Friday, July 30, 2010

திண்டிவனம் புனித பிலோமினாள் பள்ளியில் : மாணவி இந்துமதி தற்கொலை




திண்டிவனம் புனித பிலோமினாள் பள்ளியிலிருந்து 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் இடைநிறுத்தம்
7-ஆம் வகுப்பு மாணவி இந்துமதி தற்கொலை.
திண்டிவனம் சஞ்சீவிராயன்பெட்டையில், கணவனை இழந்த அமுதா தனது மகள் இந்துமதியுடன் வசித்து வந்தார். வாரச்சந்தைகளில் மளிகைப்பொருட்களை விற்கும் கூலி வேலை செய்து மகளை படித்து வைத்து வருகிறார். 1-ஆம் வகுப்பிலிருந்து திண்டிவனத்தில் உள்ள புனித பிலோமினாள் பள்ளியில் படித்துவந்தார் இந்துமதி. ளுடல் நிலை சரியில்லாத காரணத்தினால் இந்துமதி அரையாண்டுத்தேர்வின் போது இரண்டு தேர்வுகளை எழுதவில்லை. பின்பு பள்ளி நிர்வாகம் அந்த இரண்டு தேர்வுகளையும் இந்துமதிக்கு தனியாக நடத்தியுள்ளது. இந்துமதியும் சிறப்பாக நடத்தியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 10-05-10 அன்று மாலை 5-00 மணிக்கு அஞ்சலக ஊழியர் பள்ளியிலிருந்து வந்த கடிதத்தை வீட்டில் இருந்த இந்துமதியிடம் கொடுத்துள்ளார். இக்கடித்ததில் ‘‘தங்கள் மகள் 5 பாடங்களிலும் தேர்ச்சி பெறாத காரணத்தினால், பள்ளியில் இடம் இல்லை. எனவே பள்ளியில் வந்து டி.சி&யை பெற்றுச் செல்லவும்’’ என்று எழுதப்படிருந்துள்ளது.
இதைப் பார்த்த இந்துமதி உடனடியாக மனம்வெறுத்து வீட்டில், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். குழந்தையின் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்த தாயின் வேதனைகளுக்கு பள்ளி நிர்வாகம் கொஞ்சமும் கருணை காட்டவில்லை.
புனித பிலோமினாள் பள்ளி தலைமை ஆசிரியர் சகோதரி அமலி அவர்களின் கடிதம் 2009&ஆம் கொண்டுவரப்பட்ட இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் பிரிவு 16&க்கு எதிரானதாகும். இந்துமதியின் தாயார் அமுதா அதிகாரிகள் அனைவருக்கும் புகார் எழுதியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில்தான் பள்ளியின் இந்தக் கொடூர நடவடிக்கையை கண்டித்து கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டிவனம் நகரக்கல்வி மக்கள் மேம்பாட்டுக்குழு சார்பில் இன்று
30-07-10 காலை திண்டிவனத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகள் :
1. இறந்துபோன மாணவி இந்துமதியின் தாயார் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு, பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் மீது உடனடியாக குற்றவியல் வழக்குப் பதிவு செய்து, உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவேண்டும்.
2. இறந்துபோன மாணவி இந்துமதியின் குடும்பத்திற்கு உடனடியாக ரூ.500000/& ரூபாய் நட்ட ஈடு வழங்க வேண்டும்.
3. கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டதிற்குப் புறம்பாக மாணவிகளை இடைநிறுத்தம் செய்து, பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட அனைத்து மாணவிகளையும், மீண்டும் அதே பள்ளியில் சேர்த்து, அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சியளிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

No comments: