Friday, May 17, 2013

ஆங்கில வழிக்கல்வி வேண்டாம்: மக்கள் கல்வி கூட்டமைப்பு கோரிக்கை


தமிழகத்தில் அரசு ஆரம்ப பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி ஆரம்பிக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என்று மக்கள் கல்வி கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
 இந்த அமைப்பின் கூட்டம் விழுப்புரம் சாந்தி நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அந்தோணி குரூஸ் தலைமை வகித்தார். பேராசிரியர் பிரபா.கல்விமணி, கல்வியாளர்கள் முத்துக்குமரன், முருகப்பன், தமிழ்வேங்கை, ரவிகார்த்திகேயன் உள்பட பலர் பங்கேற்றனர்.
 இக் கூட்டத்தில், அரசு ஆங்கில வழிப்பள்ளியை அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய இரு வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு நடத்த வேண்டும், கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்களுக்கு 25 சதவீத இடங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுவதால், அவர்களிடம் கல்லூரி நிர்வாகங்கள் முன் கூட்டியே பணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும், மத்திய அரசு நடத்தும் தேர்வுகள் தமிழிலும் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக் கோரிக்கைகளை வலியுறுத்தி இம் மாத இறுதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்
 பட்டது.



No comments: