Tuesday, December 30, 2008

காதல் கல்யாணமா... குடும்ப அட்டை கிடையாது


விழுப்புரம் அருகே உள்ள அனந்தபுரத்தை அடுத்துள்ள பனைமலை மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மாரி. இவர் பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர். மேலும், இவர் அன்னியூர் அரசு மேனிலைப் பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். கடந்த 01.02.2007 அன்று பனைமலைபேட்டை கிராமத்தைச் சேர்ந்த ரேகா என்கிறவரை சீர்திருத்த முறையில் திருமணம் செய்துகொண்டார். இது ஒரு காதல் திருமணமாகும்.


கடந்த இரண்டு வருடங்களாக குடும்ப அட்டைக்காக தொடர்ந்து அலைந்துகொண்டிருகிறார்கள். குடிமைப் பொருள் வட்டாட்சியரை 32 முறை நேரில் சந்தித்து இருவரும் அனைத்து ஆதாரங்களையும் தந்தபின்பும் குடும்ப அட்டை தர மறுத்துள்ளார்கள். பெற்றோரின் குடும்ப அட்டையில் உள்ள ரேகாவின் பெயரை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். காதல் திருமணத்தில் பெண்ணின் பெற்றோர்களுக்கு உடன்பாடில்லை என்பதால் அதற்கான வாய்ப்பில்லை என்பதை தெரிவித்துள்ளார்கள். ஆனாலும் அதிகாரிகள் அலட்சியப்படுத்தியே வந்துள்ளார்கள்.


இந்நிலையில்தான் கணவன், மனைவி இருவருக்கும் கலப்புத் திருமண தம்பதிகள் என்பதற்காக அரசு தந்துள்ள பாராட்டு பத்திரம், தங்களின் திருமண பதிவுச் சான்று, அரசின் உதவித் தொகையின் வைப்பு நிதிச்சான்று ஆகியவைகளை, ‘‘தங்களுக்கு குடும்ப தர மறுக்கின்ற நிலையில் அரசின் இந்த அங்கிகாரப்பத்திரங்களும் தேவையில்லை’’ என நேற்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் திருப்பி தந்துள்ளார்கள். மாவட்ட ஆட்சியர் வாங்க மறுத்து சமாதானப்படுத்தி, 15 நாட்களில் குடும்ப அட்டை தருவதாக வாக்களித்துள்ளார்.
பழங்குடி இருளர்கள் சாதி சான்றுக்கு மட்டுமில்லாமல், குடும்ப அட்டைக்கும் கூட கால காலமாய் போராட வேண்டியுள்ளது.

2 comments:

Anonymous said...

என்ன இது அநியாயம்?

Tamil Home Recipes said...

வேதனை.