Monday, September 8, 2008

முதன்முதலாக ரயிலைப் பார்த்த மாணவர்கள்

என்ன படிப்பது? எப்படிப் படிப்பது? எப்படித் தேர்வெழுதுவது? என்ன படித்தால் எந்த வேலைக்குப் போகலாம்? போன்றவை பற்றி தெரியாமல் கிராமப்புறங்களில் எத்தனையோ மாணவர்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதேனும் ஒருவகையில் உதவ வேண்டும் என்பதே "வாழை'யின் நோக்கம். மாணவர்களுக்குப் புத்தகம் வாங்கித் தருவது, ஜாமென்ட்ரி பாக்ஸ் வாங்கித் தருவது போன்ற உதவிகளை யார் வேண்டுமானாலும் செய்துவிட முடியும். அவர்களுக்காக நேரத்தை ஒதுக்குவது என்பதுதான் எல்லாராலும் முடியாது. எனவே திவ்யா தனது மாணவியுடன், அமுதரசன், ரமேஷ், "இன்று வாழ்க்கையில் இவ்வளவு துன்பப்படுவதற்குக் காரணம், சிறிய வயதில் எனக்கு வழிகாட்ட சரியான ஆள் யாரும் இல்லை' என்று புலம்புபவரா நீங்கள்? பள்ளிப் படிப்பை முடிக்கும் தருணத்தில் சரியான வழிகாட்டியிருந்திருந்தால் நான் என்னவெல்லாமோ படித்து எங்கேயோ இருந்திருப்பேன் என்று ஏக்கப் பெருமூச்சு விடுபவரா நீங்கள்? உங்களுடைய ஏக்கமும் பெருமூச்சும் நூற்றுக்கு நூறு சரிதான். ஆனால் அதற்காக இப்போது புலம்புவதால் என்ன பயன்? உங்களைப் போலவே வழிகாட்டியில்லாமல் திசைமாறிப் போகும் இன்றைய இளந்தலைமுறையினருக்கு நீங்கள் வழிகாட்டலாமே? வருங்காலத்தில் அவர்களாவது நன்றாக இருப்பார்களே? இந்த எண்ணம் உங்களுக்குத் தோன்றுகிறதோ, இல்லையோ ஐடி தொழிலகங்களில் கைநிறையச் சம்பாதிக்கும் சில இளைஞர்களுக்குத் தோன்றியிருக்கிறது. அவர்கள் எல்லாரும் அவர்கள் குடும்பத்தில் முதல்தலைமுறையாக பட்டப் படிப்பு முடித்தவர்கள். இந்த நல்ல நிலைக்கு வருவதற்கு "யாம் பட்ட துன்பம் இவ்வையகம் படக்கூடாது' என்ற உயர்ந்த எண்ணத்துடன் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு வழிகாட்டியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். "வாழை' என்கிற பெயரில் அவர்கள் நடத்தும் அமைப்பு இத்தகைய வழிகாட்டுதலை அளித்துக் கொண்டிருக்கிறது.
வாழை அமைப்பைச் சேர்ந்த இளைஞர் பாரதிராஜனிடம் அவர்களுடைய அரிய பணியைப் பற்றி பேசினோம்.
""எனது சொந்த ஊர் திண்டிவனம். எங்களுடைய குடும்பத்தில் நான்தான் முதல் தலைமுறை பட்டதாரி. நான் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் படித்தேன். அங்குள்ள எனது நண்பர்கள் மூலமாக ஞானவேல் நாங்கள் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு நேரம் ஒதுக்கி அவர்களுடன் பழகி அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று முடிவு செய்தோம். நாங்கள் எல்லாரும் சென்னை, பெங்களூர், கரூர் போன்ற நகரங்களில் வேலை செய்பவர்கள். எப்படி கிராமப்புற மாணவர்களுக்கு உதவுவது? என்ற கேள்வி எழுந்தது.
தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் தாலுகாவில் உள்ள நெருப்பூர், சின்ன வத்தலாபுரம், செல்லமுடி ஆகிய மூன்று கிராமப் பள்ளிகளிலிருந்து முதன் முதலாக 15 மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு வாழ்வியல் வழிகாட்டுவது என்று "வாழை' முடிவு செய்தது. இப்போது 60 மாணவர்கள் உள்ளனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் ஒருவருக்கு ஒரு வழிகாட்டி வீதம் எங்களை நாங்கள் நியமித்துக் கொண்டோம். அந்த மாணவருடன் 15 நாளுக்கு ஒருமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவோம். வாரத்திற்கு ஒருமுறை கடிதத் தொடர்பு கொள்வோம். மூன்று மாதத்திற்கு ஒருமுறை சனி, ஞாயிறுகளில் இரண்டுநாள் பயிற்சிப் பட்டறைகளை அவர்களுடைய கிராமத்திற்குச் சென்று நடத்துவோம்.
மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு நாங்கள் சில வழிமுறைகளைப் பின்பற்றுகிறோம். முதலில் அந்த மாணவர் அவர்கள் குடும்பத்தில் முதல்தலைமுறையாகப் படிப்பவராக இருக்க வேண்டும். அவர்களுக்கு கல்வி கற்பதற்கும், வழிநடத்துவதற்கும் யாரும் இருக்கக் கூடாது. தூரத்து உறவினர் கூட இருக்கக் கூடாது.
நாங்கள் தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் மாணவிகளின் எண்ணிக்கையும் சம அளவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வழிகாட்டி. மாணவிக்கு பெண் வழிகாட்டி என்றெல்லாம் முடிவு செய்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். முதன்முதலில் ஒரு மாணவனை ஒரு வழிகாட்டி சந்திக்கும் போது ஆசிரியர் - மாணவர் உறவுதான் இருக்கும். மாணவனுக்குக் கூச்சம் அதிகம் இருக்கும். இடைவெளி இருக்கும். ஆனால் இரண்டு மாதங்களுக்குள்ளேயே அண்ணன் - தம்பி உறவு ஏற்பட்டுவிடும்.
நாங்கள் தேர்ந்தெடுத்த கிராமப் பகுதிகளில் மாணவர்கள் பள்ளிப் படிப்பைத் தாண்டுவதேயில்லை. அவர்களின் பெற்றோர் வேலை தேடி வெளியூர்களுக்குச் சென்றுவிட பெரும்பாலும் பிள்ளைகளும் முதியவர்களும்தான் வீட்டில் இருக்கிறார்கள். இதனால் பெண் பிள்ளைகள் என்றால் வீட்டைப் பார்த்துக் கொள்கிறார்கள். அவர்களை இளம் வயதிலேயே திருமணம் செய்து கொடுத்துவிடுகிறார்கள். மாணவர்கள் பெரும்பாலும் எட்டாவது வகுப்பைத் தாண்டுவதில்லை. ஆடு மேய்க்கப் போய்விடுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலை உள்ள கிராமங்களில் எட்டாவது படிக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுடைய பத்தாவது வகுப்பு வரையிலும் அதற்குப் பின்பு என்ன படிப்பது என்பதற்கும் வழிகாட்டுகிறோம். அவர்களுடைய பல்வேறு திறன்களை வளர்ப்பது, அவர்கள் பிறருடன் சிறந்த முறையில் தகவல் தொடர்பு கொள்ளும் திறனை வளர்ப்பது, தமிழ், ஆங்கில மொழித் திறனை வளர்ப்பது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தருகிறோம். இதற்காக நாங்கள் நடத்தும் பயிற்சிப் பட்டறைகளைப் பயன்படுத்துகிறோம். அதில் நாடகப் பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி போன்றவற்றைத் தருகிறோம். மாணவர்களுக்காக மருத்துவ முகாம்களையும் நடத்துகிறோம். கடந்த ஆண்டு வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் 3 நாள் பயிற்சிப் பட்டறை நடத்தினோம். அங்கே வந்திருந்த மாணவர்களில் சிலர் அப்போதுதான் முதன்முறையாக ரயிலைப் பார்த்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
