Monday, November 12, 2018

மருத்துவர் வே.மணி - நீங்காத நினைவுகளுடன் அஞ்சலிகள்...

பகுத்தறிவுக் கருத்துக்களை பரப்புவதில் முனைப்புடன் இருந்ததைப் போன்றே, கடைப்பிடிப்பதிலும் உறுதியாக இருந்தவர். கடந்த ஓராண்டாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார். ஏப்ரல் மாதம் நடைபெற்ற பள்ளி ஆண்டுவிழாவில் பங்கேற்க வந்த தோழர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்களை பள்ளி வாயிலில் நின்று வரவேற்று அழைத்து வந்தார். விழாவில் குழந்தைகளுக்கு பரிசினை வழங்கி பாராட்டினார். இதுதான் பள்ளியில் பங்கேற்ற கடைசி நிகழ்வாக இருக்குமென்று நினைக்கின்றேன். உடல்நிலை சரியில்லாமல் திடீரென 3 ஆம் தேதி மறைவுற்றார். யாரும் நினைத்துக்கூட பார்க்கமுடியாத மரணம். திராவிடர் கழகத்திலும் தீவிரமாய உறுதியாய் செயல்பட்டு வந்தவர். மறுநாள் 4-ஆம் தேதி நடைபெற்ற இறுதிச் சடங்கில் எந்தவித மதச் சடங்குகளும் கடைபிடிக்கப்படாமல் நினைவேந்தல் நிகழ்வுடன் நடைபெற்றது. 

பள்ளியின் மதிய உணவுத் திட்டத்திற்கு ஆலோசகராகவும், பெரும் நன்கொடையாளர்களை பள்ளியின் ஆதரவாளராகவும் மாற்றியவர் ஆகும். பெரியாரிய பற்றாளர். 

திண்டிவனம் வருகை தந்திருந்த புனிதப்பாண்டியன் அவர்களிடம் அம்பேத்கர் அவர்களின் ’நான் இந்துவாகச் சாகமாட்டேன்” நூலை கையெழுத்திட்டுப் பெற்றார். 
மறைந்த மருத்துவரின் பணிகளும், 

செயல்பாடுகளும் அவரின் நினைவுகளைப் போற்றும்.
நீங்காத நினைவுகளுடன் அஞ்சலிகள்...









No comments: