்கமும்

கடன்-

நம் தேசம்.


ஒரு வீடு இரு திருடர்கள்
அது

அவர்களுடைய

தொழில்

கொளையடிப்பதும்,

கொலை செய்வதும்.
நாய்களுக்கு

சிறுநீரால் ஆன

எல்லைக்கோடு போல

அவர்களுக்குத்

தொழில் தர்மம்.
ஒருவர்

தொழிலில் மற்றவர்

குறுக்கிட்டால்

குறுக்கிடும்

தொழில் தர்மம்.
ஒரு

வீட்டின் புறவாசல்

வழியேஒருவனும்,

கூரை வழியே

ஒருவனும்

தொழில் செய்யப் போனார்கள்

அந்தோ பரிதாபம்

குறுக்கிட்டது

தொழில் தர்மம்.
யார் தொழில் செய்வது.?

யார் பின்வாங்குவது?

முடிவு

காணமுடியவில்லை

திருடர்களால்.
முதல் திருடன்

சொன்னான்.

‘‘மக்கள் தீர்ப்பே

இரண்டாம் திருடன்

சொன்னான்‘திருடுவது

நம் உரிமை

அதைத் தீர்மானிப்பது

வீட்டுக்காரரின் கடமை.’
ஆகவே,

எழுப்பப்பட்டான்

அந்தவீட்டுக்காரன்.

அவன் முன் வாக்குப் பெட்டி.
யார்

திருடவேண்டுமெனத்

தீர்மானிக்கும்படி

வீட்டுக்காரன்

வேண்டப்பட்டான்.
அவனுக்கு

ஜனநாயக முறை பற்றிய

அறிவு புகட்டப்பட்டது.
இங்கு

திருடர்களுக்கு

வீட்டுக்காரனே

எஜமானன்.
அவன்

சொல்லும்

நபரே

திருட முடியும்.
கடைசியில்

ஜனநாயகம் வென்றது.

ஆம்-வீட்டுக்காரனைப்

புதைத்தார்கள்.

Monday, February 16, 2009

போரை நிறுத்து! - தாய்தமிழ் பிள்ளைகள் கருப்புக்கொடி ஊர்வலம்

ஈழ்த்தமிழினம் மீதான போரை நிறுத்தக்கோரி
திண்டிவனம், உரோசனை,
தாய்த் தமிம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் திண்டிவனத்தில் கருப்புக் கொடி ஊர்வலம் நடத்தினார்கள்.
1 முதல் 5 -ஆம் வகுப்பு வரை உள்ள 10 வயதுக்கும் குறைவான 95 மாணவ, மாணவிகள் சுமார் 2-00 மணி நேரம் திண்டிவனம் நகர் முழுவதும் நடந்துசென்றனர்.
மாணவர்களுடன், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்தவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் உட்பட சுமார் 100 பேர் என ஊர்வலத்தில் 200-க்கும் அதிகமனோர் கலந்துகொண்டனர்.
ஊர்வலத்தில் மாணவர்கள் அட்டைகளுடன், கருப்புக்கொடி ஏந்தி முழக்கமிட்டார்கள். ஊர்வலத்தின் சில புகைப்படங்கள்.































Saturday, February 14, 2009

செயல்வழிக் கற்றலை சரியாக அமல்படுத்தக் கோரியும்,
ஆசிரியர் மாணவர் விகிதம் 1 : 20 தேவையென வற்புறுத்தியும்


பள்ளிக்கல்வி மாநாடு

22-02-2009, காலை 9-00 மணி முதல் மாலை 4-00 மணி வரை, விழுப்புரம்.

ஏன் இந்த மாநாடு?
தமிழக அரசு தொடக்கப்பள்ளிகளில் செயல்வழிக்கற்றல் என்ற புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் சமீபத்தில் எழுந்துள்ளது. ஒருசில ஆசிரியர் சங்கங்கள் செயல்வழிக் கற்றலை எதிர்த்துப் பிரச்சாரங்களும், ஆர்ப்பாட்டங்களும் செய்துவருகின்றன. அதே வேளையில் வகுப்பறையில் செயல்வழிக் கற்றலை முறையாக நடைமுறைப்படுத்திப் பார்த்த ஆசிரியர்கள், இது ஒரு நல்ல முறை என வரவேற்கிறார்கள். மாணவர்களின் கற்றல் திறனில் முன்னேற்றம் உள்ளதாகக் கூறுகிறார்கள். தொடக்கக் கல்விதான் எல்லாவற்றுக்கும் அடிப்படையாகும். எனவே இது தொடர்பாக நாம் ஆராய்ந்து முடிவு செய்து செயல்பட வேண்டியது நமது கடமையாகும்.

செயல்வழிக் கற்றல் எப்படி வந்தது?
முதலில் இம்முறையானது ஆந்திராவில் உள்ள ரி´ வேலி பள்ளியில் பின்பற்றப்பட்டு வந்தது. இது பற்றி ஆய்வு செய்ய, திட்ட ஒருங்கிணைப்பாளர் நான்கு பேருடன் 26 ஆசிரியர்கள் அடங்கிய குழு தமிழ் நாட்டிலிருந்து சென்றது. அந்தப் பள்ளியில் பாடங்கள் சிறு சிறு அலகுகளாகப் பிரிக்கப்பட்டுக் குழந்தைகள் தாமாகவே அவற்றைக் கற்றுக்கொள்ளும் விதத்தைக் கவனித்தனர். அதன் அடிப்படையில் உருவானதே இந்த செயல்வழிக் கற்றல் ஆகும்.
ரிஷி வேலி முறையை அப்படியே எடுத்துக் கொள்ளாமல், அதை தமிழகச் சூழலுக்கு ஏற்றவாறு மேம்படுத்தப்பட்டுள்ளது. பின்பு இம்முறையானது 2003-ல் சென்னை மாநகராட்சியில் உள்ள 13 பள்ளிகளில் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டது. நிறை குறைகளைக் கண்டறிந்து, மேலும் செழுமைப்படுத்தி 2004-ல் சென்னை மாநகராட்சியில் உள்ள 264 பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தினார்கள். மாநிலம் முழுவதும் இருந்து கல்வியாளர்களும், அலுவலர்களும் மாநகராட்சிப் பள்ளிகளை, பார்வையிட்டு பாராட்டினார்கள். ஐ.நா. சபையில் கல்விக்கான பொறுப்பாளர்களும் இதுவே
சிறந்தமுறை என சான்றளித்தனர். இதன்பின்புதான் இக்கல்விமுறை 2006 இல் ஊராட்சி ஒன்றியத்திற்கு 10 பள்ளிகள் வீதமும், 2007 இல் அனைத்து பள்ளிகளுக்குமாக விரிவுபடுத்தப்பட்டது.

செயல்வழிக் கற்றல் என்றால் என்ன?
இது தானே கற்றல், மகிழ்வுடன் கற்றல், மாணவர் மையக் கல்வி, தனியாய் கற்றல், குழுவாய் கற்றல், ஆசிரியர் துணையுடன் கற்றல் போன்ற பல்வேறு கற்றல் முறைகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு திறனைக் கற்பதற்கும் பல்வேறு செயல்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு செயல்பாடும் ஒவ்வொரு அட்டையில் வண்ண வண்ண நிறங்களில் கண்ணைக் கவரும் படங்களுடன் அச்சிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஆறு குழுவாகப் பிரிந்து அமரும் வண்ணம் தரையில் பாய்கள் போடப்பட்டு இருக்கும். முதல் மூன்று குழுக்கள் ஆசிரியர் துணையுடனும், 4,5
-வது குழுக்கள் சக மாணவர் உதவியுடனும், 6-வது குழு தனியே கற்றலுக்கும் ஏற்றவாறு குழு அட்டைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் ஒரு செயல் அட்டை முடிந்தவுடன் அடுத்து எந்தச் செயல் செய்ய வேண்டும் என்ற வழிகாட்டியும் (ஏணிப்படி),அடையாளச் சின்னங்களுடன் (முத்திரை) வழங்கப்பட்டுள்ளது.

செயல்வழிக் கற்றலின் சிறப்புகள் :
மாணவர்கள் ஒரு திறனை அடைந்த பிறகுதான் அடுத்தத் திறனை அடைய முடியும். இது போன்று ஒரு வகுப்பிற்கான திறன்களை முடித்த பிறகுதான் அடுத்த வகுப்பிற்கான திறன்களை கற்க முடியும். மாணவர்களின் தனித்திறன் மற்றும் வேகத்திற்கு ஏற்பக் கற்க முடியும். இது ஆசிரியர் மைய வகுப்பறையை, மாணவர் மைய வகுப்பறையாக மாற்றியுள்ளது. கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.
கல்வியின் நோக்கமான அறிவியல் மனப்பான்மை, கற்பனைத்திறன், படைப்பாற்றதன்னம்பிக்கை மற்றும் ஆளுமைப் பண்புகளை வளர்ப்பதாக இக்கல்வி முறை உள்ளது. இதனை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வரவேற்றுள்ளது.
அ.கி.வேங்கடசுப்பரமணியன், டாக்டர் வசந்தி தேவி, எஸ்.எஸ். ராஜகோபாலன், எழுத்தாளர் ரவிக்குமார் போன்ற கல்வியாளர்கள் செயல்வழிக் கற்றலை ஆதரிக்கிறார்கள். தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இந்தியா முழுவதும் 7341 பள்ளிகளில் மேற்கொண்ட ஆய்வில் மொழி மற்றும் கணிதப் பாடத்தில் தமிழகம் முதல் நிலையில் உள்ளது. இதற்கு செயல்வழிக் கற்றலே காரணமாகும்.

மாணவர் சேர்க்கை எதனால் குறைகிறது?
செயல்வழிக் கற்றல் முறையை விரும்பாமல் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழிப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள் என்று சில ஆசிரியர் சங்கங்கள் கூறுகின்றன. உண்மையில், ஆங்கில மோகம் கவனிப்பாரற்றுக் கிடக்கும் அரசுப் பள்ளிகள், உள் கட்டமைப்பு, மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை கல்வியில் வணிகமயம் போன்ற பல காரணங்களால் கடந்த பல ஆண்டுகளாகவே, அரசுப் பள்ளிகளில் சேர்க்கைக் குறைந்து வருகிறது. இதனால் 1985-ல் 212 ஆக இருந்த மெட்ரிகுலேசன் பள்ளிகளின் எண்ணிக்கை 2005-ல் 3386 ஆகக் கூடியுள்ளது. செயல்வழிக் கற்றலை நன்கு செயல் படுத்தினால், அரசுப் பள்ளிகளின் தரம் உயரும். தாய் மொழியில் பயில்வதே சிறந்தது என்பதையும், செயல்வழிக் கற்றலின் சிறப்புகளையும் மக்களிடம் விளக்கினால், மெட்ரிகுலேசன் பள்ளிகளை பொதுமக்கள் புறக்கணிப்பார்கள், அரசுப் பள்ளிகளை ஆதரிப்பார்கள்.


20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் :


கல்விக்கண் திறந்த காமராசர் காலத்தில் 20 மாணவர் இருந்தால் ஒரு ஆசிரியரை நியமனம் செய்தார்கள். அதனால் கல்வித்தரம் சிறந்தோங்கியது எனவேதான் அவருடைய காலத்தை கல்வியின் பொற்காலம் என்கிறோம். பின்பு வந்தவர்கள் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரை நியமித்தனர். இதனால் கல்வித்தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் போடுவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகியும், இன்னும் அதை நிறைவேற்ற வில்லை. கேட்டால் சம்பளம் கொடுக்க பணமில்லை என்கிறார்கள்.
ஆண்டுதோறும், சைக்கிள் வழங்க ரூ.120 கோடி, டி.வி. வழங்க ரூ.750 கோடி, ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போட ரூ. 1,000 கோடி என “வாரி வழங்கும்” இவர்களால் 20 மாணவருக்கு ஒரு ஆசிரியர் போட முடியாதா?


பள்ளிக்கல்வி மாநாடு

  • 1965-ல் மாணவர்கள், உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்று இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தினார்கள். 500-க்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1967-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 40 ஆண்டுகள் கழித்து இன்றைய நிலைமை என்ன? தமிழ் வழியில் படிக்கும் மாணவன் தலை நிமிர முடியவில்லை.
  • சமச்சீர் கல்வி கொண்டுவர முத்துக்குமரன் குழுவை நியமித்தார்கள். அறிக்கை சமர்ப்பித்து ஓராண்டுக்கும் மேலாகிறது. அமலாக்கம் பற்றி பேச்சே இல்லை.
  • +2 மேல்நிலைக் கல்வியில் இரண்டு ஆண்டுகளும், பொதுத்தேர்வு நடத்தி வரும் ஆந்திரப்பிரதேசத்தில் கடந்த ஆண்டு 1697 பேர் ஐ.ஐ.டி. யில் தேர்வு பெற்றார்கள். ஒரு ஆண்டு மட்டும் தேர்வு நடத்துவதால் தமிழகத்தில் இருந்து 202 பேர் மட்டுமே தேர்வு பெற்றார்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
  • தமிழகத்தில் அரசுப் பள்ளிகளுக்கு, வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்-நியமனம் செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நல்ல ஆசிரியர்கள் கிடைப்பார்களா?
  • தனிப்பயிற்சி மற்றும் காப்பியடிக்கும் கலாச்சாரம் பற்றி பேசவேண்டாமா?

ஆன்மீகவாதிகளும் அரசியல்வாதிகளும் போட்டிப் போட்டுக்கொண்டு கல்வி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர், எனவே நாம்தான் ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக குரல் கொடுக்கவேண்டும். எனவேதான் இந்த மாநாடு.
ஆதரவு தாரீர், அணிதிரண்டு வாரீர்.

மக்கள் கல்வி கூட்டமைப்பு
துரும்பர் விடுதலை இயக்கம். சமூக நீதி அறக்கட்டளை, சாந்தி நிலையம். கவசம்.சுரபி. மக்கள் கல்வி இயக்கம்.
பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளை. புனித அன்னாள் கல்விச்சுடர். மலரகம்-சமூக செயல்பாட்டு அரங்கம். மனித உரிமைகள் கண்காணிப்புக் கழகம். கிராமக் குழந்தைகள் கல்வி முன்னேற்ற சமூகசேவை நிறுவனம். சமூகக்கல்விக்கான கிராமப் பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை. பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம். திண்டிவனம் நகரக் கல்வி மக்கள் மேம்பாட்டுக்குழு. குழந்தைகளைக் கொண்டாடுவோம்-கல்வி இயக்கம், ஆனந்தன் கிராமப்புற வளர்ச்சி அறக்கட்டளை - பெருங்கலம்பூண்டி. ( தொடர்புக்கு : 94433 28740 )

Monday, February 2, 2009

முத்துக்குமார் - நினைவேந்தல்


ஈழப் போராட்டத்தில் இந்திய அரசின் போக்கை கண்டித்து சென்னையில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட பத்திரிகையாளர் முத்துக்குமாரின்

நினைவு ஊர்வலம் 28-01-2009 மாலை 5-30 மணியளவில் திண்டிவனம் நேரு வீதியில் நடத்தப்பட்டது. பின்பு 6-15 மணியளவில் காந்தி சிலை அருகில் நினைவுக் கூட்டமும் நடைபெற்றது. நகரக் கல்வி மக்கள் மேம்பாட்டுக்குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர் மு.கந்தசாமி. பேராசிரியர் பா.கல்யாணி, தி.அ.நசீர் அகமது, வழக்கறிஞர்கள் அ.ராஜகண்பதி, மு.பூபால், ஆசிரியர்கள் நவா.ஏழுமலை, க.சாரதி, நடத்துனர் ஏழுமலை, ஓவியர் சங்கர்,

ஆ.வெங்கடேசன், இரா.முருகப்பன், வை.கருணாநிதி, த.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.