நகர்ப்புறங்களிலேயே செஸ் விளையாட்டு இன்று பரவலாக அறிமுகமாகவில்லை. நாங்கள் எங்கள் மாணவர்களுக்கு செஸ் விளையாடக் கற்றுக் கொடுத்தோம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக "டென்த் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் நான், கவிதா, பிரவீணா, விஸ்வேஸ்வரன், அம்பலவாணன், பொன்ராஜ் ஆகியோரைக் கொண்ட குழுவை உருவாக்கினோம். அந்தக் குழு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் சிறப்புக் கவனம் செலுத்தியது. அறிவியல், கணக்கு ஆகிய பாடங்களை மாணவர்கள் எளிதாகப் பயில வழிகாட்டியது. கணக்கு என்றால் பயப்படும் மாணவர்களுக்குக் கணக்கில் ஆர்வத்தை ஊட்டியது. இதன் விளைவாக பின்தங்கிய அந்தக் கிராமப்புற மாணவர்களில் சிலர் ஐந்நூறுக்கு 421 என்றும் 417... 391... 386... என்றும் மதிப்பெண்கள் எடுத்தனர். அவர்கள் எடுத்த மதிப்பெண்களுக்கு ஏற்ப அவர்கள் என்ன படிப்பு படிக்கலாம் என்று ஆலோசனை சொன்னோம். அதில் இரண்டு மாணவர்களை கிருஷ்ணகிரி பாலிடெக்னிக்கில் சேர்த்து ட்ரிபிள் இ படிக்க வைக்கிறோம். அதற்கான செலவுகளை எங்கள் "வாழை'யே ஏற்றுக் கொள்கிறது. இதற்கான தொகையை நன்கொடை மூலமாகவே பெறுகிறோம். "இவ்வாறு மாணவர்களைப் படிக்க வைக்க நிதி தேவைப்படுகிறது. முடிந்த நண்பர்கள் உதவுங்கள்' என்று இ மெயில் அனுப்பினோம். பல நண்பர்கள் மாதந்தோறும் நிதியளிக்க ஒப்புக் கொண்டார்கள்.
வாழை ஆரம்பித்தது முதலே எங்களுடைய ஆலோசகர்களாக பத்திரிகையாளர் ஞாநி, மனநல ஆலோசகர் பிருந்தா ஜெயராமன், மாஃபா பாண்டியராஜன், ஜெகத் கஸ்பார், நம்பி ஆருரன் போன்றவர்கள் உள்ளனர்.
நாங்கள் நடத்திய மருத்துவமுகாமிற்கு டாக்டர் சுரேந்திரன் தலைமையிலான மருத்துவர் குழு வந்து உதவுகின்றனர். வரும் ஆண்டில் விழுப்புரத்துக்கு அருகே உள்ள அன்னியூரில் உள்ள மாணவர்களுக்கு வழிகாட்ட இருக்கிறோம். எட்டாம் வகுப்பிலிருந்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்ததற்குப் பதிலாக ஆறாம் வகுப்பிலிருந்தே மாணவர்களைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம்.
எங்களுக்கு ஒவ்வொருவரும் அவர்களுக்கு முடிந்தவிதத்தில் உதவ முடியும். நிதி தர முடிந்தவர்கள் நிதி தரலாம். எங்களுடன் இணைந்து வழிகாட்டியாகச் செயல்படலாம். குறிப்பாக மாணவிகளுக்கு வழிகாட்ட பெண் வழிகாட்டிகள் கிடைப்பது எங்களுக்குச் சிரமமாக உள்ளது. இவை தவிர, "வாழை'யின் அன்றாட செயற்பாடுகளில் தன்னால் முடிந்த வேலைகளை ஒருவர் செய்து தரலாம்.'' இது ஊர் கூடி இழுக்கும் தேர் அல்லவா?
(நன்றி : ந.ஜீவா, தினமணிக்கதிர்)

No comments: